Skip to main content

காலமானார் கால்பந்து ஜாம்பவான் பீலே | ஊழியர்களுக்கு எலான் மஸ்க் அட்வைஸ் - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில், நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் தவிப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஐ.நா-வின் முக்கிய தலைவர் மார்டின் கிரிஃபித்ஸ் (Martin Griffiths), ஆப்கானிஸ்தான் சென்று அங்குள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. டெஸ்லாவின் பங்குகள் தொடர்ந்து சரிந்த நிலையில் இருப்பதால், அது குறித்து கவலைப்பட வேண்டாம் என ஊழியர்களுக்கு எலான் மஸ்க் அறிவுரை வழங்கியிருக்கிறார். இரானில் மாசா அமினிக்கு ஆதரவாக நடந்துவரும் போராட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு அரசு மரண தண்டனை விதிப்பதை நிறுத்த வேண்டும் என இரான் அரசுக்கு இத்தாலி கண்டனம் தெரிவித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று காணொளி காட்சி வாயிலாகச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.பீலே பிரேசில் நாட்டைச் சேர்ந்த, கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார். மூன்று முறை உலகக்கோப்பையை வென்ற பீலே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்போடியா நாட்டில் காசினோ ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர், மேலும் 30 பேர் மாயமாகியிருக்கின்றனர். கொரோனா பரவல் எதிரொலியாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், தைவான், இத்தாலி, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து உட்பட உலகின் பல நாடுகளில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 180 மில்லியன் டாலர் மதிப்பிலான பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை தைவானுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இங்கிலாந்தின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் வியென்னே வெஸ்ட்வுட் (Vivienne Westwood) 81 வயதில் காலமானார்.
http://dlvr.it/Sg9yNs

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...