Skip to main content

காலமானார் கால்பந்து ஜாம்பவான் பீலே | ஊழியர்களுக்கு எலான் மஸ்க் அட்வைஸ் - உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில், நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் இருளில் தவிப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஐ.நா-வின் முக்கிய தலைவர் மார்டின் கிரிஃபித்ஸ் (Martin Griffiths), ஆப்கானிஸ்தான் சென்று அங்குள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. டெஸ்லாவின் பங்குகள் தொடர்ந்து சரிந்த நிலையில் இருப்பதால், அது குறித்து கவலைப்பட வேண்டாம் என ஊழியர்களுக்கு எலான் மஸ்க் அறிவுரை வழங்கியிருக்கிறார். இரானில் மாசா அமினிக்கு ஆதரவாக நடந்துவரும் போராட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு அரசு மரண தண்டனை விதிப்பதை நிறுத்த வேண்டும் என இரான் அரசுக்கு இத்தாலி கண்டனம் தெரிவித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று காணொளி காட்சி வாயிலாகச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.பீலே பிரேசில் நாட்டைச் சேர்ந்த, கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார். மூன்று முறை உலகக்கோப்பையை வென்ற பீலே, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்போடியா நாட்டில் காசினோ ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர், மேலும் 30 பேர் மாயமாகியிருக்கின்றனர். கொரோனா பரவல் எதிரொலியாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், தைவான், இத்தாலி, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து உட்பட உலகின் பல நாடுகளில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 180 மில்லியன் டாலர் மதிப்பிலான பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை தைவானுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இங்கிலாந்தின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் வியென்னே வெஸ்ட்வுட் (Vivienne Westwood) 81 வயதில் காலமானார்.
http://dlvr.it/Sg9yNs

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...