Skip to main content

ரூ.70 லட்சம் மதிப்பு; உயர் ரக பைக்குகள் விற்பனை... டீலருக்கே டிமிக்கி கொடுத்த பைக் ஷோரூம் ஊழியர்கள்!

ராணிப்பேட்டை வக்கீல் தெருவைச் சேர்ந்த வேதாராம் என்பவர் வேலூர் சாய்நாதபுரம் பகுதியில் ‘யமஹா’ ஷோ ரூம் நடத்திவருகிறார். இதன் கிளை ஷோ ரூம்கள் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகிலும், காட்பாடி, ராணிப்பேட்டை பகுதிகளிலும் செயல்பட்டுவருகின்றன. இவரின் காட்பாடி ஷோ ரூம் விற்பனைப் பிரிவில் பணிபுரிந்துவந்த வரகூர் புதூரைச் சேர்ந்த பொற்செல்வன், சாய்நாதபுரம் விக்னேஷ், வண்டறந்தாங்கல் பிரசாந்த், கணியம்பாடி தினேஷ்குமார் ஆகிய நால்வரும் கூட்டுச் சேர்ந்து, டீலர் வேதாராமுக்கே தெரியாமல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நவம்பர் 11-ம் தேதி வரை 40 உயர் ரக பைக்குகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த டூ வீலர்கள் அனைத்துமே அதிக விலையுடையவை. மொத்தமாகப் பணம் கொடுத்து, வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். வழக்கில் தொடர்புடைய டூ வீலர்கள் இப்படி, 40 டூ வீலர்களுக்கும் வசூலித்த சுமார் ரூ.70 லட்சத்தை ஷோ ரூம் நிறுவன வங்கிக் கிளையில் செலுத்தாமல், கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. மோசடியை மறைக்க போலி பில் தயாரித்தும், கணக்கு காட்டிவந்திருக்கிறார்கள். டூ வீலர்களை வாங்கிச் சென்றவர்கள் பதிவு எண் மற்றும் இன்ஷூரன்ஸ் பெற முடியாத நிலை ஏற்பட்டதால், மீண்டும் காட்பாடி ஷோ ரூமை முற்றுகையிட்டு, கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதன் பின்னரே, கையாடல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இது பற்றி, சமீபத்தில் வேலூர் மாவட்ட குற்றப் பிரிவுப் போலீஸில் டீலர் வேதாராம் புகாரளித்தார். அதன்பேரில், குற்றச்சாட்டுக்கு ஆளான பிரசாந்த், தினேஷ்குமார், விக்னேஷ் ஆகிய மூன்று பேரையும் சில தினங்களுக்கு முன்னரே போலீஸார் கைதுசெய்துவிட்டனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் கருதப்படும் பொற்செல்வன் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பிடிக்கவும் போலீஸார் தீவிரம் காட்டிவருகிறார்கள். இது குறித்து, குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் கேட்டபோது, ‘‘ஏ-1, அதாவது முதல் குற்றவாளி சிக்கினால் மட்டுமே, அவர்கள் கையாடல் செய்த ரூ.70 லட்சமும் என்னவானது எனத் தெரியவரும். தற்போதுவரை நடத்திய விசாரணையில் அந்தப் பணத்தை முழுவதுமாகச் செலவழித்துவிட்டதாகவே பிடிபட்ட மூன்று பேரும் சொல்கிறார்கள். வழக்கு விசாரணையிலும் முன்னேற்றம் ஏதுமில்லை’’ என்றார். கைதுசெய்யப்பட்ட நபர்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட புதிய டூ வீலரை வாங்கிப் பரிதவிக்கும் அரசுப் பணியாளர் ஒருவரிடம் பேசினோம். ‘‘நான், கடந்த அக்டோபர் 15-ம் தேதி ரொக்கமாகப் பணம் செலுத்தி பைக்கை வாங்கினேன். தற்போது வரை பதிவு எண் பெற முடியவில்லை. வழக்கில் தொடர்புடைய வாகனம் என்பதால், காவல்துறையினரும் விசாரணை என்ற பெயரில் அழைத்து அலைக்கழிக்கிறார்கள். பைக்கை எடுத்தபோது, இந்த மோசடிப் பேர்வழிகள் சர்வர் சரியில்லை; அது சரியில்லை என்று ஏதேதோ காரணம் சொல்லிக் காலம் கடத்தினார்கள். இப்போது, பதிவு எண், இன்ஷூரன்ஸ் என வண்டிக்குரிய ஒரு ஆவணத்தைக்கூடப் பெற முடியவில்லை. நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னைப் போன்றுதான் மற்ற டூ வீலர்களை வாங்கியவர்களும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார்.மோதிய டூ வீலர்; பற்றியெரிந்த அரசு பஸ்... பிறந்தநாளில் தீயில் கருகிய மாணவன் - திண்டுக்கலில் சோகம்
http://dlvr.it/Sg7bhW

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...