Skip to main content

ரூ.70 லட்சம் மதிப்பு; உயர் ரக பைக்குகள் விற்பனை... டீலருக்கே டிமிக்கி கொடுத்த பைக் ஷோரூம் ஊழியர்கள்!

ராணிப்பேட்டை வக்கீல் தெருவைச் சேர்ந்த வேதாராம் என்பவர் வேலூர் சாய்நாதபுரம் பகுதியில் ‘யமஹா’ ஷோ ரூம் நடத்திவருகிறார். இதன் கிளை ஷோ ரூம்கள் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகிலும், காட்பாடி, ராணிப்பேட்டை பகுதிகளிலும் செயல்பட்டுவருகின்றன. இவரின் காட்பாடி ஷோ ரூம் விற்பனைப் பிரிவில் பணிபுரிந்துவந்த வரகூர் புதூரைச் சேர்ந்த பொற்செல்வன், சாய்நாதபுரம் விக்னேஷ், வண்டறந்தாங்கல் பிரசாந்த், கணியம்பாடி தினேஷ்குமார் ஆகிய நால்வரும் கூட்டுச் சேர்ந்து, டீலர் வேதாராமுக்கே தெரியாமல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நவம்பர் 11-ம் தேதி வரை 40 உயர் ரக பைக்குகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த டூ வீலர்கள் அனைத்துமே அதிக விலையுடையவை. மொத்தமாகப் பணம் கொடுத்து, வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். வழக்கில் தொடர்புடைய டூ வீலர்கள் இப்படி, 40 டூ வீலர்களுக்கும் வசூலித்த சுமார் ரூ.70 லட்சத்தை ஷோ ரூம் நிறுவன வங்கிக் கிளையில் செலுத்தாமல், கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. மோசடியை மறைக்க போலி பில் தயாரித்தும், கணக்கு காட்டிவந்திருக்கிறார்கள். டூ வீலர்களை வாங்கிச் சென்றவர்கள் பதிவு எண் மற்றும் இன்ஷூரன்ஸ் பெற முடியாத நிலை ஏற்பட்டதால், மீண்டும் காட்பாடி ஷோ ரூமை முற்றுகையிட்டு, கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதன் பின்னரே, கையாடல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இது பற்றி, சமீபத்தில் வேலூர் மாவட்ட குற்றப் பிரிவுப் போலீஸில் டீலர் வேதாராம் புகாரளித்தார். அதன்பேரில், குற்றச்சாட்டுக்கு ஆளான பிரசாந்த், தினேஷ்குமார், விக்னேஷ் ஆகிய மூன்று பேரையும் சில தினங்களுக்கு முன்னரே போலீஸார் கைதுசெய்துவிட்டனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் கருதப்படும் பொற்செல்வன் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பிடிக்கவும் போலீஸார் தீவிரம் காட்டிவருகிறார்கள். இது குறித்து, குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் கேட்டபோது, ‘‘ஏ-1, அதாவது முதல் குற்றவாளி சிக்கினால் மட்டுமே, அவர்கள் கையாடல் செய்த ரூ.70 லட்சமும் என்னவானது எனத் தெரியவரும். தற்போதுவரை நடத்திய விசாரணையில் அந்தப் பணத்தை முழுவதுமாகச் செலவழித்துவிட்டதாகவே பிடிபட்ட மூன்று பேரும் சொல்கிறார்கள். வழக்கு விசாரணையிலும் முன்னேற்றம் ஏதுமில்லை’’ என்றார். கைதுசெய்யப்பட்ட நபர்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட புதிய டூ வீலரை வாங்கிப் பரிதவிக்கும் அரசுப் பணியாளர் ஒருவரிடம் பேசினோம். ‘‘நான், கடந்த அக்டோபர் 15-ம் தேதி ரொக்கமாகப் பணம் செலுத்தி பைக்கை வாங்கினேன். தற்போது வரை பதிவு எண் பெற முடியவில்லை. வழக்கில் தொடர்புடைய வாகனம் என்பதால், காவல்துறையினரும் விசாரணை என்ற பெயரில் அழைத்து அலைக்கழிக்கிறார்கள். பைக்கை எடுத்தபோது, இந்த மோசடிப் பேர்வழிகள் சர்வர் சரியில்லை; அது சரியில்லை என்று ஏதேதோ காரணம் சொல்லிக் காலம் கடத்தினார்கள். இப்போது, பதிவு எண், இன்ஷூரன்ஸ் என வண்டிக்குரிய ஒரு ஆவணத்தைக்கூடப் பெற முடியவில்லை. நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னைப் போன்றுதான் மற்ற டூ வீலர்களை வாங்கியவர்களும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார்.மோதிய டூ வீலர்; பற்றியெரிந்த அரசு பஸ்... பிறந்தநாளில் தீயில் கருகிய மாணவன் - திண்டுக்கலில் சோகம்
http://dlvr.it/Sg7bhW

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...