Skip to main content

கோவிட்: பீதியில் தொடங்கி பிஎஃப்7-ல் நிறைவடைந்த 2022!

உலகம் உருண்டை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியான கொரோனா வைரஸ். கோவிட் பாதிப்பை பொறுத்தவரையில் தொடங்கிய இடத்துக்கே அது மீண்டும் வந்துள்ளது.

2020-ம் ஆண்டு உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் மெள்ள கொண்டு வரத் தொடங்கியது கொரோனா வைரஸ். 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் ஏற்பட்ட அலைகள் உலகளவில் கோடிக்கணக்கானவர்களை பாதித்ததோடு, லட்சக்கணக்கில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. தடுப்பூசிகளின் வரவாலும், ஏற்கெனவே நோய் பாதித்ததால் உருவான நோய் எதிர்ப்பு சக்தியாலும், வைரஸின் வீரியம் குறைந்து காணப்பட்டதாலும் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை மெள்ள குறையத் தொடங்கியது.

கோவிட்

2022-ம் ஆண்டு தொடங்கியபோதே இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் பரவலாகக் காணப்பட்டது. இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய டெல்டா மற்றும் புதிய வரவான ஒமிக்ரான் வேரியன்ட்டும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தன. 2021-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட, பலமுறை உருமாறிய ஒமிக்ரான் என்ற வைரஸ் பரவத் தொடங்கியது. ஒமிக்ரானுக்கு பரவும் தன்மை அதிகமாக இருந்ததால் பிற வேரியன்டுகளைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து அந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு பதிவானது. இதனையடுத்து இந்தியாவில் மூன்றாம் அலை ஏற்படலாம் என்றும், ஒமிக்ரான் வேரியன்ட் குறித்த கணிப்புகளும், எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஜனவரி 6-ம் தேதி முதல், இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. ஆனால் முதல் இரண்டு அலைகளைக் காட்டிலும் ஒமிக்ரான் பாதிப்பால் ஏற்பட்ட மூன்றாம் அலையில் பாதிப்புகள் குறைவாகவே காணப்பட்டன. உயிரிழப்புகளும் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தன.

Covid-19 Vaccination

மூன்றாவது டோஸ்!

பாதிப்பு குறைவாக இருந்தாலும் நோய்ப்பரவல் தொடர்ந்து காணப்பட்டதால் மூன்றாம் டோஸ் கோவிட் தடுப்பூசி எடுக்க அரசு வலியுறுத்தி வந்தது. முதற்கட்டமாக முதியோர் மற்றும் முதல்நிலைப் பணியாளர்கள் அதனை எடுத்துக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் நோய் பாதிப்பு சற்று அதிகரித்து குறைந்தது. அதே சமயத்தில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மூன்றாம் அலை ஏற்படத் தொடங்கியிருந்தது. ஒமிக்ரான் BA.2, BA.4 மற்றும் BA.5 வேரியன்டுகளின் தாக்கம் காணப்பட்டன.

4-ம் அலை கணிப்பு

இந்தியாவில் கோவிட் 4-ம் அலை ஜூன் மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் மாத இறுதியில் உச்சம் தொடும் என்று ஐஐடி கான்பூர் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்தக் கணிப்பு மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனம் மூன்றாம் அலை குறித்த வெளியிட்டிருந்த கணிப்பு சரியாக இருந்ததால், நான்காம் அலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

3rd WAVE

அந்தச் சமயத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், ஒமிக்ரான் கொரோனா வைரஸின் இறுதி வேரியன்டாக இருக்காது. அடுத்தடுத்து அது உருமாறிக்கொண்டே இருக்கும். அப்படி உருமாறும் வைரஸானது அதீத தொற்றை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம். மேலும் தற்போது பரவும் உருமாறிய வைரஸானது முந்தைய வைரஸின் தன்மையைக் காட்டிலும் வேகமாகப் பரவும் வகையில் உள்ளது என்று எச்சரித்திருந்தது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை நான்காம் அலை ஏற்படவில்லை. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் BA.4 மற்றும் BA.5 வகை வைரஸ் பாதிப்பு காணப்பட்டது.

ஜூலை மாதம் முதல் இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளிலும் கோவிட் பாதிப்பு குறையத் தொடங்கியது. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கினர். பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் வலுவிழக்கத் தொடங்கின. பொதுமக்கள் மாஸ்க் அணிவதைத் தவிர்க்கத் தொடங்கினர். கோவிட் சிகிச்சைக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்ட சிகிச்சை மையங்கள், பராமரிப்பு மையங்களிலும் சில மாதங்களாக ஒரு நோயாளிகூட அனுமதிக்கப்படாத நிலை இருந்தது. ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை கோவிட் பாதிப்புகள் மிகக் குறைந்தே காணப்பட்டன.

கொரோனா பரிசோதனை

முதன் முதலில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கோவிட் தொற்று பரவத் தொடங்கியது. அந்த முறையைப் போன்றே 2022-ம் ஆண்டும் சீனாவில் டிசம்பர் மாதம் கோவிட் பரவல் தொடங்கியுள்ளது. ஒரு நாளில் மட்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஒமிக்ரானின் உருமாறிய பிஎஃப்7 வைரஸ் இந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையங்களில் ரேண்டம் முறையில் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

டிசம்பர் 24, 26 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வந்த சர்வதேச பயணிகளில் 6000 பேருக்கு ரேண்டம் முறையில் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டதில் 39 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து இந்த அறிவுறுத்தலை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அடுத்த 40 நாள்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

china

தமிழகத்தில் பிஎஃப்7 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பின் தீவிரம் அதிகளவில் இல்லை என்றும், நிலை குறித்து தொடர் கண்காணிப்பு செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

2022-ம் ஆண்டை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒமிக்ரான் பீதியில் தொடங்கி ஒமிக்ரான் பிஎஃப்7-ல் நிறைவடைந்திருக்கிறது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...