Skip to main content

புதுச்சேரி: புத்தாண்டுக்குக் குவியும் கூட்டம்; அறை வாடகையை 4 மடங்கு உயர்த்திய தனியார் விடுதிகள்

சுற்றுலா மாநிலமான புதுச்சேரி வருடம் முழுவதுமே சுற்றுலாப்பயணிகளால் நிறைந்து காணப்படும். பிரெஞ்சு கட்டடக்கலையையும், பிரெஞ்சு ஆளுநர்களின் பெயர்களையும் தாங்கி நிற்கும் வீதிகளைக் காண்பதற்கும், வீதிகள்தோறும் அணிவகுத்து நிற்கும் மதுக்கடைகளில் விதவிதமான மது வகைகளைச் சுவைத்துப் பார்க்கவும் பொதுமக்கள் வார இறுதி நாள்களில் புதுச்சேரியில் தஞ்சமடைந்துவிடுவார்கள். சில நாள்களுக்கு முன்பு தனியார் பயண ஏற்பாடு நிறுவனம் இணையத்தில் செய்த கணக்கெடுப்பில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இந்தியப் பயணிகளால் அதிகம் தேடப்படும் இடங்களில் புதுச்சேரி முதலிடம் பிடித்திருந்தது. அதனால் சுற்றுலாத்துறையும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும்விதமாக இசை, நடன நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டுக்குத் தயாராகிவருகிறது. அதேபோல தனியார் விடுதிகள், தங்கும் அறையுடன்கூடிய பார்களிலும் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.புதுச்சேரி இதைப் பயன்படுத்திக்கொண்ட தனியார் விடுதிகள், கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பிருந்தே, தங்களது அறை வாடகையைப் பல மடங்கு உயர்த்திவிட்டன எனக் கூறப்படுகிறது. மேலும் சில விடுதிகளில், `ஜனவரி 2-ம் தேதி வரை அறைகள் இல்லை' எனச் செயற்கையான தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றன எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. நகருக்குள் இருக்கும் சிறிய விடுதிகளில், சாதாரண நாள்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட நான்கு மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக, அண்ணாசாலையில் இருக்கும் சிறிய விடுதிகளில் சாதாரண நாள்களில் 24 மணி நேரத்துக்கு வசூலிக்கப்படும் வாடகை ரூ.2,500. ஆனால், அதே அறை தற்போது ’கிறிஸ்துமஸ் பேக்கேஜ்’ என்ற பெயரில் ரூ.8,000-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதிகளில் இரண்டு முதல் மூன்று மடங்குவரை அறை வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது. நகருக்குள் இருக்கும் நட்சத்திர விடுதிகளில் சதாரண நாள்களில் 12 மணி நேரத்துக்கு சுமார் ரூ.7,000 வசூலிக்கப்படும். அது தற்போது சுமார் ரூ.16,000 வரை உயர்த்தப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. விடுதிகளின் புதிய வாடகைப் பட்டியலைப் பார்த்து அதிர்ச்சியடையும் சுற்றுலாப்பயணிகள், புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதிகளான கோட்டக்குப்பம், சின்னமுதலியார் சாவடியிலிருக்கும் விடுதிகளை நோக்கிப் படையெடுத்துவருகிறார்கள். "புதுச்சேரி டு யாழ்ப்பாணம் - சொகுசு கப்பலில் ஜாலி டூர் போகலாம்!"- இலங்கை அமைச்சர் தகவல்
http://dlvr.it/Sg7bRV

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...