Skip to main content

புதுச்சேரி: புத்தாண்டுக்குக் குவியும் கூட்டம்; அறை வாடகையை 4 மடங்கு உயர்த்திய தனியார் விடுதிகள்

சுற்றுலா மாநிலமான புதுச்சேரி வருடம் முழுவதுமே சுற்றுலாப்பயணிகளால் நிறைந்து காணப்படும். பிரெஞ்சு கட்டடக்கலையையும், பிரெஞ்சு ஆளுநர்களின் பெயர்களையும் தாங்கி நிற்கும் வீதிகளைக் காண்பதற்கும், வீதிகள்தோறும் அணிவகுத்து நிற்கும் மதுக்கடைகளில் விதவிதமான மது வகைகளைச் சுவைத்துப் பார்க்கவும் பொதுமக்கள் வார இறுதி நாள்களில் புதுச்சேரியில் தஞ்சமடைந்துவிடுவார்கள். சில நாள்களுக்கு முன்பு தனியார் பயண ஏற்பாடு நிறுவனம் இணையத்தில் செய்த கணக்கெடுப்பில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இந்தியப் பயணிகளால் அதிகம் தேடப்படும் இடங்களில் புதுச்சேரி முதலிடம் பிடித்திருந்தது. அதனால் சுற்றுலாத்துறையும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும்விதமாக இசை, நடன நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டுக்குத் தயாராகிவருகிறது. அதேபோல தனியார் விடுதிகள், தங்கும் அறையுடன்கூடிய பார்களிலும் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.புதுச்சேரி இதைப் பயன்படுத்திக்கொண்ட தனியார் விடுதிகள், கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பிருந்தே, தங்களது அறை வாடகையைப் பல மடங்கு உயர்த்திவிட்டன எனக் கூறப்படுகிறது. மேலும் சில விடுதிகளில், `ஜனவரி 2-ம் தேதி வரை அறைகள் இல்லை' எனச் செயற்கையான தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றன எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. நகருக்குள் இருக்கும் சிறிய விடுதிகளில், சாதாரண நாள்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட நான்கு மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக, அண்ணாசாலையில் இருக்கும் சிறிய விடுதிகளில் சாதாரண நாள்களில் 24 மணி நேரத்துக்கு வசூலிக்கப்படும் வாடகை ரூ.2,500. ஆனால், அதே அறை தற்போது ’கிறிஸ்துமஸ் பேக்கேஜ்’ என்ற பெயரில் ரூ.8,000-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதிகளில் இரண்டு முதல் மூன்று மடங்குவரை அறை வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது. நகருக்குள் இருக்கும் நட்சத்திர விடுதிகளில் சதாரண நாள்களில் 12 மணி நேரத்துக்கு சுமார் ரூ.7,000 வசூலிக்கப்படும். அது தற்போது சுமார் ரூ.16,000 வரை உயர்த்தப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. விடுதிகளின் புதிய வாடகைப் பட்டியலைப் பார்த்து அதிர்ச்சியடையும் சுற்றுலாப்பயணிகள், புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதிகளான கோட்டக்குப்பம், சின்னமுதலியார் சாவடியிலிருக்கும் விடுதிகளை நோக்கிப் படையெடுத்துவருகிறார்கள். "புதுச்சேரி டு யாழ்ப்பாணம் - சொகுசு கப்பலில் ஜாலி டூர் போகலாம்!"- இலங்கை அமைச்சர் தகவல்
http://dlvr.it/Sg7bRV

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...