Skip to main content

கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த தைவான் அதிபர் | FIFA-வில் முதல் நாடாக வெளியேறிய கத்தார்

தைவான் அதிபர் சான்-இங் வென் உள்ளாட்சித் தேர்தலில் தனது கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இத்தாலியத் தீவான இஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்து, சுமார் 10 பேர் விபத்தில் சிக்கித் தேடப்பட்டு வருகின்றனர்.

சீனாவின் `ஐபோன்' சிட்டியான ஹெனான் மாகாணத்தின் தலைநகரிலிருந்து 870 தொழிலாளர்கள் முறையான அறிவிப்பின்றி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

China's iPhone City relocated 870 workers without notice in the capital of Henan province.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தலிபன்கள் நடத்தும்விதம், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களைத் தூண்டும் என்று ஐ.நா தெரிவித்திருக்கிறது.

ரஷ்யாவின் வாக்னர் குழு ஒரு வயலின் பெட்டியில் ரத்தம் தோய்ந்த ஒரு சுத்தியலை ஐரோப்பியப் யூனியனுக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் எல்-சிசி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

64 வயதான பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் விளாடிமர் மேக்கி காலமானார்.

2022 ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்தும் கத்தார், கால்பந்து போட்டியில் முதல் நாடாக வெளியேற்றப்பட்டது.

பிரபல பிளாஷ் டான்ஸ் பாடகியான ஐரீன் காரா தனது 63-ம் வயதில் காலமானார்.

இங்கிலாந்து ராணி

இரண்டாம் எலிசபெத் ராணி தனது கடைசிக் காலத்தில் எலும்பு புற்றுநோயை எதிர்த்துப் போராடியதாகத் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...