Skip to main content

FIFA World Cup 2022 Round Up: 68 விநாடியில் கோல் டு ஒரு கோல்; ஒரே நாளில் 6 மில்லியன் ஃபாலோவர்ஸ் வரை!

1. ஈரான் நாட்டில் ஹிஜாப் விவகாரம் காரணமாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க கால்பந்து வீரர் ஈரானின் தேசியக் கொடியை, இஸ்லாமிய குடியரசின் சின்னம் இல்லாமல் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். பின்னர் அந்தப் பதிவை நீக்கி உள்ளார். இதற்கு, ஈரானிய கால்பந்து கூட்டமைப்பு, அமெரிக்காவை 10 ஆட்டங்களில் இடைநீக்கம் செய்ய FIFA அமைப்பிடம் புகார் அளித்துள்ளது.

2. நேற்று அல் துமாமா மைதானத்தில், பெல்ஜியம் அணிக்கும் மொரோக்கோ அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி வெற்றி பெற்றது. வருகின்ற வியாழக்கிழமை கனடா அணியுடன் மொரக்கோ அணி மோதுகிறது, இப்போட்டியில் வெற்றி பெற்றால் 1986 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு மொரோக்கோ அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உருவாகும்.

3. கத்தார் உலகக் கோப்பையில், பிரேசில் அணி தனது தொடக்க ஆட்டமான செர்பியா அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மாருக்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக, அணியின் அடுத்தடுத்த போட்டிகளில் நெய்மர் விளையாடமாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்தது. நெய்மர் மீண்டும் பிரேசில் அணிக்காக விளையாட வருவார் என அணியின் வீரர்களும் பயிற்சியாளர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Richarlison

4. நேற்று முன்தினம், அர்ஜென்டினா அணிக்கும் மெக்சிகோ அணிக்கும் இடையேயான போட்டி லுசைல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது. இப்போட்டியை 88,966 பார்வையாளர்கள் கண்டுகளித்தனர், 1994 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டி பிறகு அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஆட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 1994 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பை இறுதி போட்டியை 90,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

Fans

5. கடந்த 25 ஆம் தேதி பிரேசில் அணிக்கும் செர்பியா அணிக்கும் இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் அசத்தலான கோலை அடித்தார். கால்பந்து ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இந்த கோலுக்கு பிறகு, ஒரே நாளில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு மில்லியன் ஃபாலோவர்ஸ் அதிகரித்துள்ளனர்.

6. நேற்று, குரூப் F பிரிவின் குரோஷியா அணியும் கனடா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி தொடங்கிய 68 ஆவது விநாடியில் கனடா வீரர் அல்போன்சா டேவிஸ் கோல் அடித்து அசத்தினார்.இந்த கோலே, நடைபெற்று வரும் 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக கோல் ஆகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...