Skip to main content

FIFA World Cup 2022 Round Up: 68 விநாடியில் கோல் டு ஒரு கோல்; ஒரே நாளில் 6 மில்லியன் ஃபாலோவர்ஸ் வரை!

1. ஈரான் நாட்டில் ஹிஜாப் விவகாரம் காரணமாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க கால்பந்து வீரர் ஈரானின் தேசியக் கொடியை, இஸ்லாமிய குடியரசின் சின்னம் இல்லாமல் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். பின்னர் அந்தப் பதிவை நீக்கி உள்ளார். இதற்கு, ஈரானிய கால்பந்து கூட்டமைப்பு, அமெரிக்காவை 10 ஆட்டங்களில் இடைநீக்கம் செய்ய FIFA அமைப்பிடம் புகார் அளித்துள்ளது.

2. நேற்று அல் துமாமா மைதானத்தில், பெல்ஜியம் அணிக்கும் மொரோக்கோ அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி வெற்றி பெற்றது. வருகின்ற வியாழக்கிழமை கனடா அணியுடன் மொரக்கோ அணி மோதுகிறது, இப்போட்டியில் வெற்றி பெற்றால் 1986 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு மொரோக்கோ அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உருவாகும்.

3. கத்தார் உலகக் கோப்பையில், பிரேசில் அணி தனது தொடக்க ஆட்டமான செர்பியா அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மாருக்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக, அணியின் அடுத்தடுத்த போட்டிகளில் நெய்மர் விளையாடமாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்தது. நெய்மர் மீண்டும் பிரேசில் அணிக்காக விளையாட வருவார் என அணியின் வீரர்களும் பயிற்சியாளர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Richarlison

4. நேற்று முன்தினம், அர்ஜென்டினா அணிக்கும் மெக்சிகோ அணிக்கும் இடையேயான போட்டி லுசைல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது. இப்போட்டியை 88,966 பார்வையாளர்கள் கண்டுகளித்தனர், 1994 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டி பிறகு அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஆட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 1994 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பை இறுதி போட்டியை 90,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

Fans

5. கடந்த 25 ஆம் தேதி பிரேசில் அணிக்கும் செர்பியா அணிக்கும் இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் அசத்தலான கோலை அடித்தார். கால்பந்து ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இந்த கோலுக்கு பிறகு, ஒரே நாளில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு மில்லியன் ஃபாலோவர்ஸ் அதிகரித்துள்ளனர்.

6. நேற்று, குரூப் F பிரிவின் குரோஷியா அணியும் கனடா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி தொடங்கிய 68 ஆவது விநாடியில் கனடா வீரர் அல்போன்சா டேவிஸ் கோல் அடித்து அசத்தினார்.இந்த கோலே, நடைபெற்று வரும் 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக கோல் ஆகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...