Skip to main content

பாரத் ஜோடோ யாத்திரை: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்? - காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு பதிவு!

கன்னியாகுமரியிலிருந்து செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை, 3,570 கி.மீ கடந்து, மத்தியப் பிரதேசத்தை அடைந்திருக்கிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது 'பாகிஸ்தானுக்கு ஆதரவான' முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக ஒரு வீடியோவைப் மத்தியப் பிரதேச பா.ஜ.க தலைவர் லோகேஷ் பராஷர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றவர்கள் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று முழக்கங்களை எழுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

நரேந்திர சிவாஜி படேல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தீஸ்கர் காங்கிரஸ் வழக்கறிஞர் அங்கித் மிஸ்ரா, ராய்பூரில் உள்ள சிவில் லைன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், "மத்தியப் பிரதேச பிரிவின் பா.ஜ.க ஊடகப் பிரிவுத் தலைவரான லோகேந்திர பராஷர் பகிர்ந்த வீடியோ, மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் பியூஷ் பாபேலே மற்றும் தகவல் தொழில்நுட்பத் தலைவர் அபய் திவாரி ஆகியோர் மீது, பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி, மாநில இணை ஊடகப் பொறுப்பாளர் நரேந்திர சிவாஜி படேல் ஆகியோர் குற்றப்பிரிவில் புகார் அளித்திருக்கின்றனர். அந்தப் புகாரில்,"காங்கிரஸின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கமல்நாத் மற்றும் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினரும் பாரத் ஜோடோ யாத்ரா என்ற போர்வையில் நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்கள் எழுப்புகின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

தற்போது பாரத் ஜோடோ யாத்திரையில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பியதாக சில காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை

ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் தனஞ்சய் தாக்கூர், இந்தக் கூற்றுகளை மறுத்து, "இது ராகுல் காந்தியை அவதூறாகப் பேச பா.ஜ.க செய்த சதி. பாரத் ஜோடோ யாத்திரைக்கு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் வரவேற்பைக் கண்டு அஞ்சுவதால், பா.ஜ.க பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...