Skip to main content

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகள்... தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தின் பின்னணி என்ன?!

சமீபகாலமாக, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகிவருகின்றன. தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையம்

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், கொலிஜியம் என்ற முறை முக்கியப் பங்காற்றுகிறது. அதுபோல, தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கென சுதந்திரமான ஓர் அமைப்பு வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மனுக்களை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை நவம்பர் 22-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், “தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், அந்தப் பதவியில் ஆறு ஆண்டுகள்வரை இருக்க முடியும். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஒருவர்கூட, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அந்தப் பதவியில் இருந்ததில்லை. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களுக்கு குறுகிய காலமே பதவி வழங்கப்படுகிறது. இது மிகவும் கவலைக்குரிய போக்கு” என்று சுட்டிக்காட்டியது.

அருண் கோயல்

மேலும், 18 ஆண்டுகளில் 14 தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மாற்றப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டது. இந்த வழக்கு இரண்டாவது நாளாக விசாரிக்கப்பட்டபோது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜ ரானார். `தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகள் குறித்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, கடந்த நவம்பர் 21-ம் தேதி அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என்ற விவகாரத்தைக் கிளப்பினார்.

அப்போது, தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமித்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அவரின் நியமனம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், ``தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாட்டில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. நன்னடத்தையுடன் சுதந்திரமாக செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் இருக்க வேண்டியது முக்கியம். ஒருவேளை நாட்டின் பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்து, அதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்காமல் போனால், அது ஒட்டுமொத்த நடைமுறையும் செயலிழந்ததற்கு ஒப்பாகும். தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், பிரதமர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் சுதந்திரமாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பவராக இருக்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர், தலையாட்டுபவராக இருக்கக் கூடாது” என்று நீதிபதி கே.எம்.ஜோசப் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றம்

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சியில் இருந்த பத்து ஆண்டுகளில் எட்டு தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல, பா.ஜ.க தலைமையில் தற்போது மத்தியில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், எட்டு ஆண்டுகளில் எட்டு தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவும், தேர்தல்களின்போது தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கவும் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கக்கூடிய ஒருவரைத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்தால், தங்கள் பிடிக்குள் இருக்க மாட்டார் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். ஆகவே, சுமார் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்கக்கூடிய வயதில் தேர்தல் ஆணையர்களை ஆட்சியாளர்கள் நியமிக்கிறார்கள். இந்தக் கருத்துக்களை உச்ச நீதிமன்றம் மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறது.

தேர்தல் ஆணையம்

உச்ச நீதிமன்றம் இவ்வாறு கருத்துக்களைத் தெரிவித்திருப்பதை, மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் தலையிடுவதாகக் கருத முடியாது. காரணம், மிகவும் ஆணித்தரமான கேள்விகளையே உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது என்று அரசியல் நோக்கர்களும் நீண்டகாலம் ஆட்சிப்பணியில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளும் கூறுகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தை தங்கள் வசதிக்கு வளைத்துக்கொண்டிருந்த அரசியல் கட்சிகளுக்கு, ஒரு காலத்தில் சிம்மசொப்பணமாக விளங்கியவர் முன்னாள் தலைமைத்தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். அவர், முழுமையாக ஆறு ஆண்டுகாலம் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்தார். உச்ச நீதிமன்றம் தங்கள் தலையில் கொட்டிய பிறகாவது, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் வகையில் உரிய சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...