Skip to main content

பிரியா மரண வழக்கு: மருத்துவ சங்க அறிக்கை... பின்வாங்குகிறதா திமுக அரசு? - அமைச்சர் மா.சு பதில் என்ன?

வீராங்கனை மரணம்:

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி பிரியா. கால்பந்து வீராங்கனையான இவருக்கு வலது கால் மூட்டுப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கடந்த 7-ம் தேதி அவருக்கு மூட்டுச் சவ்வு அறுவை சிகிச்சை செய்தனர். இருந்தபோதிலும், அவருக்குத் தொடர்ந்து கால்வலி இருந்த காரணத்தினால், அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா

அங்கு மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்குக் காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, பிரியாவின் வலது கால் வெட்டி அகற்றப்பட்டது. மருத்துவமனையில் தவறான சிகிச்சை வழங்கப்பட்டது என்று புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவத்துறை சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையிலிருந்த மாணவி கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். மாணவி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மருத்துவர்கள் மீது நடவடிக்கை:

கவனக்குறைவாகச் செயல்பட்டக் காரணத்துக்காகக் கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனை எலும்பியல் துறையைச் சேர்ந்த கே.சோமசுந்தர், ஏ.பல்ராம் ஆகிய இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மருத்துவத்துறை அறிவித்தது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் கைது செய்யப்படவேண்டும் என்று மாணவியின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். அதே சமயத்தில், இந்த விவகாரம் தொடர்பாக பெற்றோர்கள் பெரவள்ளூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. அதே சமயத்தில், மனைவியின் மரணம் தொடர்பாக மருத்துவக் குழு அமைத்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்று துறை சார்பில் உத்தரவு வெளியானது.

பிரியாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் முதல்வர்

அந்த குழு தனது விசாரணையை முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், "மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம்" என்று விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, 304A அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று கருதப்பட்ட நிலையில், இரண்டு மருத்துவர்களும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அவர்களின் ஜாமீன் வழங்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது. இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள மருத்துவர்களைப் பிடிக்கத் தனிப்படை போடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானது.

மருத்துவர் சங்கம்:

இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சங்க மாநிலத் தலைவர் செந்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பாகச் சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. முதல்வரும், தமிழக அரசும் இறந்த குடும்பத்தாருக்கு வழங்கிய ஆறுதலையும் உதவித் தொகைக்கும் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலில் மருத்துவச் சிகிச்சையின் போது ஏற்பட்ட இறப்பில் பொதுவாக அந்த துறை மூத்த நிபுணர் கருத்தைக் காவல் துறை பெற வேண்டும். அவ்வாறு மூத்த நிபுணர் அந்த மரணத்தில் மருத்துவச் சிகிச்சையின் போது கடும் கவனக்குறைவு (Criminal Negligence) இருக்கிறது என்று கூறினால் மட்டுமே காவல்துறை 304 A பிரிவில் வழக்கு தொடர வேண்டும்.

பிரியா குடும்பத்தினருக்கு நிவாரணங்களை வழங்கும் முதல்வர்

அப்படி 304 A பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் மருத்துவர்களைக் கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. தற்போது நடந்த மரணத்தில் கிரிமினல் கவனக்குறைவு இருப்பதாகச் சிறப்பு மருத்துவர் குழு அறிக்கை கொடுக்கவில்லை. சிவில் கவனக்குறைவு இருப்பதாகவே அறிக்கை அளித்து இருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி தமிழகக் காவல்துறை கிரிமினல் வழக்கில் மருத்துவர்களைச் சேர்த்து அவர்களைத் தனிப்படை அமைத்துத் தேடி வருவதாகச் செய்திகள் வருகிறது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் மருத்துவர்களைக் கொலைக் குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடையக் கூறி இருப்பது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

இந்த நிகழ்வில் சிவில் கவனக் குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவர்கள் மீது எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. நோயாளியின் காலை சிகிச்சை செய்யும் நோக்கில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, அதன் பின் கவனக்குறைவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும் அது சிவில் நெக்லிஜென்ஸில் மட்டுமே வரும். போலீஸ் நடவடிக்கை அதிகப்படியானது. மருத்துவர் செவிலியர் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரானது என்று சங்கம் கருதுகிறது. எனவே மருத்துவர் மீது பதியப்பட்ட 304 A பிரிவு மாற்றப்பட வேண்டும்.

கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அஞ்சலி செலுத்தும் முதல்வர்

அதையும் மீறி மருத்துவர் கைது செய்யப்பட்டால், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது. தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிருஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏற்பட்டது. சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

`கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’

இந்த விவகாரம் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். ``கால்பந்து வீராங்கனை பிரியாவின் இழப்பு எந்த நிவாரணத்தினாலும் ஈடு செய்யமுடியாது. மூட்டு அறுவை சிகிச்சை நடந்த சமயத்தில் போடப்பட்ட கட்டால் மாணவியின் உடலில் ரத்த ஓட்டம் தடை ஆனது. சிகிச்சை அளித்த மருத்துவர்களின் கவனக்குறைவுதான் மாணவியின் மரணத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணைக் குழு அறிக்கை அடிப்படையில், இதில் தொடர்புடைய மற்றவர்கள் மீதும் கண்டிப்பாக துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தொடர்ந்து பேசியவர், "அரசுக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதம் இனிவரும் காலங்களில் நடைபெறாது இருக்க, நாட்டிலேயே முன்மாதிரியாக அறுவை சிகிச்சை தணிக்கை செய்யும் குழு அமைக்கப்பட உள்ளது. கடந்த 23.11.2022 அன்று அறுவை சிகிச்சைக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய 4 மண்டலங்களில் அறுவை சிகிச்சை தணிக்கை செய்யும் குழு அமைக்கப்படும்". என்று பேசினார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...