Skip to main content

தூத்துக்குடி: மழைக்காக கொடும்பாவி எரித்து… ஒப்பாரி வைத்த கிராம மக்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தார், எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்களில் சுமார் 1,70,000 ஹெக்டேர் பரப்பளவிலான மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. உளுந்து, கம்பு, பாசி, வரகு, கேழ்வரகு, மக்காச்சோளம்,  பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கொடும்பாவியை அடித்தல்குளிர்பான மது, இன்ஸ்டா சாட்டிங்; இளம்பெண்கள், இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல்! இந்தாண்டு சரியாக மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.  ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட செக்காரக்குடி கிராமத்தில் கொடும்பாவியை தெருத்தெருவாக இழுத்துச் சென்று செருப்பு, துடைப்பத்தால் அடித்தும், ஒப்பாரிப் பாடல் பாடியும் எரித்தனர். இந்த சடங்கு செய்தால் மழை பெய்யும் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இப்படி செய்துள்ளனர். செக்காரக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராமலெட்சுமியிடம் பேசினோம், “தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இறவைப் பாசன விவசாயத்தைவிட மானாவாரி விவசாயமே அதிக பரப்பளவில் நடக்கிறது. சிறுதானியங்கள், பருத்தி, மிளகாய்தான் இங்கு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. சித்திரை மாதமே கோடை உழவு ஓட்டி மழைக்காகக் காத்திருந்தோம்.  ஒப்பாரி`என் ஹீரோவை பார்க்கணும்!’ - மெஸ்ஸியின் ஆட்டம் காண காரிலேயே கத்தார்; அசரவைத்த கேரள அம்மா ஆவணி மாதத்தில் ஒரு மழையும், புரட்டாசியில் ஒரு மழையும் மட்டுமே பெய்தது. ஆவணியில் பெய்த மழையை நம்பி சில பகுதிகளில் விதைத்தோம். முளைத்தும் முளைக்காமல் இருந்தது. இதுபோல பருவமழை பெய்யத் தாமதமானால் கிராமங்களில் கொடும்பாவி எரித்து ஒப்பாரி வைத்தல், மழைக்கஞ்சி வழிபாடு, தவளை கல்யாணம், கழுதை கல்யாணம் போன்ற மழைச்சடங்குகளை நடத்துவார்கள். எங்க கிராமத்தில் கொடும்பாவி எரிப்பதுதான் வழக்கம். போன வாரம் ஊர் கூட்டம் போட்டு மழைக்காக கொடும்பாவி எரிப்பது என முடிவெடுத்தோம். ஊருக்கு நடுவில் கொடும்பாவி உருவத்தை தயார் செய்தோம். கரகாட்ட கலைஞர்கள் ஒப்பாரிப் பாடல்களைப் பாடிக்கொண்டே நெஞ்சில் அடித்து அழுவார்கள். அப்படியே கொடும்பாவி உருவத்தை கயிறால் கட்டி ஊரிலுள்ள எல்லா தெருக்கள் வழியாக இழுத்துச் சென்றோம்.கிராம மக்கள் வழி நெடுகிலும் ஒவ்வொரு வீட்டு முன்பு நிற்பவர்கள் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்தார்கள். ஊருக்கு வெளியே கொடும்பாவி உருவத்தை எடுத்துச் சென்று தீயிட்டு கொளுத்தினோம். இதனால், ஒன்றிரண்டு நாளில் மழை வரும் என்பது எங்களின் நம்பிக்கை” என்றார்.    
http://dlvr.it/SdTMhn

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...