Skip to main content

பேனர் விவகாரம்: ``இந்த தகவலை சொன்னவரிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள்” - எடப்பாடிக்கு அமைச்சர் பதில்

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியை கடந்த 23-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,"தி.மு.க ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

எடப்பாடி பழனிசாமி - ஆர்.என்.ரவி

உள்ளாட்சி அமைப்புகளில் முடிக்கப்பட்டு, செயல்பாட்டிலிருக்கும் பணிகளை விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த விளம்பரப்படுத்தப்படும் பேனர் விலை 350 ரூபாய். அதற்கு 7,906 ரூபாய் பில் போட்டிருக்கிறார்கள். அரசு இதை ஒரே கம்பெனிக்கு கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்திருக்கிறது" எனக் குற்றம்சாட்டினார்.

அமைச்சர் பெரியகருப்பன்

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "விளம்பர பதாகைகள் அச்சடிக்கும் பணிக்கு எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் இந்த பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. 9 மாவட்டங்களில் ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாகவே அச்சடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 84 ஆயிரத்து 653 விளம்பர பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. இவற்றுக்கான சராசரி மதிப்பீடாக பேனர் ஒன்றுக்கு 611 ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி உட்பட செலவிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகையின் விலை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி 7,906 ரூபாய் செலவிடப்பட்டதாக கூறியது முற்றிலும் உண்மைக்கும் முரணானதாகும். கிராம புற சுகாதாரத்தின் அடிப்படையில் சிறப்பாக உள்ளது என 2022-ன் கணக்கின்படி தேசிய அளவில் தமிழகம் மூன்றாம் இடம் பெற்று குடியரசுத் தலைவர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

அமைச்சர் பெரியகருப்பன்

உள்ளாட்சி அதிகாரத்தை பிடுங்கியது திமுக அரசு எனக் குற்றம்சாட்டுகிறார். ஆனால் அது யார் பிடுங்கியது என நமக்கு தெரியும். உள்ளாட்சித் தேர்தலை சரியாக நடத்தாததால் தான் மாநில அரசுக்கு வரவேண்டிய பல்வேறு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. முடிக்கப்பட்ட பணிகளுக்கு விளம்பரம் செய்வது அவரின் ஆட்சிகாலத்தில் நடந்தது.

ஒரு பொருளின் விலையில் 10 மடங்காக வைத்துதான் கணக்கு காண்பிப்பார்கள். இதற்கு எதிர்கட்சியாக இருந்த போதே எதிர்ப்பு தெரிவித்தோம். அதாவது அவரின் ஆட்சியில் ரூ.2,800 விளம்பர பேனருக்கு அவர்கள் போட்ட தொகை ரூ28,000. இப்படி ஓவ்வொரு பொருளுக்கும் 10 மடங்கு விலை போட்டவர்கள் தான் இன்று போலியான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்கள். அவர் அளித்த செய்திகள் யாரோ ஒருவர் கொடுத்த தகவலினால் தான் தெரிவித்திருக்கிறார். தகவல் கொடுத்தவரிடம் எடப்பாடி சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...