Skip to main content

பேனர் விவகாரம்: ``இந்த தகவலை சொன்னவரிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள்” - எடப்பாடிக்கு அமைச்சர் பதில்

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியை கடந்த 23-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,"தி.மு.க ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

எடப்பாடி பழனிசாமி - ஆர்.என்.ரவி

உள்ளாட்சி அமைப்புகளில் முடிக்கப்பட்டு, செயல்பாட்டிலிருக்கும் பணிகளை விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த விளம்பரப்படுத்தப்படும் பேனர் விலை 350 ரூபாய். அதற்கு 7,906 ரூபாய் பில் போட்டிருக்கிறார்கள். அரசு இதை ஒரே கம்பெனிக்கு கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்திருக்கிறது" எனக் குற்றம்சாட்டினார்.

அமைச்சர் பெரியகருப்பன்

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "விளம்பர பதாகைகள் அச்சடிக்கும் பணிக்கு எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் இந்த பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. 9 மாவட்டங்களில் ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாகவே அச்சடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் 84 ஆயிரத்து 653 விளம்பர பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. இவற்றுக்கான சராசரி மதிப்பீடாக பேனர் ஒன்றுக்கு 611 ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி உட்பட செலவிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகையின் விலை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி 7,906 ரூபாய் செலவிடப்பட்டதாக கூறியது முற்றிலும் உண்மைக்கும் முரணானதாகும். கிராம புற சுகாதாரத்தின் அடிப்படையில் சிறப்பாக உள்ளது என 2022-ன் கணக்கின்படி தேசிய அளவில் தமிழகம் மூன்றாம் இடம் பெற்று குடியரசுத் தலைவர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

அமைச்சர் பெரியகருப்பன்

உள்ளாட்சி அதிகாரத்தை பிடுங்கியது திமுக அரசு எனக் குற்றம்சாட்டுகிறார். ஆனால் அது யார் பிடுங்கியது என நமக்கு தெரியும். உள்ளாட்சித் தேர்தலை சரியாக நடத்தாததால் தான் மாநில அரசுக்கு வரவேண்டிய பல்வேறு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. முடிக்கப்பட்ட பணிகளுக்கு விளம்பரம் செய்வது அவரின் ஆட்சிகாலத்தில் நடந்தது.

ஒரு பொருளின் விலையில் 10 மடங்காக வைத்துதான் கணக்கு காண்பிப்பார்கள். இதற்கு எதிர்கட்சியாக இருந்த போதே எதிர்ப்பு தெரிவித்தோம். அதாவது அவரின் ஆட்சியில் ரூ.2,800 விளம்பர பேனருக்கு அவர்கள் போட்ட தொகை ரூ28,000. இப்படி ஓவ்வொரு பொருளுக்கும் 10 மடங்கு விலை போட்டவர்கள் தான் இன்று போலியான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்கள். அவர் அளித்த செய்திகள் யாரோ ஒருவர் கொடுத்த தகவலினால் தான் தெரிவித்திருக்கிறார். தகவல் கொடுத்தவரிடம் எடப்பாடி சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...