Skip to main content

``பெயருக்கு சொல்லிக்கொள்கிறார்கள்; உண்மையிலே 'சின்னவர்' நான் தான்!" - சொல்கிறார் சீமான்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, "நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழர் எனும் பேரினத்தின் மக்கள் நாம். நிலப்பரப்பை இழந்து, மொழியை சிதைய கொடுத்து, கலை, இலக்கியம், பண்பாடுகள், வழிபாடுகள் எல்லாம் இழந்து காலடியில் குறுகி நிற்கிறோம். தமிழ் தாய், தனக்கு பேரழிவு வரும்போது தன்னை தகவமைத்துக் கொள்வதற்கு பிரசவித்த தலைமகன்தான் என்னுடைய அண்ணன் பிரபாகரன். உலகத்தில் எந்த இனத்திற்கும் கிடைக்காத ஒப்பற்ற புரட்சியாளர். எந்த புரட்சியாளனும் என் தலைவனுக்கு ஈடாக முடியாது. 

சீமான் - பிரபாகரன்

போர் சூழலிலே தற்சார்பு வாழ்க்கையை நிறுவியவர். சிங்களன் நம் இனத்தவரோடு 35 ஆண்டுகள் சண்டை செய்தான். இலங்கையில் இப்போதைய பொருளாதார சீர்கேட்டிற்கு காரணமே, அவன் அண்டை நாடுகளில் கடன் வாங்கியதுதான். ஆனால், உலக நாட்டில் எங்காவது பிரபாகரன் ஒரு ரூபாய் கடன் வாங்கினார் என சொல்ல முடியுமா. என் தலைவனுக்கு பின்னால் ஒரு பரம்பரை இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளான மாபெரும் வீர பரம்பரை இருக்கிறது. இராவணன் எனும் பெருந்தகையின் பேரன் பிரபாகரன் அவர்கள். தீரன் சின்னமலையின் நேரடி வாரிசு..! எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு மகன், தன் இனத்தின் விடுதலைக்கு ஆறுபடை கட்டி போராடினார்.

எங்களுக்கு ஒரே கோட்பாடுதான்... எங்கள் அண்ணனின் மொழியே கீதை, அவரின் வழியே பாதை. உலகத்தின் எல்லா ராணுவத்திலும் மது, சிகரெட் இருக்கிறது. ஆனால், தமிழீழ தேசிய ராணுவத்தில் மட்டும்தான் இது எதுவும் கிடையாது. இங்கு உள்ளவர்களைப் போல 10, 20 வீடுகள் கட்ட அவர் போராடவில்லை. தன் இனத்திற்காக நாடுகட்ட போராடிய தலைவன். பெற்ற பிள்ளைகளுக்காக பதவி கேட்டு யாரிடமும் மண்டியிடவில்லை. பெற்ற பிள்ளைகள் அத்தனை பேரையும், தாய் நிலத்தின் விடுதலைக்காக களத்திலே பலியிட்ட உலகப் புரட்சியாளர் பிரபாகரன். அடுத்த தலைமுறைக்கு, 'உன் இனத்தில் இப்படி ஒரு தலைவன் இருந்தான்' என சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில், கண்ட கண்ட தருதலைகள் எல்லாம் தலைவன் ஆகிவிடும். உண்மையிலேயே பெரியவர் பிரபாகரன்! உண்மையிலேயே சின்னவர் நான்தான். ஆனால், ஆளாளுக்கு பெரியவர் சின்னவர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

விழா மேடையில் சீமான்

ஒரு இனம், தன் இனத்தின் தலைவரையே தெரியாமல் வாழ்ந்துவிட்டனர். நம்மவரும் இல்லையெனில், சுத்தமாக மூடி மறைத்திருப்பார்கள். இரண்டு படம் நடித்துவிட்டால் போதும், உடனே 'தலைவா வா..! தமிழ்நாடு உனக்கு காத்திருக்கிறது' என்கிறார்கள். இன்னும், 'நாடாள வந்த ராசா'னு பாட்டை போட்டுடுவாங்க. இது தமிழ்நாடா, இல்லை தரிசு காடா. இந்த இனம் பெரிய தவற்றை செய்துவிட்டது. இப்படி ஒரு தலைவனை பயன்படுத்திக்கொள்ளாமல், துணையாக நிற்காமல், அவருக்கு துரோகம் பண்ணிவிட்டது. அதுதான் பெரிய கொடுமை. உணர்வை ஊட்டக்கூடாது, அது ரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும். தமிழின மக்கள் ஒன்றானால் அவர்களின் வாழ்வு பொன்னாகும், இல்லையேல் மண்ணாகும். ஒருநாள் விமான நிலையத்தில், என்னை ராணுவம் சுற்றி வளைத்தது. என்னுடன் இருந்தவர்கள் பதரி நின்றுவிட்டனர். ஆனால், அந்த ராணுவத்தினர் வந்தது என்னிடம் செல்ஃபி எடுப்பதற்கு" என்றார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...