Skip to main content

``பெயருக்கு சொல்லிக்கொள்கிறார்கள்; உண்மையிலே 'சின்னவர்' நான் தான்!" - சொல்கிறார் சீமான்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, "நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழர் எனும் பேரினத்தின் மக்கள் நாம். நிலப்பரப்பை இழந்து, மொழியை சிதைய கொடுத்து, கலை, இலக்கியம், பண்பாடுகள், வழிபாடுகள் எல்லாம் இழந்து காலடியில் குறுகி நிற்கிறோம். தமிழ் தாய், தனக்கு பேரழிவு வரும்போது தன்னை தகவமைத்துக் கொள்வதற்கு பிரசவித்த தலைமகன்தான் என்னுடைய அண்ணன் பிரபாகரன். உலகத்தில் எந்த இனத்திற்கும் கிடைக்காத ஒப்பற்ற புரட்சியாளர். எந்த புரட்சியாளனும் என் தலைவனுக்கு ஈடாக முடியாது. 

சீமான் - பிரபாகரன்

போர் சூழலிலே தற்சார்பு வாழ்க்கையை நிறுவியவர். சிங்களன் நம் இனத்தவரோடு 35 ஆண்டுகள் சண்டை செய்தான். இலங்கையில் இப்போதைய பொருளாதார சீர்கேட்டிற்கு காரணமே, அவன் அண்டை நாடுகளில் கடன் வாங்கியதுதான். ஆனால், உலக நாட்டில் எங்காவது பிரபாகரன் ஒரு ரூபாய் கடன் வாங்கினார் என சொல்ல முடியுமா. என் தலைவனுக்கு பின்னால் ஒரு பரம்பரை இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளான மாபெரும் வீர பரம்பரை இருக்கிறது. இராவணன் எனும் பெருந்தகையின் பேரன் பிரபாகரன் அவர்கள். தீரன் சின்னமலையின் நேரடி வாரிசு..! எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு மகன், தன் இனத்தின் விடுதலைக்கு ஆறுபடை கட்டி போராடினார்.

எங்களுக்கு ஒரே கோட்பாடுதான்... எங்கள் அண்ணனின் மொழியே கீதை, அவரின் வழியே பாதை. உலகத்தின் எல்லா ராணுவத்திலும் மது, சிகரெட் இருக்கிறது. ஆனால், தமிழீழ தேசிய ராணுவத்தில் மட்டும்தான் இது எதுவும் கிடையாது. இங்கு உள்ளவர்களைப் போல 10, 20 வீடுகள் கட்ட அவர் போராடவில்லை. தன் இனத்திற்காக நாடுகட்ட போராடிய தலைவன். பெற்ற பிள்ளைகளுக்காக பதவி கேட்டு யாரிடமும் மண்டியிடவில்லை. பெற்ற பிள்ளைகள் அத்தனை பேரையும், தாய் நிலத்தின் விடுதலைக்காக களத்திலே பலியிட்ட உலகப் புரட்சியாளர் பிரபாகரன். அடுத்த தலைமுறைக்கு, 'உன் இனத்தில் இப்படி ஒரு தலைவன் இருந்தான்' என சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில், கண்ட கண்ட தருதலைகள் எல்லாம் தலைவன் ஆகிவிடும். உண்மையிலேயே பெரியவர் பிரபாகரன்! உண்மையிலேயே சின்னவர் நான்தான். ஆனால், ஆளாளுக்கு பெரியவர் சின்னவர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

விழா மேடையில் சீமான்

ஒரு இனம், தன் இனத்தின் தலைவரையே தெரியாமல் வாழ்ந்துவிட்டனர். நம்மவரும் இல்லையெனில், சுத்தமாக மூடி மறைத்திருப்பார்கள். இரண்டு படம் நடித்துவிட்டால் போதும், உடனே 'தலைவா வா..! தமிழ்நாடு உனக்கு காத்திருக்கிறது' என்கிறார்கள். இன்னும், 'நாடாள வந்த ராசா'னு பாட்டை போட்டுடுவாங்க. இது தமிழ்நாடா, இல்லை தரிசு காடா. இந்த இனம் பெரிய தவற்றை செய்துவிட்டது. இப்படி ஒரு தலைவனை பயன்படுத்திக்கொள்ளாமல், துணையாக நிற்காமல், அவருக்கு துரோகம் பண்ணிவிட்டது. அதுதான் பெரிய கொடுமை. உணர்வை ஊட்டக்கூடாது, அது ரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும். தமிழின மக்கள் ஒன்றானால் அவர்களின் வாழ்வு பொன்னாகும், இல்லையேல் மண்ணாகும். ஒருநாள் விமான நிலையத்தில், என்னை ராணுவம் சுற்றி வளைத்தது. என்னுடன் இருந்தவர்கள் பதரி நின்றுவிட்டனர். ஆனால், அந்த ராணுவத்தினர் வந்தது என்னிடம் செல்ஃபி எடுப்பதற்கு" என்றார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...