Skip to main content

திருமாவளவனுக்கு எதிராக கருத்து... `ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ஆதரவாக இருப்போம்’ - பாஜக

விருதுநகர்‌ மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. மேகாலயாவில் சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் புத்தக வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., ``தமிழ்நாட்டை தனி நாடாக அமைப்பதே தமிழ் தேசியத்தின் இலக்கு” என பேசியிருந்தார். திருமாவளவன் எம்.பி.யின் இந்த பேச்சைக் கண்டித்தும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சி.ஆர்.பி.எப்.வீரர் குருமூர்த்தி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இந்தச்செயல், வி.சி.க. தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, சி.ஆர்.பி.எப். வீரர் குருமூர்த்தியை போனில் தொடர்புகொண்ட வி.சி.க.வினர் அவரை மிரட்டி பேசியதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோவை, ராணுவ வீரர் குருமூர்த்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது தமிழக அரசியலில் தற்போது பெரும் சூட்டை கிளப்பியுள்ளது.

ராணுவ வீரர் வீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களின் மிரட்டலை தொடர்ந்து, ராணுவ வீரர் குருமூர்த்திக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. தற்போது களத்தில் இறங்கியுள்ளது. ராணுவ வீரர் குருமூர்த்தியை போனில் தொடர்புக்கொண்டு பேசிய தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை, தனது ஆதரவை தெரிவித்ததுடன், அவரின் குடும்பத்திற்கும் தமிழக பா.ஜ.க. துணையாக நிற்கும் என தெரிவித்திருந்தார்.

இதன்தொடர்ச்சியாக தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலையின் ஆதரவைத் மெய்ப்பிக்கும் பொருட்டு, ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் ஊரில் உள்ள ராணுவ வீரர் குருமூர்த்தியின் வீட்டாருக்கு ஆதரவுத்தெரிவித்து விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் வி.கே.சுரேஷ்குமார், தலைமையில் 200க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்று அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஊர்வலம்

அப்போது, ராணுவ வீரர் குருமூர்த்தியின் குடும்பத்தினருடன் செல்போனில் பேசிய மாநிலத்தலைவர்‌ அண்ணாமலை, உங்களது குடும்பத்திற்கு பா.ஜ.க. பாதுகாப்பாக இருக்கும் என உறுதி அளித்ததாக தெரிகிறது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ.க.நிர்வாகிகள்‌ பலர் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...