Skip to main content

Doctor Vikatan: கருத்தடை மாத்திரைகள் பீரியட்ஸை தள்ளிப்போட உதவுமா?

Doctor Vikatan: என் வயது 28. பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி பீரியட்ஸை தள்ளிப்போட வேண்டியிருக்கிறது. இதற்கு மாத்திரைகள் பயன்படுத்துவது சரியா? வேறு என்ன வழி?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மருத்துவர் ஸ்ரீதேவி

பீரியட்ஸை தள்ளிப் போடுவது என்பது பலரும் செய்கிற விஷயம் தான். பீரியட்ஸை தள்ளிப்போட பல வழிகள் உள்ளன. ஒருவேளை ஏற்கெனவே நீங்கள் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதாவது, 21 நாள்களுக்கான மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர் என்றால், எத்தனை நாள்களுக்கு உங்களுக்கு பீரியட்ஸை தள்ளிப்போட வேண்டுமோ, அத்தனை நாள்களுக்கு அதே மாத்திரைகளை நீங்கள் தொடர்ந்து உபயோகிப்பது ஒரு வழி. அதை நிறுத்திய பிறகு உங்களுக்கு பீரியட்ஸ் வந்துவிடும்.

நீங்கள் ஏற்கெனவே கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், இன்று 2-ம் தேதி என்றும், உங்களுக்கு 5-ம் தேதி பீரியட்ஸ் வரும் நாள் என்றும் வைத்துக்கொள்வோம். நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கிற கருத்தடை மாத்திரையை நிறுத்தாமல் தொடரலாம். நீங்கள் எப்போது நிறுத்துகிறீர்களோ அப்போது தான் பீரியட்ஸ் வரும். இது ஒரு வழி.

நீங்கள் எந்தவித கருத்தடை முறையையும் பயன்படுத்தவில்லை என்றால் மருத்துவர் உங்களுக்கு புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார். இதில் இரண்டு வகையான மாத்திரைகள் உள்ளன. அதில் Norethisterone வகை மாத்திரைகளை ஒருநாளைக்கு 2 முதல் 3 வேளைகள் எடுக்கச் சொல்வார்கள். உங்களுக்கு எந்த நாள் பீரியட்ஸ் வரும் என கணிக்கிறீர்களோ, அதற்கு மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு முன்பிருந்து அந்த மாத்திரைகளை எடுக்கச் சொல்லி உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். நீங்கள் எத்தனை நாள்களுக்கு பீரியட்ஸை தள்ளிப்போட நினைக்கிறீர்களோ, அத்தனை நாள்களுக்கு இந்த மாத்திரையைத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டியிருக்கும்.

periods

இந்த மாத்திரைகளை நிறுத்திய ஒன்றிரண்டு நாள்களில் உங்களுக்கு பீரியட்ஸ் வந்துவிடும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த மாத்திரையை நீங்கள் எந்த நேரத்தில் எடுக்கிறீர்களோ, அதே நேரத்தில் தினமும் தவறாமல் எடுக்க வேண்டும். மாத்திரை எடுக்க மறந்தாலோ, ஒன்றிரண்டு வேளை தவறவிட்டாலோ இடையிலேயே உங்களுக்கு பீரியட்ஸ் வர வாய்ப்பு இருக்கிறது. இந்த மாத்திரை எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. 'டீப் வெயின் த்ராம்போசிஸ்' எனப்படும் கால்களில் ரத்தம் கட்டும் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மாத்திரைகளால் பாதிப்பு மேலும் தீவிரமாக வாய்ப்பு உண்டு. 'டீப் வெயின் த்ராம்போசிஸ்' பாதிப்பு உள்ளவர்களுக்கு வேறு மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

பீரியட்ஸை தள்ளிப்போடுவது என்பது உங்களுக்கு சிம்பிளான விஷயமாகத் தோன்றலாம். ஆனாலும் அதற்கு முன் உங்கள் முழுமையான உடல்நலம் குறித்து மருத்துவரிடம் சொல்லிவிட்டு, அவரது பரிந்துரையின் பேரில் மட்டுமே மாத்திரைகளை எடுக்க வேண்டும். அடிக்கடி இந்த மாத்திரைகளை எடுப்பதால் பக்கவிளைவுகள் வரலாம். ஒருமுறை எடுப்பதாலேயேகூட சிலருக்கு மாதவிலக்கு சுழற்சியில் பிரச்னைகள் வரலாம். மார்பகங்கள் கனத்து வலிப்பது போல உணரலாம். வாந்தி, வயிற்றுக்கோளாறு, மனநிலையில் மாற்றங்கள் போன்றவை வரலாம்.

periods

தவிர இரண்டாவதாக நான் குறிப்பிட்ட இந்த மாத்திரை கருத்தடைக்கானது அல்ல. எனவே மாத்திரையை நிறுத்திய பிறகும் உங்களுக்கு பீரியட்ஸ் வரவில்லை என்றால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று டெஸ்ட் செய்து பார்ப்பது அவசியம். 21 நாள்கள் எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை நீங்கள் எடுத்திருந்தால் மட்டுமே அது கருத்தடையாகவும் மாதவிலக்கைத் தள்ளிப்போடும் வகையிலும் வேலை செய்யும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...