Skip to main content

மகாராஷ்டிராவுடன் மோதும் குஜராத்: டாடா போர் விமானங்கள் தயாரிக்கும் திட்டமும் பறிபோச்சு!

குஜராத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 19.5 பில்லியன் டாலர் முதலீட்டில் செமி கண்டக்டர் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்குவதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்தது. இந்த செமிகண்டக்டர் நிறுவனத்தை, முதலில் மகாராஷ்டிராவில்தான் தொடங்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இது குஜராத்திற்குச் சென்றது. குஜராத்தின் அகமதாபாத் அருகில் இத்தொழிற்சாலை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் குஜராத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள், ஏக்நாத் ஷிண்டே அரசை கடுமையாக விமர்சித்தன. இதனால் டாடா மற்றும் ஏர்பஸ் இணைந்து போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மகாராஷ்டிராவிற்குக் கொண்டு வந்துவிடுவோம் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவருவதாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் அறிவித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிராவிற்கு பெரிய திட்டம் கிடைக்க உதவுவதாக உறுதியளித்ததாக, தேவேந்திர பட்நவிஸ் கூறியிருந்தார்.

மத்திய அரசு, கடந்த மாதம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 போர் விமானங்கள் வாங்கப்படும் என்று தெரிவித்தது. இதில் 16 விமானங்கள் ஏர்பஸ் நிறுவனத்திடம் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். எஞ்சிய 40 விமானங்கள் `மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை செயலாளர் தெரிவித்திருந்தார். தனியார் நிறுவனத்தின் தயாரிப்பில் முதல்முறையாக போர் விமானம் தயாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக டாடா மற்றும் ஏர்பஸ் இணைந்து சி-295 போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை, குஜராத்தில் தொடங்கப் போவதாக இரு நிறுவனங்களும் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், `ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 2023-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 16 விமானங்கள் கிடைக்கும். குஜராத்தில் டாடா மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் போர் விமானங்கள் 2026-ம் ஆண்டு செப்டம்பரில் கிடைக்க ஆரம்பிக்கும்.

விமானப்படையில் இருக்கும் பழைய விமானங்களுக்கு பதில் சி-295 போர்விமானங்கள் அறிமுகப்படுத்தப்படும். சரியாக தயாரிக்கப்படாத விமான ஓடுதளத்திலும் இந்த விமானங்களை எளிதாக தரையிறக்க முடியும். அதோடு பாராசூட் மூலம் போர் வீரர்கள் மற்றும் சரக்குகளை தரையிறக்க முடியும். இந்த புதிய விமானங்கள் மூலம் இந்திய விமானப்படை வலுவடையும்’ என்று அரசு பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார் தெரிவித்தார்.

விமானம்

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், `ரூ.22 ஆயிரம் கோடி செலவில் முதல் முறையாக தனியார் நிறுவனத்தின் மூலம் போர்விமானங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த விமானங்கள் பொதுமக்களின் போக்குவரத்து தேவைக்கும் பயன்படுத்தப்படலாம். இத்தொழிற்சாலை வதோதராவில் தொடங்கப்படும். வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை தொடங்கி வைப்பார். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.

இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சிந்தியா, மாநில முதல்வர் புபேந்திர பாய் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் இந்த விமானங்களைத் தயாரிக்க நம் நாட்டைச் சேர்ந்த 240 பொறியாளர்களுக்கு ஸ்பெயின் நாட்டில் பயிற்சி கொடுக்கப்படும் என்று ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை குஜராத்திற்கு சென்றிருப்பது மகாராஷ்டிரா அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே செமி கண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலை விஷயத்தில் ஏமாந்து போய் இருக்கும் மகாராஷ்டிராவிற்கு, இது மேலும் ஒரு அடியாகும்.

டாடா மற்றும் ஏர்பஸ் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை மகாராஷ்டிராவிற்கு கொண்டு வர மகாராஷ்டிரா அரசு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. ஏர்பஸ் திட்டம் குஜராத்திற்கு சென்றதற்காக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சிவசேனா இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரேயும் மகாராஷ்டிரா அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

விமானம்

குஜராத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கிறது. விமானப்படை விமானங்கள் தயாரிப்பு தொழிற்சாலை தொடர்பான திட்டத்தை அறிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் குஜராத் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்காமல் தள்ளி வைத்திருந்தது. இனி ஓரிரு நாளில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

மகாராஷ்ட்ராவுடன் குஜராத் அரசு தொடர்ந்து மோதி வருகிறது. இதற்குப் பின்னணி இருப்பது யார் என்கிற கேள்வியை மகாராஷ்ட்ரா மக்கள் எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர்!


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...