Skip to main content

திருட்டு வாகனத்துக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த ஆர்.டி.ஓ அலுவலகம்! – கடலூர் அதிர்ச்சி

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த அமுதராஜ் என்பவரது பல்சர் வாகனம், கடந்த செப்டம்பர் 6-ம் தேதி காணாமல் போனது. அதிர்ச்சியடைந்த அமுதராஜ், வாகனம் காணாமல் போன அன்றே அது குறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். காவல் நிலையத்தில் இழுத்தடிக்க, இணையத்தில் தனது வாகன பதிவெண்ணை போட்டு சாதாரணமாக தேடியிருக்கிறார் அமுதராஜ். அப்போது காணாமல் போன தனது இருசக்கர வாகனம், கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேறொருவர் பெயருக்கு மாற்றம் செய்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து மீண்டும் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.அமுதராஜ் இது குறித்துப் பேசிய அமுதராஜ், “வண்டி திருடுபோன அன்றே R6 குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சி.எஸ்.ஆரும் வாங்கிவிட்டேன். ஆனால் என் வண்டியை கண்டுபிடிப்பதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதனால் எனது வண்டியின் எண்ணை இணையத்தில் போட்டு பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சென்னையில் திருடு போன எனது வண்டி, கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேறொருவர் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பது தெரிந்தது. உடனே கே.கே.நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் அது தொடர்பான விபரங்களை வாங்கிக்கொண்டு, குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்து என் வண்டியை மீட்டுத் தரும்படி கூறினேன். அதேநேரத்தில் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. ஆர்.சி புக் உள்ளிட்ட வண்டியின் உண்மையான சான்றிதழ்கள் என்னிடம் இருக்கும்போது, எனது கையெழுத்தின்றி ஒரு திருட்டு வண்டிக்கு முறையாக பெயர் மாற்றம் செய்து கொடுத்திருக்கிறார்கள் கடலூர் ஆர்.டி.ஓ அதிகாரிகள். வாகனம் பெயர் மாற்றம் செய்யும்போது கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் எதுவுமின்றி, திருடப்பட்ட 40-வது நாளிலேயே ஆர்.டி.ஓவின் கையெழுத்துடன் பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள். இது குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தும், இன்னும் எஃ.ஐ.ஆர் கூட போடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இப்படி எத்தனை திருட்டு வண்டிகள் கடலூர் ஆர்.டி.ஓவில் மாற்றியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. திருடுபோன அமுதராஜின் இருசக்கர வாகனம் சாதாரண இன்சூரன்ஸ் செய்யும்போதுகூட வண்டியின் எண்ணை போட்டால் உரிமையாளரின் பெயர் தெரியும். ஆனால் எதையும் செய்யாமல் சாதாரணமாக பெயர் மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது வண்டியை  மீட்டுத்தர வேண்டும்” என்றார். அமுதராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்த குமரன் நகர் போலீஸார், திருட்டு வண்டிக்கு பெயர் மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர். திருட்டு வண்டிக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த வினோத் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் உரிமையாளர் வினோத்திடம் பேசினோம். “விழுப்புரத்தில் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் ஜெயசங்கர் என்பவர், என்னிடம் வாகனங்களுக்கு பெயர் மாற்றும் வேலைகளைக் கொடுப்பார். ஒரு வாகனத்திற்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.1,500/- கொடுப்பார். அதில் ரூ.800/- அரசுக் கட்டணமும், மற்ற செலவுகளும் போக எனக்கு ரூ.300/- கிடைக்கும்.`பணம் கொடு; இல்லைன்னா புக் சேட்டு கடைக்குப் போகும்!'-பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆர்.டி.ஓ அலுவலகம் அப்படி அவர் இந்த மாதம் 5 இருசக்கர வாகனங்களுக்கு பெயர் மாற்றித்தரும்படி கூறினார். அதில் நான்கு வாகனங்களுக்கு ஒரிஜினல் ஆர்.சி புத்தகமும், ஒரு வண்டியின் ஆர்.சி புத்தகம் தொலைந்துவிட்டது என்றும் சொல்லி எப்படியாவது முடித்துக் கொடுக்கும்படி கூறினார். ஆர்.சி புத்தகங்கள் தொலைவது அடிக்கடி நடக்கக் கூடியது என்பதால், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த அமீர் அப்பாஸ் என்பவர் கடலூரில் வசிப்பது போல நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரிடம் அஃபிடவிட் வாங்கி பெயர் மாற்றம் செய்து கொடுத்தேன். திருட்டு வண்டி என்று தெரிந்திருந்தால் வெறும் ரூ.300/- கூலிக்காக இதை நான் செய்திருப்பேனா? இந்த வண்டி மூன்று பேரிடம் கைமாறிதான் இங்கு வந்திருக்கிறது. மதுராந்தகத்தைச் சேர்ந்த தீபக் என்பவர்தான் இதில் முக்கியமானவர். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் என்னை அழைத்து விசாரணை செய்துவிட்டு நேற்றுதான் அனுப்பினார்கள்” என்றார்.
http://dlvr.it/SbzM6G

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...