Skip to main content

“எந்தக் குறை செய்தாலும் மருத்துவர்களை ஒன்றும் செய்யக்கூடாது. ஏன்னா..?” - அமைச்சர் கே.என்.நேரு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் நேற்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “சமீபத்தில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்த ஒருசில கசப்பான சம்பவங்கள் நடந்தன. நீங்கள் கூட அரசு கடுமையாக நடந்து கொள்வதாக நினைத்திருப்பீர்கள். ஆனால், இந்த அரசு யாரையும் பழிவாங்கவோ, துன்புறுத்தவோ நினைத்ததில்லை. இந்தத் துறையை சீர்படுத்த வேண்டும் என்பதற்காகவே அப்படியான விஷயங்களை செய்ய வேண்டியதாயிற்று. இந்தத் துறை மக்களுக்கான மிக முக்கியமான துறை, எனவே மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென நினைக்கிறோம். நானும் இன்னொரு மூத்த அமைச்சரும் ஒரு மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் சென்றோம். மோசமான கட்டடத்தில் மருத்துவமனை இயங்கியதையும், மருந்துகள் இருப்பில் இல்லாதது குறித்தும் கேட்டோம். அப்போது சம்பந்தப்பட்ட மருத்துவர்களை இடமாற்றம் செய்வதாகச் சொல்லிவிட்டு வந்தோம். அந்த இடமாற்றத்தைக் கூட செய்ய வேண்டாமென முதல்வர் சொல்லிவிட்டார்” என்றார்.

நிகழ்ச்சி மேடை

அதையடுத்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “எந்தக் குறை செய்தாலும் மருத்துவர்களை நாம் ஒன்றும் செய்யக்கூடாது. ஏன்னா, சொந்தக்காரன் அண்ணன், தம்பி கூட  கொரோனாவுல விட்டுட்டு ஓடிட்டான். டாக்டர்கள் மட்டும் தான் இருந்தாங்க. நீங்க என்ன குற்றம் செய்தாலும் ஏற்றுக்கொள்வோம், தப்பில்லை. ஏனென்றால், உங்களுடைய உயிரை துச்சமாக மதித்து மக்களைக் காப்பாற்றினீர்கள்” என்றார்.

அமைச்சர்கள் கே.என்.நேரு & மா.சுப்பிரமணியன்

அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக வளைதளங்களில் பேசு பொருளாகியிருக்கிறது. மருத்துவர்களின் பணியை பாராட்டும் வகையில் பேசி இருந்தாலும், மக்களின் உயிர் தொடர்பான விசியம் என்பதால் பணியில் அலட்சியம் காட்டக்கூடாது என்பதை தான் அமைச்சர் பேசி இருக்க வேண்டும் என்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...