Skip to main content

“எந்தக் குறை செய்தாலும் மருத்துவர்களை ஒன்றும் செய்யக்கூடாது. ஏன்னா..?” - அமைச்சர் கே.என்.நேரு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் நேற்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “சமீபத்தில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்த ஒருசில கசப்பான சம்பவங்கள் நடந்தன. நீங்கள் கூட அரசு கடுமையாக நடந்து கொள்வதாக நினைத்திருப்பீர்கள். ஆனால், இந்த அரசு யாரையும் பழிவாங்கவோ, துன்புறுத்தவோ நினைத்ததில்லை. இந்தத் துறையை சீர்படுத்த வேண்டும் என்பதற்காகவே அப்படியான விஷயங்களை செய்ய வேண்டியதாயிற்று. இந்தத் துறை மக்களுக்கான மிக முக்கியமான துறை, எனவே மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென நினைக்கிறோம். நானும் இன்னொரு மூத்த அமைச்சரும் ஒரு மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் சென்றோம். மோசமான கட்டடத்தில் மருத்துவமனை இயங்கியதையும், மருந்துகள் இருப்பில் இல்லாதது குறித்தும் கேட்டோம். அப்போது சம்பந்தப்பட்ட மருத்துவர்களை இடமாற்றம் செய்வதாகச் சொல்லிவிட்டு வந்தோம். அந்த இடமாற்றத்தைக் கூட செய்ய வேண்டாமென முதல்வர் சொல்லிவிட்டார்” என்றார்.

நிகழ்ச்சி மேடை

அதையடுத்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “எந்தக் குறை செய்தாலும் மருத்துவர்களை நாம் ஒன்றும் செய்யக்கூடாது. ஏன்னா, சொந்தக்காரன் அண்ணன், தம்பி கூட  கொரோனாவுல விட்டுட்டு ஓடிட்டான். டாக்டர்கள் மட்டும் தான் இருந்தாங்க. நீங்க என்ன குற்றம் செய்தாலும் ஏற்றுக்கொள்வோம், தப்பில்லை. ஏனென்றால், உங்களுடைய உயிரை துச்சமாக மதித்து மக்களைக் காப்பாற்றினீர்கள்” என்றார்.

அமைச்சர்கள் கே.என்.நேரு & மா.சுப்பிரமணியன்

அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக வளைதளங்களில் பேசு பொருளாகியிருக்கிறது. மருத்துவர்களின் பணியை பாராட்டும் வகையில் பேசி இருந்தாலும், மக்களின் உயிர் தொடர்பான விசியம் என்பதால் பணியில் அலட்சியம் காட்டக்கூடாது என்பதை தான் அமைச்சர் பேசி இருக்க வேண்டும் என்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...