Skip to main content

``சட்டம், ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு" - உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் மோடி

ஹரியானா மாநிலம் சூரஜ்கோட்டில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்களின் கூட்டம் நேற்று முதல் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துக்கொண்டனர். தமிழ்நாடு சார்பாக சட்ட அமைச்சர் ரகுபதி இதில் கலந்துக்கொண்டார். இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தீவிரவாத குற்றங்களை தடுப்பது மத்திய, மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பு. அதற்காக வரும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ கிளைகளை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

அமித் ஷா

மேலும், நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கு எதிராகவும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, அரசு சாரா நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, "தேசத்தைக் கட்டமைப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சமப்பொறுப்பு இருக்கிறது. சட்டம், ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு. அதேசமயம், இது தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

மோடி

அவற்றை மேம்படுத்த அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு பேணி, அதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும். அதேபோன்று நாடு முன்னேறும்போது, அதனுடைய வளர்ச்சிப் பலன்கள் அடிமட்டத்தில் இருக்கும் கடைசி குடிமகனுக்கும் சென்றடைவதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்" எனப் பேசினார்.

தமிழகத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடந்து பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வின் இந்தக் கருத்துகள் கவனம் பெற்றிருகின்றன. எனினும், இருவன் கருத்துகளிலும் முரண் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...