Skip to main content

``யூடியூப் ஆரம்பிக்கும் முன் இதை கவனியுங்கள்''... அதிக வருமானம் ஈட்ட இதுதான் வழி!

`யூடியூப்’ பொழுதுபோக்கு தளமாக மட்டும் இல்லாமல், மக்களுக்குப் பணம் ஈட்டி தரும் தளமாகவும் மாறியிருக்கிறது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்களுக்கென யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அனைவரும் இந்த முயற்சியில் வெற்றி பெறுகிறார்களா என்றால், இல்லை என்று தான் கூறவேண்டும்.

Money (Representational Image)

சிலருக்குப் பணத்தை அள்ளி தெளிக்கும் யூடியூப், சில பேருக்குக் கதவைச் சாத்திக் கொள்கிறது. அப்படியெனில் சிலர் மட்டும் இதில் ஜெயிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா?

யூடியூப் ஆரம்பிக்கையில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஆரம்பித்த பின் கவனிக்கவேண்டியவை என்னென்ன போன்றவற்றை யூடியூப் மூலம் அதிகப் பணம் ஈட்டி வரும் சிலரிடம் பேசினோம். அவர்கள் கொடுத்த பயனுள்ள தகவல்கள் இதோ...

*உங்களின் ஆடியன்ஸ் தான் முதலில் முக்கியம். உங்கள் வட்டாரத்தில் உள்ள மக்களைக் கவரப் பிராந்திய மொழிகளையே பயன்படுத்துங்கள்.

*ஒரு வீடியோவை தயாரிக்கும் போது, 10 நிமிடமாவது வரும் வகையில், பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் விளம்பரங்கள் வரும். அதோடு நீங்கள் எதில் வல்லுநர்களாக இருக்கிறோர்களோ, உங்களுக்கு எது நன்றாக வருகிறதோ அதைச் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு இரண்டு வகையில் லாபம் கிடைக்கும்.

எப்படியெனில், நீங்கள் நல்ல ஓவியராக இருக்கும்பட்சத்தில், ஓவியம் வரையும் வீடியோக்களை அப்லோடு செய்கையில் வீடியோவிலிருந்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும். அதேசமயம் வீடியோவின் இறுதியில் இது போன்று உங்கள் புகைப்படத்தையும் வரைய என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என நம்பரைப் பதிவிட்டால், அதன் மூலம் உங்கள் பிசினஸும் வளரும்.

*உங்களின் வீடியோ எளிமையாக மற்றவர்களுக்குப் புரியும் வகையில் இருக்க வேண்டும். வீடியோவின் பேக்கிரௌண்ட், லைட்டிங் எல்லாம் தெளிவாக இருக்க வேண்டும். சேனல் பெயர், லோகோ கவரும் வகையில் இருக்க வேண்டும்.

*ஒரு சேனலில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்கள். சமையல் என்றால் சமையல், கற்பிப்பது என்றால் கற்பிப்பது.. எல்லாவற்றையும் கலந்தாற் போலச் செய்யாதீர்கள். இது மக்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். சிம்பிளாக சொன்னால், ஒரு டாபிக், ஒரு கன்டென்ட் போதும்.

*அதேபோல் வேறொரு சேனலில் உள்ள உங்களின் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் அவ்வப்போது கவனித்து செயல்படுங்கள்.

*கமெண்டுகளுக்கு பதிலளியுங்கள். அவர்களின் தேவையை வைத்து அடுத்த வீடியோவை உருவாக்குங்கள்.

*வீடியோக்களுக்கு வைக்கும் thumbnails முக்கியம். அதை வீடியோவிற்கு பொருத்தமாக, எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் வையுங்கள்.

*அதோடு உங்கள் வீடியோவை வெளியிடச் சரியான ஒரு நேரத்தை முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது வாரத்தில் திங்கள், வெள்ளியில் 6 மணி என்றால், தவறாமல் உங்கள் வீடியோ வெளியாகிவிட வேண்டும். யூடியூபில் வெளியிடுவதை அப்படியே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்யலாம்.

*கேமரா பயம் இருக்கக் கூடாது. அப்படி இருக்கும்பட்சத்தில், கண்ணாடி முன்பு நின்று நன்றாகப் பேசி பழகிக் கொள்ளுங்கள்.

*மக்களிடம் எளிதாக கனெக்ட்டாக, தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் சிலர் யூடியூபில் பங்கு பெற வைக்கின்றனர். அந்த யுக்தியையும் பயன்படுத்தலாம்.

*நீங்கள் செய்வது பர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை; சரியாக இருந்தாலே போதுமானது.


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...