Skip to main content

``யூடியூப் ஆரம்பிக்கும் முன் இதை கவனியுங்கள்''... அதிக வருமானம் ஈட்ட இதுதான் வழி!

`யூடியூப்’ பொழுதுபோக்கு தளமாக மட்டும் இல்லாமல், மக்களுக்குப் பணம் ஈட்டி தரும் தளமாகவும் மாறியிருக்கிறது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்களுக்கென யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அனைவரும் இந்த முயற்சியில் வெற்றி பெறுகிறார்களா என்றால், இல்லை என்று தான் கூறவேண்டும்.

Money (Representational Image)

சிலருக்குப் பணத்தை அள்ளி தெளிக்கும் யூடியூப், சில பேருக்குக் கதவைச் சாத்திக் கொள்கிறது. அப்படியெனில் சிலர் மட்டும் இதில் ஜெயிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா?

யூடியூப் ஆரம்பிக்கையில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஆரம்பித்த பின் கவனிக்கவேண்டியவை என்னென்ன போன்றவற்றை யூடியூப் மூலம் அதிகப் பணம் ஈட்டி வரும் சிலரிடம் பேசினோம். அவர்கள் கொடுத்த பயனுள்ள தகவல்கள் இதோ...

*உங்களின் ஆடியன்ஸ் தான் முதலில் முக்கியம். உங்கள் வட்டாரத்தில் உள்ள மக்களைக் கவரப் பிராந்திய மொழிகளையே பயன்படுத்துங்கள்.

*ஒரு வீடியோவை தயாரிக்கும் போது, 10 நிமிடமாவது வரும் வகையில், பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் விளம்பரங்கள் வரும். அதோடு நீங்கள் எதில் வல்லுநர்களாக இருக்கிறோர்களோ, உங்களுக்கு எது நன்றாக வருகிறதோ அதைச் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு இரண்டு வகையில் லாபம் கிடைக்கும்.

எப்படியெனில், நீங்கள் நல்ல ஓவியராக இருக்கும்பட்சத்தில், ஓவியம் வரையும் வீடியோக்களை அப்லோடு செய்கையில் வீடியோவிலிருந்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும். அதேசமயம் வீடியோவின் இறுதியில் இது போன்று உங்கள் புகைப்படத்தையும் வரைய என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என நம்பரைப் பதிவிட்டால், அதன் மூலம் உங்கள் பிசினஸும் வளரும்.

*உங்களின் வீடியோ எளிமையாக மற்றவர்களுக்குப் புரியும் வகையில் இருக்க வேண்டும். வீடியோவின் பேக்கிரௌண்ட், லைட்டிங் எல்லாம் தெளிவாக இருக்க வேண்டும். சேனல் பெயர், லோகோ கவரும் வகையில் இருக்க வேண்டும்.

*ஒரு சேனலில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்கள். சமையல் என்றால் சமையல், கற்பிப்பது என்றால் கற்பிப்பது.. எல்லாவற்றையும் கலந்தாற் போலச் செய்யாதீர்கள். இது மக்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். சிம்பிளாக சொன்னால், ஒரு டாபிக், ஒரு கன்டென்ட் போதும்.

*அதேபோல் வேறொரு சேனலில் உள்ள உங்களின் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் அவ்வப்போது கவனித்து செயல்படுங்கள்.

*கமெண்டுகளுக்கு பதிலளியுங்கள். அவர்களின் தேவையை வைத்து அடுத்த வீடியோவை உருவாக்குங்கள்.

*வீடியோக்களுக்கு வைக்கும் thumbnails முக்கியம். அதை வீடியோவிற்கு பொருத்தமாக, எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் வையுங்கள்.

*அதோடு உங்கள் வீடியோவை வெளியிடச் சரியான ஒரு நேரத்தை முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது வாரத்தில் திங்கள், வெள்ளியில் 6 மணி என்றால், தவறாமல் உங்கள் வீடியோ வெளியாகிவிட வேண்டும். யூடியூபில் வெளியிடுவதை அப்படியே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்யலாம்.

*கேமரா பயம் இருக்கக் கூடாது. அப்படி இருக்கும்பட்சத்தில், கண்ணாடி முன்பு நின்று நன்றாகப் பேசி பழகிக் கொள்ளுங்கள்.

*மக்களிடம் எளிதாக கனெக்ட்டாக, தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் சிலர் யூடியூபில் பங்கு பெற வைக்கின்றனர். அந்த யுக்தியையும் பயன்படுத்தலாம்.

*நீங்கள் செய்வது பர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை; சரியாக இருந்தாலே போதுமானது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...