Skip to main content

ஹிஜாப் எதிர்ப்பு பேரணி; பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! - இரானில் பதற்றம்

இரானில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி, மஹ்சா அமினி என்ற 22 வயது பெண், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில், போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்தார். அதைத் தொடர்ந்து, ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் இரான் முழுவதும் வெடித்தது. இந்தப் போராட்டத்தால் இரானில் அமைதியின்மை நிலவிவருகிறது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, மஹ்சா அமினி இறந்து 40 நாள்கள் ஆனதைக் குறிக்கும் வகையில் அவரது சொந்த ஊரில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனர். stunning video coming out of iran in mahsa amini’s hometown of saqez, thousands ignore govt road closures to walk to her gravesite 40 days after her death in the custody of iran’s morality policepic.twitter.com/u6EvbGQtjw— ian bremmer (@ianbremmer) October 26, 2022 அவர்கள்மீது இரானிய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, மனித உரிமைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ``ஹிஜாபுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவரும் எதிர்ப்பாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டனர். பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டை, மனித உரிமைகள் தொண்டு நிறுவனம் என்கிற முறையில் கண்டிக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது Singing the Kurdish song "Don't leave me alone" at #Zhina_Amini's tomb Wednesday, October 26#Kurdistan#MahsaAminipic.twitter.com/Cp2XoV0nfu— Hengaw Organization for Human Rights (@Hengaw_English) October 26, 2022 இந்த நிலையில், இரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ``மஹ்சா அமினியின் மரணம் காரணமாக ஏற்பட்ட சீற்றத்தால் நாடு தழுவிய அமைதியின்மை நிலவுகிறது. இந்தச் சீற்றத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் தூண்டுகின்றன. இஸ்லாமியக் குடியரசை நாசப்படுத்துவதற்காக அமைதியின்மையைத் தூண்டுபவர்கள் கடுமையான தண்டனைக்குத் தகுதியானவர்கள்" என்று எச்சரித்திருக்கிறார்.ஈரான் பெண்களுக்கு ஆதரவாக உலகம் முழுக்க தலைமுடியை வெட்டும் பெண்கள்... வலுக்கும் எதிர்ப்பு!
http://dlvr.it/Sbv6kB

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...