Skip to main content

ஹிஜாப் எதிர்ப்பு பேரணி; பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! - இரானில் பதற்றம்

இரானில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி, மஹ்சா அமினி என்ற 22 வயது பெண், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில், போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்தார். அதைத் தொடர்ந்து, ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் இரான் முழுவதும் வெடித்தது. இந்தப் போராட்டத்தால் இரானில் அமைதியின்மை நிலவிவருகிறது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, மஹ்சா அமினி இறந்து 40 நாள்கள் ஆனதைக் குறிக்கும் வகையில் அவரது சொந்த ஊரில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனர். stunning video coming out of iran in mahsa amini’s hometown of saqez, thousands ignore govt road closures to walk to her gravesite 40 days after her death in the custody of iran’s morality policepic.twitter.com/u6EvbGQtjw— ian bremmer (@ianbremmer) October 26, 2022 அவர்கள்மீது இரானிய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, மனித உரிமைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனமான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், ``ஹிஜாபுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவரும் எதிர்ப்பாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் குறைந்தது எட்டுப் பேர் கொல்லப்பட்டனர். பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டை, மனித உரிமைகள் தொண்டு நிறுவனம் என்கிற முறையில் கண்டிக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது Singing the Kurdish song "Don't leave me alone" at #Zhina_Amini's tomb Wednesday, October 26#Kurdistan#MahsaAminipic.twitter.com/Cp2XoV0nfu— Hengaw Organization for Human Rights (@Hengaw_English) October 26, 2022 இந்த நிலையில், இரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ``மஹ்சா அமினியின் மரணம் காரணமாக ஏற்பட்ட சீற்றத்தால் நாடு தழுவிய அமைதியின்மை நிலவுகிறது. இந்தச் சீற்றத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் தூண்டுகின்றன. இஸ்லாமியக் குடியரசை நாசப்படுத்துவதற்காக அமைதியின்மையைத் தூண்டுபவர்கள் கடுமையான தண்டனைக்குத் தகுதியானவர்கள்" என்று எச்சரித்திருக்கிறார்.ஈரான் பெண்களுக்கு ஆதரவாக உலகம் முழுக்க தலைமுடியை வெட்டும் பெண்கள்... வலுக்கும் எதிர்ப்பு!
http://dlvr.it/Sbv6kB

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...