Skip to main content

`திமுக ஆட்சிக்கு வரும்போது 46 லட்சம் லிட்டர் கொள்முதல்; இப்போ?’ -ஆவின் பால் உற்பத்தியாளர்கள் வேதனை

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் பால் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சங்க நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன், மாநில பொருளாளர் ராமசாமி கவுண்டர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்,

``தமிழகம் முழுவதும பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினமும் 36 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதேசமயம் தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 2.57 கோடி லிட்டர் பால் கொள்முதல் ஆகிறது. இந்தளவுக்கு பால் கொள்முதலில் வித்தியாசம் ஏற்படக் காரணம், ஆவினில் 1 லிட்டர் பசும்பாலுக்கு ரூ. 32-ம், எருமைப்பாலுக்கு ரூ.42 மட்டுமே உற்பத்தியாளர்களுக்கு தருகின்றனர். அதேசமயம் தனியார் பால் கொள்முதல் நிலையத்தினர் 1 லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42 முதல் 45-ம், எருமைப்பாலுக்கு ரூ.65-ம் தருகின்றனர். தற்போது அதிகரித்துள்ள தீவன விலை உயர்வு, பராமரிப்புச் செலவுகளால் ஆவின் மூலம் வழங்கப்படும் பால் விலையானது கால்நடை வளர்ப்போருக்கு கட்டுபடியாகவில்லை.

மாநிலத் தலைவர் ராஜேந்திரன்

எனவே ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு ரூ. 42-ம், எருமைப்பாலுக்கு ரூ.52 வீதம் பால் உற்பத்தியாளர்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 28-ம் தேதி முதல் மாநில அளவில் பால் உற்பத்தி நிறுத்த போராட்டத்துக்கு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் கடந்த 20-ம் தேதி எங்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைத்திருந்தது. அதன்படி கடந்த 21-ம் தேதி சென்னையில் பால்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலர்,  நிதித் துறை செயலர், வேளாண் துறை செயலர், கால்நடை பராமரிப்புத் துறை செயலர் உள்ளிட்டோருடன் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவில் நவம்பர் முதல் வாரத்துக்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதாகவும், அதுவரை பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை ஏற்று இப்போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு இணங்க நவம்பர் 7ஆம் தேதிக்குள் பாலுக்கு கட்டுபடியான விலை உயர்வை அளிப்பதாக தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நவம்பர் 7ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்களுக்கு பால் விலையை உயர்த்தினால் நுகர்வோருக்கு கூடுதல் விலைக்கு பால் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று அரசு கருதினால் தெலங்கானா, ஆந்திரம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் வழங்குவதைப் போல பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அரசு வழங்க முன்வர வேண்டும்.

கடந்த ஆண்டு 2021-ல் திமுக ஆட்சி பொறுப்புக்கு வரும்போது ஆவின் மூலம் தினமும் 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அதேசமயம் தனியார் மூலமாக தற்போது 2.57 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

மாநில பொருளாளர் ராமசாமி கவுண்டர்

ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1.50 மட்டுமே லாபம் கிடைக்கிறது. இதையே தனியாருக்கு வழங்கினால் லிட்டருக்கு ரூ.4 வீதம் லாபம் கிடைப்பதால் ஆவினுக்கு பால் விற்பனை செய்ய பால் உற்பத்தியாளர்கள் தயங்குகின்றனர். இதேநிலை நீடித்தால் ஆவின் நிறுவனத்தை லாபகரமாக இயக்க முடியாமல் போகும்.

பால் கொள்முதல் குறைந்து போனதால் இப்போதே ஆவினில் மாதந்தோறும் ரூ.430 கோடி வரையிலும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரி செய்ய பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுபடியான விலையை அளித்தால் மட்டுமே நஷ்டத்தில் உள்ள ஆவின் நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்ய முடியும்” என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...