Skip to main content

தென் கொரியா: ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 149 பேர் மரணம்!

கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பண்டிகைகள் முடக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து, எல்லா நாடுகளிலும் பண்டிகைகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தென் கொரியாவின் தலைநகர் சியோலிலுள்ள ஒரு முக்கியமான சந்தை ஒன்றில், ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்காகத் திரளான மக்கள் கூடியிருந்தனர் . நேற்று (29-10-22) இரவு சுமார் 1 லட்சம் மக்கள் மத்திய மாவட்டமான இட்டாவோனில் பண்டிகைக்காகக் கூடினர் என உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கொண்டாடத்தில் ஏற்பட்ட அதீத கூட்ட நெரிசல் காரணமாகப் பலர் மயங்கியுள்ளனர். அதையடுத்து, தீயணைப்புத் துறைக்கு இரவு 10:30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே 100-க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களும் மற்றவர்களுக்கு CPR முறையில் முதலுதவி செய்திருக்கின்றனர். சம்பவ இடத்தில் சுமார் 140 அவசர வாகனங்களில், 300 வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், துரதிஷ்டவசமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. பிடிஐ செய்தி நிறுவனத்தின் சமீபத்திய தரவுகளின்படி 149 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சுமார் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் காயமடைந்தவர்கள் 20 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் என்கிறது தென் கொரியாவின் உள்ளூர் ஊடகம். Absolute scenes of chaos in Itaewon right now as the Halloween night has turned into a major safety hazard with at least several party-goers being carried into ambulances. pic.twitter.com/JqVpbYiFrv— Hyunsu Yim (@hyunsuinseoul) October 29, 2022 இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஜனாதிபதி யூன் சுக்-யோல் செய்தித் தொடர்பாளர் மூலம் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், "பொது நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தலைமையிலான அனைத்து அமைச்சர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கும் வகையில் அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்தோனேசியா: கால்பந்து மைதானத்தில் வெடித்த கலவரம்; 129 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
http://dlvr.it/SbxCG8

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...