Skip to main content

`புதுச்சேரியில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தடை!' - அரசு அறிவிப்பு

மத்திய அரசு, 1967 சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (மத்திய சட்டம் 37) பிரிவு 3(1) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் அதன் கூட்டு மற்றும் துணை அமைப்புகளை சட்ட விரோதமான அமைப்புகள் என அறிவித்தது. இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் சட்ட விரோதமான அமைப்புகள் என்று புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா

இது குறித்து புதுவை தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா வெளியிட்டிருக்கும் உத்தரவில், ``புதுவை மாநிலத்திலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் தொடர்புடைய ரிஹேப் இந்தியா பவுண்டேஷன், கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, அனைத்திந்திய இமாம்கள் கவுன்சில், மனித உரிமைகள் அமைப்பின் தேசியக் கூட்டமைப்பு ,நேஷனல் பெண்கள் ஃப்ரன்ட், ஜூனியர் ஃப்ரன்ட் , எம்பவர் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ரீயேப் பவுண்டேஷன் கேரளா ஆகிய அமைப்புகளை மத்திய அரசின் உத்தரவுகளை மேற்கோள்காட்டி சட்டவிரோதமாக அமைப்புகளாக அறிவித்து, தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அமல்படுத்த புதுச்சேரி மாவட்ட, காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள், மாநகர முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உத்தரவு ஆணை.

மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (மத்திய சட்டம்) பிரிவு 7 மற்றும் 8-ன் கீழ் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறைக்கு புதுச்சேரி தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...