Skip to main content

பாஜக, இந்து அமைப்பு நிர்வாகிகள் இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு - கவனிக்கப்படும் அண்ணாமலை ‘மூவ்’

தொடர்க் குண்டு வீச்சு :

கோவை, திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், திண்டுக்கல், செங்கல்பட்டு, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளால் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவமும், அவர்களின் வாகனங்களை தீ வைத்து எரிக்கும் சம்பவமும் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பெட்ரோல் குண்டு வீச்சு

கோவையில் அதிகப்படியான இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்ததையடுத்து, அங்கு காவல்துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். தலைமைச் செயலர் இறையன்பு, சட்டம் - ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

பாஜக மனு:

இந்நிலையில், பாஜக அலுவலகம், அந்தக் கட்சியின் பிரமுகர்களின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எழுதிய கடிதத்தை, கட்சியின் நிர்வாகிகள் உள்துறைச் செயலரிடம் வழங்கியுள்ளனர். மேலும், இதுகுறித்து டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடமும் மனு வழங்கப்பட்டிருக்கிறது.

பாஜக மனு

இந்த சம்பவம் தொடர்பாக டி.ஜி.பி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பெட்ரோல் குண்டு வீசும் நபர்கள், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர், குற்றச்செயலில் ஈடுபடுவோர், தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். குற்றச்செயலில் ஈடுபடுவோர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. இதுவரை 250 பேரிடம் விசாரணை நடக்கிறது. கோவையில் கூடுதலாக 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீடு, கார் மீது கல்வீசியது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விளக்கம்:

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், ``இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு நடத்திவருகின்றோம். அமைதியைச் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாயும். நகரின் 28 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த அண்ணாமலை

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், ``தனக்கு தானே பெட்ரோல் குண்டு வீசி விளம்பரம் தேடிக் கொண்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறைச் சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தென் மண்டலத்தில் சுமார் 20 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல் பங்குகளில் கேன்களில் பெட்ரோல் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம்" என்று கூறியிருந்தார்.

முதல்வருக்கு எச்சரிக்கை:

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளரிடம் பேசிய அண்ணாமலை, ``தமிழ்நாட்டில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது. அதனால், அவர்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. இதனைப் பலமுறை கூறியுள்ளோம். தாக்குதல் நடத்துவதால் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. இந்த சூழல் தொடர்ந்தால், தொடர்களின் கோபத்துக்கு அரசு ஆளாகும். குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும். பாஜகவைச் சேர்ந்தவர்களை உளவுத்துறையினர் உன்னிப்பாக கண்காணிக்கிறார்கள். அண்ணாமலை என்ன செய்கிறார். என்ன சாப்பிடுகிறார் எனக் கண்காணிப்பவர்கள், கலவரம் செய்பவர்களைக் கண்காணிப்பதில் என்ன பிரச்னை.

கோவை பாஜக போராட்டம்

தேசத்துக்கு எதிராகப் பேசக்கூடிய சக்திகள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரை மணி நேரம் போதும். பாரதிய ஜனதா கட்சி அமைதியே விரும்பக் கூடிய கட்சி. தமிழ்நாடு அரசின் செயல்பாடு, காவல்துறையின் செயல்பாடுகளை அடுத்த இரண்டு நாள்களுக்குப் பார்ப்போம். அதன் பிறகு எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் எடுப்போம். பாஜக-வினரை கைதுசெய்வதில் இவர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், பாஜக நண்பர்கள், சகோதரர்கள்மீது நடத்தப்படக்கூடிய தாக்குதல்களில் தொடர்புடையவர்களைக் கைதுசெய்வதில் ஏன் இந்த மெத்தனப்போக்கு எனத் தெரியவில்லை. சட்டத்தை எங்களுடைய கையில் எடுப்பதற்கு எங்களுக்கு விருப்பம் கிடையாது. பாஜக அமைதியின் வழியில் செல்ல வேண்டும் என நினைக்கிறது. தொடர்ந்து இது போன்ற தாக்குதல்கள் நடந்தால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கிறோம்" என்று பேசியிருந்தார்.

போராட்டம் செய்யும் பாஜக:

திருப்பூர், கோவை சென்ற அண்ணாமலை, அங்கே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களுக்குச் சென்று நிர்வாகிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும், நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாகச் சேத மதிப்புகளை ஆய்வு நடத்தி அந்த தகவல்களை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளார். அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசியதாகவும் கூறியுள்ளார். அதோடு, இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, அண்ணாமலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடமும் தொலைபேசியில் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவையில் பாஜக போராட்டம்

கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், கோவையில் போராட்டம் நடத்த காவல்துறை தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவை மீறி, அண்ணாமலை தலைமையில், கோவை சிவானந்த காலனி பகுதியில் ``தமிழக சட்டம் ஒழுங்கில் மெத்தனப்போக்கை கடைப்பிடிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை வேண்டுமென்றே கைது செய்வதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்" நடைபெறும் என்று தமிழக பாஜக அறிவித்தபடி அங்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளால் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது குறித்து, அண்ணாமலை, பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பது, ஆய்வு மேற்கொள்வது, ஆய்வு செய்யக் குழு, கண்டன ஆர்ப்பாட்டம், மத்திய அரசுக்குக் கடிதம் என்று அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...