Skip to main content

ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சியாய் கழிக்க எவ்வளவு பணம் தேவை? வழிகாட்டும் நாணயம் விகடன் நிகழ்ச்சி!

ஓய்வுக்காலம் என்பது எல்லோருக்குமே மிக முக்கியமான காலம். 60 வயது வரை ஓடி ஓடி உழைத்து களைத்து போன நிலையில் கொஞ்சமேனும் இந்த வாழ்க்கையை ரசித்து வாழலாம் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்வது, பிடித்தமான விஷயங்களைச் செய்வது என எல்லோருக்குமே ஓய்வுக்காலத்தை கழிப்பதற்கு ஒரு திட்டம் இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட்

ஆனால் அதற்கு கணிசமான வருமானம் என்பது கட்டாயம் தேவை. எல்லோருக்கும் கடைசி வரை வருமானம் வரும் என்று சொல்ல முடியாது. எனவே ஓய்வுக்காலத்திலும் பண நெருக்கடி இல்லாமல் வாழ்வதற்குத்தான் ஓய்வுக்கால நிதியைத் தயார் செய்துகொள்வது அவசியம் என நிதி ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

அதேசமயம் எப்படி ஓய்வுக்காலத்துக்கான நிதியைத் தயார் செய்வது, எதில் சேமித்தால் எவ்வளவு கிடைக்கும். ஓய்வுக்காலத்தில் நம்முடைய நிதி தேவை எப்படி இருக்கும் என்பதையெல்லாம் பொருத்துதான் நம்முடைய முதலீட்டையும் திட்டமிட வேண்டும்.

அந்த வகையில் ஓய்வுக்காலத்துக்கான நிதியை சேர்ப்பதற்கு மியூச்சுவல் ஃபண்ட் ஒரு சிறந்த வழி. பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்கள் சார்ந்த ஃபண்டுகள் மூலம் நம்முடைய முதலீட்டை திட்டமிடலாம்.

அதை எப்படி திட்டமிடுவது யாருக்கு எந்த ஃபண்ட் சரியாக இருக்கும். எப்படி மியூச்சுவல் ஃபண்ட் ஓய்வுக் கால நிதியை உருவாக்க உதவுகிறது என்பதையெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம்.

நாணயம் விகடன் நிகழ்ச்சி

அதற்காக நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து 'உங்கள் ஓய்வுக் காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் எப்படி உதவும்?.' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை வரும் அக்டோபர் 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் விரிவாக மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் ஓய்வுக்கால நிதியை உருவாக்குவது பற்றியும் பேசுகிறார்கள்.

உற்சாகமான ஓய்வுக் காலம்

இதில் கலந்துகொள்ள முற்றிலும் அனுமதி இலவசம். இருந்த இடத்திலிருந்தே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன் அடையலாம். இதற்குப் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...