Skip to main content

ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சியாய் கழிக்க எவ்வளவு பணம் தேவை? வழிகாட்டும் நாணயம் விகடன் நிகழ்ச்சி!

ஓய்வுக்காலம் என்பது எல்லோருக்குமே மிக முக்கியமான காலம். 60 வயது வரை ஓடி ஓடி உழைத்து களைத்து போன நிலையில் கொஞ்சமேனும் இந்த வாழ்க்கையை ரசித்து வாழலாம் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்வது, பிடித்தமான விஷயங்களைச் செய்வது என எல்லோருக்குமே ஓய்வுக்காலத்தை கழிப்பதற்கு ஒரு திட்டம் இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட்

ஆனால் அதற்கு கணிசமான வருமானம் என்பது கட்டாயம் தேவை. எல்லோருக்கும் கடைசி வரை வருமானம் வரும் என்று சொல்ல முடியாது. எனவே ஓய்வுக்காலத்திலும் பண நெருக்கடி இல்லாமல் வாழ்வதற்குத்தான் ஓய்வுக்கால நிதியைத் தயார் செய்துகொள்வது அவசியம் என நிதி ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

அதேசமயம் எப்படி ஓய்வுக்காலத்துக்கான நிதியைத் தயார் செய்வது, எதில் சேமித்தால் எவ்வளவு கிடைக்கும். ஓய்வுக்காலத்தில் நம்முடைய நிதி தேவை எப்படி இருக்கும் என்பதையெல்லாம் பொருத்துதான் நம்முடைய முதலீட்டையும் திட்டமிட வேண்டும்.

அந்த வகையில் ஓய்வுக்காலத்துக்கான நிதியை சேர்ப்பதற்கு மியூச்சுவல் ஃபண்ட் ஒரு சிறந்த வழி. பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்கள் சார்ந்த ஃபண்டுகள் மூலம் நம்முடைய முதலீட்டை திட்டமிடலாம்.

அதை எப்படி திட்டமிடுவது யாருக்கு எந்த ஃபண்ட் சரியாக இருக்கும். எப்படி மியூச்சுவல் ஃபண்ட் ஓய்வுக் கால நிதியை உருவாக்க உதவுகிறது என்பதையெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம்.

நாணயம் விகடன் நிகழ்ச்சி

அதற்காக நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து 'உங்கள் ஓய்வுக் காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் எப்படி உதவும்?.' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை வரும் அக்டோபர் 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் விரிவாக மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் ஓய்வுக்கால நிதியை உருவாக்குவது பற்றியும் பேசுகிறார்கள்.

உற்சாகமான ஓய்வுக் காலம்

இதில் கலந்துகொள்ள முற்றிலும் அனுமதி இலவசம். இருந்த இடத்திலிருந்தே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன் அடையலாம். இதற்குப் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...