Skip to main content

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு: 5 ஆயிரம் அலுவலர்கள் கொண்ட குழு அமைப்பு!

வடகிழக்கு பருவ மழை தொடங்கவிருப்பதை அடுத்து, அதற்கான முன்னேற்பாடுகள் சார்ந்து வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,  பருவமழைக் காலத்தில் பயிர்கள் சேதமடையாமல் தடுக்க எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? பூச்சித்தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்குத் தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகளின் கையிருப்பு, உரங்களின் கையிருப்பு, தென்னை மரங்கள் சாயாமல் எப்படி தடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கப்பட்டது. 

இந்த ஆலோசனைக்கூட்டம் குறித்துப் பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீசெல்வம்...

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

``வடகிழக்கு பருவமழைய எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 5000 அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், பருவமழை காலத்தில் தேவையான பணிகளை செய்தும், கண்காணிப்புப் பணியிலும் ஈடுபடவிருக்கின்றனர். தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை  அகற்ற வேளாண்மை பொறியியல் துறை சார்பில் இயந்திரங்கள் மற்றும் காற்றினால் மரங்கள் சாய்ந்தால் அவற்றை அகற்ற ஜே.சி.பி உள்ளிட்ட இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

விதை நெல், உரங்கள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் பூச்சி தாக்குதல் இருக்கும் என்பதால் பூச்சிக்கொல்லிகளும் கையிருப்பில் உள்ளன. தென்னை மரங்கள் சாயாமல் இருக்க மரத்தின் மட்டைகளை வெட்டி பாரத்தை குறைக்க வேண்டும். மண்ணால் அணைகட்ட வேண்டும் என்பது தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தவிருக்கிறோம். சேதங்களை கணக்கெடுக்கும் பணிகளை இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மேற்கொள்வார்கள்.

வேளாண்

6 மாத காலத்தில் ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 5 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் விளை நிலமாக மாற்றப்படுள்ளது" என்று தெரிவித்த அவர், ``இந்த ஆண்டில் 40 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் காப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தாமாக முன் வந்து காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்" என்று கூறினார். 


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...