Skip to main content

25 ஆண்டு கடந்து சாதனை, 8 வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்கள்: வருமானம் எவ்வளவு தெரியுமா?

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் 8 வரிச் சேமிப்பு திட்டங்கள் 25 ஆண்டுகள் கடந்து சாதனை படைத்துள்ளன. இந்த 25 ஆண்டுகளில் இந்த அனைத்து ஃபண்ட்களும் பணவீக்க விகிதத்தை விட கூடுதல் வருமானத்தைதான் தந்திருக்கின்றன. இந்த ஃபண்ட்கள் ஆண்டுக்கு சராசரியாக 9.5% தொடங்கி 23% வரை வருமானம் கொடுத்திருக்கின்றன.

ஆர். வெங்கடேஷ், நிறுவனர், https://ift.tt/6iamDy8

25 ஆண்டுகள் நிறைவு...

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை, மொத்தம் 37 வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை கொண்டுள்ளன. இதில் 8 ஃபண்ட்கள் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றன. இதில் டாப் ஆறு ஃபண்ட்கள் 15% முதல் 23% வருமானத்தை கொடுத்திருக்கின்றன.

கடந்த ஆண்டுகளில் இந்த எட்டு ஃபண்ட்களும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்திருக்கின்றன. இருந்தாலும் அவற்றில் பல நல்ல வருமானத்தை தந்திருக்கின்றன. 

முதல் இடத்தில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி டாக்ஸ்சேவர் ஃபண்ட், ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 23.30% வருமானத்தை கொடுத்திருக்கிறது. அடுத்த இடத்திலிருக்கும் ஆதித்ய பிர்லா சன்லைஃப் டாக்ஸ் ரிலிஃப் 96 ஃபண்ட் ஆண்டுக்கு சராசரியாக 22% வருமானத்தை கொடுத்திருக்கிறது.

அடுத்த இடங்களில் டாடா இந்தியா டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் (18.45%), சுந்தரம் டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் (18.20%), எஸ்.பி.ஐ லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் (16.10%) உள்ளன. மீதி ஃபண்ட்கள் கொடுத்திருக்கும் வருமானத்தை அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

அட்டவணை: கால் நூற்றாண்டு கடந்த இ.எல்.எஸ். எஸ் ஃபண்ட்கள்..!

இந்த ஃபண்ட்களின் வருமானம்தான் எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, முதலீட்டுக்கு வரிச் சேமிப்பு ஃபண்டை தேர்வு செய்யும் போது, அதன் முதலீட்டுக் கலவையில் இடம் பெற்றிருக்கும். நிறுவனப் பங்குகளை பார்த்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். மேலும், வரிச் சேமிப்புக்காக மேற்கொள்ளும் முதலீட்டை ஒரே ஃபண்டில் மேற்கொள்ளாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பிரித்து மேற்கொள்வது லாபரமாக இருக்கும். இந்த ஃபண்டில் குறைந்தபட்ச மொத்த முதலீடு மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.500 என்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட ஃபண்ட்களில் தாராளமாக முதலீடு செய்ய முடியும்.   

வருமான வரிச் சலுகை மற்றும் வரி அணுகூலம்..!

இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் ரூ. 1.5 லட்சம் கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டமான இ.எல்.எஸ். எஸ் ஃபண்ட்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை அளிக்கப்படும். இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டை மூன்றாண்டுக்கு எடுக்க முடியாது.

இண்டெக்ஸ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்–ஐ பேசிவ் பிரிவில் அறிமுகப்படுத்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு செபி அமைப்பு அண்மையில் அனுமதி வழங்கி இருக்கிறது.

வரி சேமிப்பு முதலீடு

இந்த வரிச் சேமிப்பு ஃபண்டில் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்துக்கு ஒருவர், எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கு ஏற்ப வரிக் கட்ட வேண்டும். நீண்ட கால மூலதன ஆதாயத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ. 1 லட்சம் வரை வரி இல்லை. அதற்கு மேற்பட்ட மூலதன ஆதாயத்துக்கு 10% வரி கட்டினால் போதும்.   

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்யும் போதே அவரவரின் வரி வரம்புக்கு ஏற்ப 5%, 20%, 30% (பழைய வரி முறையில்) வரி மிச்சமாகி கூடவே பணவீக்க விகித்தை விட் நல்ல வருமானம் என்கிற போது இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் முதலீட்டை மிகச் சிறந்த முதலீடு என்றுதான் சொல்ல வேண்டும். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...