Skip to main content

25 ஆண்டு கடந்து சாதனை, 8 வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்கள்: வருமானம் எவ்வளவு தெரியுமா?

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் 8 வரிச் சேமிப்பு திட்டங்கள் 25 ஆண்டுகள் கடந்து சாதனை படைத்துள்ளன. இந்த 25 ஆண்டுகளில் இந்த அனைத்து ஃபண்ட்களும் பணவீக்க விகிதத்தை விட கூடுதல் வருமானத்தைதான் தந்திருக்கின்றன. இந்த ஃபண்ட்கள் ஆண்டுக்கு சராசரியாக 9.5% தொடங்கி 23% வரை வருமானம் கொடுத்திருக்கின்றன.

ஆர். வெங்கடேஷ், நிறுவனர், https://ift.tt/6iamDy8

25 ஆண்டுகள் நிறைவு...

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை, மொத்தம் 37 வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை கொண்டுள்ளன. இதில் 8 ஃபண்ட்கள் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றன. இதில் டாப் ஆறு ஃபண்ட்கள் 15% முதல் 23% வருமானத்தை கொடுத்திருக்கின்றன.

கடந்த ஆண்டுகளில் இந்த எட்டு ஃபண்ட்களும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்திருக்கின்றன. இருந்தாலும் அவற்றில் பல நல்ல வருமானத்தை தந்திருக்கின்றன. 

முதல் இடத்தில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி டாக்ஸ்சேவர் ஃபண்ட், ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 23.30% வருமானத்தை கொடுத்திருக்கிறது. அடுத்த இடத்திலிருக்கும் ஆதித்ய பிர்லா சன்லைஃப் டாக்ஸ் ரிலிஃப் 96 ஃபண்ட் ஆண்டுக்கு சராசரியாக 22% வருமானத்தை கொடுத்திருக்கிறது.

அடுத்த இடங்களில் டாடா இந்தியா டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் (18.45%), சுந்தரம் டாக்ஸ் சேவிங்ஸ் ஃபண்ட் (18.20%), எஸ்.பி.ஐ லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் (16.10%) உள்ளன. மீதி ஃபண்ட்கள் கொடுத்திருக்கும் வருமானத்தை அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

அட்டவணை: கால் நூற்றாண்டு கடந்த இ.எல்.எஸ். எஸ் ஃபண்ட்கள்..!

இந்த ஃபண்ட்களின் வருமானம்தான் எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, முதலீட்டுக்கு வரிச் சேமிப்பு ஃபண்டை தேர்வு செய்யும் போது, அதன் முதலீட்டுக் கலவையில் இடம் பெற்றிருக்கும். நிறுவனப் பங்குகளை பார்த்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். மேலும், வரிச் சேமிப்புக்காக மேற்கொள்ளும் முதலீட்டை ஒரே ஃபண்டில் மேற்கொள்ளாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பிரித்து மேற்கொள்வது லாபரமாக இருக்கும். இந்த ஃபண்டில் குறைந்தபட்ச மொத்த முதலீடு மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.500 என்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட ஃபண்ட்களில் தாராளமாக முதலீடு செய்ய முடியும்.   

வருமான வரிச் சலுகை மற்றும் வரி அணுகூலம்..!

இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் ரூ. 1.5 லட்சம் கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டமான இ.எல்.எஸ். எஸ் ஃபண்ட்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை அளிக்கப்படும். இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டை மூன்றாண்டுக்கு எடுக்க முடியாது.

இண்டெக்ஸ் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்–ஐ பேசிவ் பிரிவில் அறிமுகப்படுத்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு செபி அமைப்பு அண்மையில் அனுமதி வழங்கி இருக்கிறது.

வரி சேமிப்பு முதலீடு

இந்த வரிச் சேமிப்பு ஃபண்டில் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்துக்கு ஒருவர், எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கு ஏற்ப வரிக் கட்ட வேண்டும். நீண்ட கால மூலதன ஆதாயத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ. 1 லட்சம் வரை வரி இல்லை. அதற்கு மேற்பட்ட மூலதன ஆதாயத்துக்கு 10% வரி கட்டினால் போதும்.   

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்யும் போதே அவரவரின் வரி வரம்புக்கு ஏற்ப 5%, 20%, 30% (பழைய வரி முறையில்) வரி மிச்சமாகி கூடவே பணவீக்க விகித்தை விட் நல்ல வருமானம் என்கிற போது இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் முதலீட்டை மிகச் சிறந்த முதலீடு என்றுதான் சொல்ல வேண்டும். 


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...