Skip to main content

IND v PAK: பலே பாண்டியா; பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா! அந்தச் சிக்கலான விதிமுறையைக் கவனித்தீர்களா?

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பை டி20 போட்டி நேற்று நடந்து முடிந்திருக்கிறது.

இறுதிவரை பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியை இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன்மூலம் கடந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் வாங்கிய அடிக்குச் சரியான பதிலடியை இந்தியா கொடுத்திருக்கிறது.

நேற்றையப் போட்டியின் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு சிங்கிளைத் தவிர்த்திருப்பார். எதிர்முனையில் தினேஷ் கார்த்திக் கொஞ்சம் ஏமாற்றமுற, 'நான் பார்த்துக்குறேன்' என்பது போல ஹர்திக் பாண்டியா கண்ணசைத்திருப்பார். அதற்கடுத்த பந்தையே பெரிய சிக்ஸராக்கிச் சொன்னதை போலவே ஆட்டத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். சொல்லப்போனால் கடைசி ஓவரில் மட்டுமில்லை. நேற்றைய போட்டி முழுவதுமே 'ஒண்ணும் பிரச்சனையில்ல. நான் பார்த்துக்குறேன்' என்கிற மோடில்தான் ஹர்திக் பாண்டியா சுற்றித்திரிந்தார். பௌலிங்கில் முக்கியமான கட்டத்தில் முக்கியமான மூன்று விக்கெட்டுகள். பேட்டிங்கில் ஏறக்குறைய 200 ஸ்ட்ரைக் ரேட்டில் கடைசி ஓவர் ஃபினிஷிங். இதுபோக அவரின் வழக்கமான ஃபீல்டிங் மாயாஜாலங்கள் வேறு. எல்லாவிதத்திலும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் மிகச்சிறப்பாக பெர்ஃபார்ம் செய்து அணியின் வெற்றியில் முக்கியப் பங்காக இருந்தார்.

ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் பெரும்பாலும் ஸ்கோரை சேஸிங் செய்யும் அணிகளே வெல்லும். அதற்கேற்ற வகையில் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவே டாஸை வென்று ஃபீல்டிங் செய்யப்போவதாக அறிவித்தார்.

பாகிஸ்தான் அணி பேட்டிங். பாபர் அசாமும் ரிஸ்வானும் ஓப்பனர்களாக வந்தனர். கடந்த ஆண்டு இதே இடத்தில் உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக இருவரும் நின்று ஆடி விக்கெட்டே விடாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெல்ல வைத்திருந்தனர். அதேமாதிரியான ஒரு சம்பவத்தை நிகழ்த்தும் பொருட்டே இருவரும் தங்களின் வழக்கமான நிதான ஆட்டத்தைத் தொடங்கினர்.

Bhuvaneswar Kumar

இவர்களை இருவரையுமே சீக்கிரம் வீழ்த்துவதுதான் இந்திய அணியின் முதல் நோக்கமாக இருந்தது. இந்திய அணியின் முயற்சிக்கு பாபர் அசாம் இரையானார். புவனேஷ்வர் குமார் தனது முதல் ஸ்பெல்லிலேயே பாபர் அசாமை வெளியேற்றினார்.

நல்ல வேகத்தில் புவனேஷ்வர் குமார் வீசிய ஷார்ட் பிட்ச் டெலிவரியை ஃபைன் லெக்கில் பெரிய ஷாட்டாக்க முயன்று பாபர் அசாம் 10 ரன்களில் கேட்ச் ஆகியிருந்தார். ஷார்ட் ஃபைன் லெக் வட்டத்திற்குள் நின்றதால் எளிதில் ஃபீல்டை க்ளியர் செய்து பவுண்டரியாக்கிவிடலாம் என்கிற பாபர் அசாமின் கணக்கு பிழையாகிப் போனது. ஆனால், பாபர் அசாமின் இந்த விக்கெட்தான் இந்திய அணிக்கான ப்ளூ ப்ரிண்ட்டாகவும் மாறியது.

தொடர்ச்சியாக வலுவான ஷார்ட் பிட்ச் டெலிவரிகளை வீசி பாகிஸ்தானின் பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர். ஆவேஷ் கான் ஒரு ஷார்ட் பாலில் ஃபகர் ஜமானை எட்ஜ் எடுத்தார்.

ஹர்திக் பாண்டியா வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளுமே ஷார்ட் பிட்ச் டெலிவரியில் கிடைத்தவைதான். 142, 141, 139 கி.மீ ஹர்திக் விக்கெட் வீழ்த்திய மூன்று பந்துகளின் வேகப்பட்டியல் இது.
Hardik Pandya

நல்ல வேகத்தில் ஷாட் ஆடுவதற்கான இடத்தைக் கொடுக்காமல் பேட்ஸ்மேன் மீது மோதுவது போல வீசி திணறடித்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரிஸ்வான், இஃப்திகார், குஷ்தில் இவர்கள் மூவருமே ஹர்திக்கின் ஓவரில் அவுட் ஆகினர். இதில் ரிஸ்வானின் விக்கெட் ரொம்பவே முக்கியமானது. நன்றாக செட்டில் ஆகி நின்று 43 ரன்களை அடித்திருந்தார். அவர் கடைசி வரை நின்றிருந்தால் பாகிஸ்தான் ஒரு சவாலான ஸ்கோரையே எடுத்திருக்கும். ஹர்திக் அதைத் தடுத்தார்.

13 மற்றும் 15 இந்த இரண்டு ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். சீராக முன்னேறிக் கொண்டிருந்த பாகிஸ்தான் நிலைகுலைந்து போனதும் இங்கேதான்.

முக்கியமான விக்கெட்டுகளை ஹர்திக் வீழ்த்திக் கொடுக்க அடுத்தக்கட்ட விக்கெட்டுகளை புவனேஷ்வரும் அர்ஷ்தீப்பும் மளமளவென வீழ்த்தினர். 19.5 ஓவர்களில் 147 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணிக்கு 148 ரன்கள் டார்கெட். எளிய டார்கெட்தான். ஆனால், இந்திய அணியின் சேஸிங் அத்தனை எளிதாக அமையவில்லை. அறிமுக வீரர் நசீம் ஷா வீசிய முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் ஸ்டம்புகள் தெறிக்க டக் அவுட் ஆனார். கோலியும் ரோஹித்தும் திணறித்திணறி முன்னேற முயன்றனர். அவர்களுமே ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றினர். டி20 போட்டிகளில் கோலி மற்றும் ரோஹித்தின் சமீபத்திய ரெக்கார்டுகளை எடுத்துப் பார்த்தால் இருவருமே ஸ்பின்னர்களுக்கு எதிராக கடுமையாகத் திணறுகிறார்கள். இடதுகை ஸ்பின்னரான நவாஸின் அடுத்தடுத்த பந்துகளில் ரோஹித்தும் கோலியும் ஒரே மாதிரியாக பெரிய ஷாட்டுக்கு முயன்று பவுண்டரி லைனில் கேட்ச் ஆகினர்.

நவாஸை சமாளிப்பதற்காக ஜடேஜா, சூர்யகுமார் யாதவிற்கு முன்பாக இறக்கப்பட்டார். இது ஓரளவுக்கு பலனளித்தது. ஜடேஜா கடைசி ஓவர் வரை நின்றார். எப்படியாயினும் ஆட்டத்தை அதிரடியாக இந்தியா பக்கம் திருப்பியது ஹர்திக்தான். ஹரிஷ் ரவுஃப் வீசிய 19வது ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளை ஹர்திக் அடித்திருந்தார். இது கடைசி ஓவருக்கான அழுத்தத்தைக் குறைத்தது. ஸ்பின்னரான நவாஸ் வீசிய கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்திலேயே ஜடேஜா போல்டானார். ஆனாலும், ஹர்திக் விடவில்லை.

Hardik Pandya
தினேஷ் கார்த்திக் சிங்கிள் தட்டிக் கொடுக்க வின்னிங் ஷாட்டாக மிட் விக்கெட்டில் ஒரு பெரிய சிக்ஸரைப் பறக்கவிட்டு வெற்றியைத் தேடித்தந்தார். 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆகவும் இருந்தார்.

சதி செய்த விதிமுறை

வீரர்களைத் தாண்டி விதிமுறை ஒன்றும் நேற்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியா, பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே பந்துவீசுவதற்கு மிக அதிக நேரத்தை எடுத்துக் கொண்டனர். இதனால் இரு அணிகளின் பந்துவீச்சின் போதுமே கடைசி சில ஓவர்களில் வட்டத்திற்குள் கூடுதலாக ஒரு ஃபீல்ட்ரை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் டெத் ஓவர்களில் அவுட் ஃபீல்டில் வழக்கத்தை விட ஒரு ஃபீல்டர் குறைவாக 4 ஃபீல்டர்கள் மட்டுமே இருந்தனர். இந்த 'Slow over rate penalty'-யால் இந்திய அணியை விட பாகிஸ்தான் அதிகமாக பாதித்க்கப்பட்டது. காரணம், ஹர்திக். அவர் க்ரீஸில் இருந்த கடைசிக்கட்ட ஓவர்களில் பாகிஸ்தான் அவுட் ஃபீல்டில் ஒரு ஃபீல்டரைக் குறைவாகவே வைத்திருந்தது. இதனால் ஹர்திக்கால் ஒன்றிரண்டு பவுண்டரிகளை எளிதில் அடிக்க முடிந்திருந்தது. இந்த பெனால்டி இல்லாமல் இருந்திருந்தால் ஆட்டம் இன்னும் பரபரப்பாகியிருக்கும்.

Hardik Pandya
எதிர்பார்த்தபடியே ஹர்திக் பாண்டியாவிற்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. `கடைசி ஓவரில் 15 ரன்களைக் கூட அடித்திருப்பேன்' என ஹர்திக் நம்பிக்கையோடு கூறியிருந்தார். ஆக, அந்த பெனால்டி சௌகரியம் வாய்க்காமல் போயிருந்தால் கூட ஹர்திக் சம்பவம் செய்திருப்பார். பலே பாண்டியா!

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...