Skip to main content

ஒன் பை டூ

இராஜீவ் காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க.

“பொய்யான கருத்து... புதிய கல்விக் கொள்கை இந்தியா வைக் கற்காலத்துக்கு மட்டுமே கொண்டு செல்லும். அனைவருக்கும் கல்வி என்பதே பெரும் போராட்டத்துக்குப் பின்புதான் இங்கே சாத்தியமாகியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை மீண்டும் குருகுலக் கல்விக்குத்தான் அடித்தளம் அமைக்கிறது. அது எங்களுக்குத் தேவையில்லை. முதலில் புதிய கல்விக் கொள்கை கொண்டுவருவதற்கான அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தது யார்... இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரதமருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுக்கவில்லை. மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி, இப்போது பொதுப் பட்டியலில் இருக்கிறது. பொதுப் பட்டியலில் இருக்கும்போது, ஒன்றிய அரசு மாநில அரசுடன் சேர்ந்து மட்டுமே ஒரு சட்டத்தைக் கொண்டுவர முடியும். இவர்கள் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவருவது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம். அரசியலமைப்புச் சட்டத்தில், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு இருந்தது. `கல்வியிலும் இட ஒதுக்கீடு வேண்டும்’ என்று குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். பல்வேறு தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 1951-ம் ஆண்டு முதன்முறையாக அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. அப்படிக் கொண்டுவந்த இட ஒதுக்கீட்டால் தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பயன் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்போதுள்ள எங்கள் மாநிலத்தின் கல்விக் கொள்கை சரியானதாகவே இருக்கிறது!”

இராஜீவ் காந்தி
நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க.

“உண்மையைச் சொல்லியிருக்கிறார். புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்துவிட்டால், கல்வித் துறையிலுள்ள லஞ்ச லாவண்யம், ஊழல்கள் அனைத்துமே ஒழிக்கப்பட்டுவிடும். அதனால்தான் ஒருசிலர் இந்தக் கொள்கைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை என்பது புதிதாக எங்கிருந்தோ வந்தது கிடையாது. முன்பிருந்த கொள்கையில், மாணவர்களின் நலனுக்கான ஒருசில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு எதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எப்படிச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதைத்தான் சொல்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு ஆசிரியர்கள், அவர்களை எப்படி மேம்படுத்த வேண்டும், பள்ளிகளின் கட்டமைப்பு, மாணவர்கள் எளிதாகக் கல்வி கற்கும் விதம் போன்றவற்றைத்தான் சொல்கிறது. இதில், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்குத் தாய்மொழிவழிக் கல்வி கட்டாயமாகிறது. இதனால், அவர்கள் தாய்மொழியை அறிந்துகொள்ள வாய்ப்பு உருவாகிறது. வெளிநாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் நம் நாட்டுக்கு வந்து, உயர் தொழில்நுட்பத்தை இங்குள்ள மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இப்படி எத்தனையோ நன்மைகள் புதிய கல்விக் கொள்கையில் இருக்கின்றன!”


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...