Skip to main content

`நான் ஒன்னும் வேலைக்காரன் இல்ல’ - மாற்றுத்திறனாளியிடம் கடுகடுத்த சாத்தூர் எம்.எல்.ஏ - நடந்தது என்ன?

சாத்தூர் சட்டமன்ற தொகுதி காயல்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமலைக்குமார், மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி பாண்டீஸ்வரி, மாற்றுத்திறனாளி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். பிழைப்புக்காக திருமலைக்குமார் - பாண்டீஸ்வரி இருவரும் ஊறுகாய் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலில் விருத்திக்காக மூன்றுச்சக்கர வாகனம் வாங்க எண்ணிய திருமலைக்குமார், இதற்காக உதவிக்கேட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பல முறை விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது.

ஆவண நகல்

இதைத்தொடர்ந்து, கடந்தமாதம் காயில்பட்டிக்கு வந்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமனிடம், மாற்றுத்திறனாளி திருமலைக்குமார் தனக்கு மூன்றுச்சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், மனுக்கொடுத்து 20 நாள்களுக்கு மேலான நிலையில், மனுவின் நிலைக்குறித்து அறியவும் நினைவூட்டலுக்காகவும் மாற்றுத்திறனாளி திருமலைக்குமார், மதிமுக எம்.எல்.ஏ.ரகுராமனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

நகல்

அப்போது பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ.ரகுராமன், "அவசரப்பட்டால் இங்கு எந்த வேலையும் நடக்காது. நான் ஒன்னும் உங்க வேலைக்காரன் கிடையாது. இப்பல்லாம் சூழ்நிலையே மாறிப்போச்சு. வேலைக்காரன்கிட்ட பேசுறதுக்கு கூட யோசிச்சு தான் பேசவேண்டியதாயிருக்கு. அதிகாரிங்களாம் நாம சொன்ன உடனே செய்ற ஆளும் கிடையாது. என்னால உங்க கூட இருந்து உதவித்தான் பண்ணமுடியும். நீங்க, இப்படியெல்லாம் அவசரப்படுத்துறதா இருந்தா நீங்க வேற ஆள் வச்சு பாத்துக்கோங்க. நான் உங்க ஃபைல்ல எடுத்து வெளியே வச்சிருதேன். நீங்க வேற ஆள் பாத்துகோங்க" என அலட்சியப்படுத்தி பதில் கூறியுள்ளார். இதுதொடர்பான ஆடியோ வெளியாகி விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி திருமலைக்குமாரிடம் பேசினோம், ``மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதற்காகவே மாநில அரசு நலத்திட்டத்தின் மூலமாக பல்வேறு உதவிகள் செய்துவருகிறது‌. அதன்படியே, எனக்கு மூன்றுச்சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு விண்ணப்பித்தேன். அரசு மனதுவைத்து மூன்றுச்சக்கர வாகனத்தை வழங்குமெனில் அது என்னுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள பேருதவியாக இருக்கும். இந்த பேருதவியை செய்துதருவார் என நம்பியே எம்.எல்.ஏ.விடம் மனுக் கொடுத்தேன். மனுவின் நிலை என்னவாச்சு எனத்தெரிந்துகொள்வதற்காக போன் செய்து பேசியதற்கு, அவர் அளித்த பதில் எனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது" என்றார்.

சாத்தூர் எம்.எல்.ஏ.ரகுராமனிடம் பேசினோம், "பதவியேற்ற நாள்முதல் தொகுதி மக்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்து வருகிறேன். பல்வேறு மக்கள் பணிகளுக்கும் சாத்தூர் தொகுதியை முன்னோடியாக திகழச்செய்துள்ளேன். ஆனால் இந்த விவகாரம் என்னை பெரும் சங்கடத்திற்குள்ளாக்குகிறது. மாற்றுத்திறனாளி திருமலைக்குமார் விஷயமாக ஏற்கெனவே மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பேசியுள்ளேன். குறைந்தது 70 சதவிகிதம் அளவுக்கு மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு தான் மூன்றுச்சக்கர வண்டி வழங்கமுடியும் என அதிகாரிகள் சொல்லிவிட்டனர்.

எம்.எல்.ஏ.ரகுராமன்

திருமலைக்குமார் 60 சதவிகித மாற்றுத்திறன் உடையவர். எனவே, அவருக்கு வழங்கமுடியாது என்பதை நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். மேலும், மாற்றுத்திறனாளியிடம் செல்போனில் பேசிய விவகாரத்தில், திட்டமிட்டே என்னை கோபப்படுத்தியுள்ளனர். கோபத்தில் இவர் வார்த்தைகளை எப்போது விடுவார்.. எப்போது இவரை மாட்டிவிடலாம் என்று காத்திருந்து போனை ரெக்கார்டு செய்து ஆடியோவை வெளியிட்டுள்ளனர். இதனால், உண்மையான மனதுடன் உதவி என்று போன் செய்பவரின் அழைப்புகளை எடுக்க கூட பயமாக உள்ளது" என்றார்.


Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...