Skip to main content

சேலம்: போஸ்டர் சர்ச்சை; சாதி குறித்த பேச்சு! - விசிக, பாமக மாறி... மாறி புகார் - என்ன நடந்தது?

சேலம், கொளத்தூர் காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் வசந்த் என்பவர் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ``கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி கொளத்தூர் காவேரிபுரம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அந்தப் பகுதி பொறுப்பாளர்கள் சுவர் விளம்பரம் செய்தனர். அப்போது பா.ம.க-வைச் சேர்ந்த ராஜா, அவர் கூட்டாளிகள் சிலர் சுவரில் விளம்பரம் செய்யக்கூடாது என்று தகராறில் ஈடுப்பட்டனர்.

இது குறித்து வி.சி.க-வைச் சேர்ந்த இளையராஜா என்பவர் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்பந்தப்பட்ட ராஜா அவர் கூட்டாளிகள்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். மேலும் குற்றவாளிகளைக் கைதுசெய்யக்கூறி கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி மேட்டூர் பா.ம.க., எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டம் கொளத்தூரில் நடைப்பெற்றது.

அந்தக் கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ., சதாசிவம் சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகவும், சாதி பிரிவினை வாதத்தை தூண்டும் விதமாகவும், `தமிழ்நாட்டில் நாங்கள் நினைத்தால் ஒரு பஸ்கூட ஒடாது, நாங்கள் 10 ஆயிரம் பேர் இருக்கிறோம். வெறும் 200 குடும்பங்கள் தான் இருக்கிறார்கள்' என்று தரக்குறைவாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இப்படி சாதி பிரச்னையை தூண்டும் விதமாக பேசிய எம்.எல்.ஏ-மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என புகாரில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கொளத்தூர் காவல் நிலையத்தினர் எம்.எல்.ஏ., சதாசிவம்மீது சாதிக் கலவரத்தை தூண்டும் விதமாகப் பேசியதாகக் கூறி இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

வி.சி.க மாவட்டச் செயலாளர் வசந்த்

இது குறித்து வி.சி.க-வின் வடக்கு மாவட்டச் செயலாளர் வசந்த் கூறியபோது, ``மக்கள் பணியில் சேவை செய்யக்கூடிய எம்.எல்.ஏ., இப்படி சாதிரீதியாக பேசியது கண்டிக்கத்தக்கது. அவர்மீது வழக்கு பதிவுசெய்தது மட்டுமல்லாமல், கைது நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக காவல்துறை ஐ.ஜி-யிடம் மனு கொடுக்கவிருக்கிறோம். மேலும், சேலம் மாவட்ட வி.சி.க-வினர் மூலம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்றார்.

சாதிக் கலவர சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ., சதாசிவத்திடம் பேசியபோது, “பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில்தான் நான் கலந்துகொண்டு பேசினேன். அதுவும் ஒரு உள்ளரங்கில் பேசியது. நான் வெளிப்படையாக எந்த சமூகத்தினரையும் தரக்குறைவாக பேசவில்லை. என்மீது அவதூறு பரப்ப வேண்டும் என்றே சிலர் இது மாதிரியான விஷயங்களை செய்து வருகின்றனர். இதுவரை எந்தக் கட்சியினரும் விளம்பரம் செய்யாத இடத்தில் திடீரென இவர்கள் விளம்பரம் செய்ய வந்ததை பா.ம.க-வைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தடுத்திருக்கிறார். இதற்கு அவர்மீது சாதியை இழிவுப்படுத்தி பேசியதாக பொய் புகார் கொடுத்து வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். இது தொடர்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் பெண்கள் சிலர், `நாங்கள் ரோட்டில் செல்லும் போது, பாலத்தில் அமர்ந்துகொண்டு முன், பின்னே பார்த்து மார்க் போடுகின்றனர்' என்று என்னிடம் புகார் தெரிவித்தனர். அதனடிப்படையில் நானும் பேசும்போது 10 ஆயிரம் பேர் இருக்கும் இடத்தில் இதுப்போன்று அவர்கள் நடந்துக்கொள்வது சரியா என்றேன்.

மேலும், வி.சி.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள்தான். நான் அவர்களிடம் தெரியப்படுத்துகிறேன் என்று அதே மேடையில் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் அவற்றையெல்லாம் எடிட் செய்துவிட்டு நான் சாதிக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக புகார் அளித்திருக்கின்றனர். இதனை கண்டித்து நேற்று சம்பந்தப்பட்ட பெண்கள் நேரடியாக கொளத்தூர் காவல் நிலையத்தில் கேலி, கிண்டல் செய்த நபர்கள்மீது புகார் அளித்திருக்கின்றனர்" என்றார்.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “சம்பந்தப்பட்ட நபர்கள் ஆதாரத்துடன் புகார் அளித்ததின் பேரில் எம்.எல்.ஏ-மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஆர்.டி.ஒ., தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது" என்றனர்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...