Skip to main content

``சாவர்க்கர் பறவையின்‌ இறக்கையில் தாய்நாடு வந்து செல்வார்" - கர்நாடக பாடநூல் சர்ச்சையும் விளக்கமும்

கர்நாடக மாநிலத்தின் எட்டாம் வகுப்பு கன்னட பாடப்புத்தகத்தில் உள்ள சில வரிகள் தற்போது சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சமீபத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது‌. இதில் எட்டாம் வகுப்புக்கான கன்னட பாடப்புத்தகத்தில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றிய புதிய பகுதி இணைக்கப்பட்டிருந்தது. விநாயக் தாமோதர் சாவர்க்கர் இந்துத்வ கொள்கைகளை முன்னிலைப்படுத்தியதில் முதன்மையானவரக அறியப்படுகிறார்.

புதிய பாடப்பகுதியில் இவரைப் பற்றி இடம்பெற்றிருக்கும் சில வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. `காலத்தை வென்றவர்கள்’ எனப் பெயரிடப்பட்ட அந்த குறிப்பிட்ட பாடப்பகுதி விநாயக் தாமோதர் சாவர்க்கர் யார் என்பதை மாணவர்களுக்கு விளக்கும் வகையில் அமைந்துள்ளது. 1911-ம் ஆண்டு முதல் 1924 ஆம் ஆண்டு வரை சாவர்க்கர் சிறையில் இருந்த போது அவருடைய வாழ்வு எவ்வாறு இருந்தது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதில், `சிறையில் இருந்த சாவர்க்கர் ஒரு பறவையின் மீது ஏறி சிறையிலிருந்து தாய்நாடு வந்து செல்வார்’ எனக் எழுதப்பட்டுள்ளது.

சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அறையில் ஒரு சிறிய துளை கூட இல்லை. ஆனாலும் புல்புல் பறவைகள் எப்படியாவது அந்த அறைக்குள் நுழைந்து விடும்‌. அவற்றின் இறக்கையில் அமர்ந்து சாவர்க்கர் அவருடைய சொந்த ஊருக்கு பறந்து செல்வார் எனக் கூறப்பட்டுள்ளது. சிலர் இந்த பத்தியில் உள்ள வரிகள் அப்படியே பொருள் கொள்ளப்படும் போது மாணவர்களை மிகவும் குழப்பும் எனக் கூறியுள்ளனர். இதுவே சர்ச்சைக்கான காரணமாக உள்ளது.

ஆனால் புத்தக வடிவமைப்பு குழுவில் உள்ளோர் இந்த சர்ச்சையை முற்றிலும் மறுக்கின்றனர். இது குறித்து புத்தக வடிவமைப்பு குழுவின் தலைவர்‌ ரோஹித் சக்ரதீர்த்தா கூறுகையில், "இந்த பத்தியில் உள்ள வரிகள் அழகிய புலமை நயமிக்கவை ஆகும்.

சாவர்க்கர்

இந்த புலமை நயத்தை சிலரால் புரிந்து கொண்டு ரசிக்க தகுந்த அளவில் அறிவாற்றல் இல்லையே என்பது அதிசயமாக உள்ளது." எனக் கூறியுள்ளார். பறவை மீது ஏறி பறந்தார் என்பதை அப்படியே பொருள் கொள்ளாமல் புலமை நயத்துடன் பார்க்க வேண்டும் என புத்தக வடிவமைப்பு குழு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...