Skip to main content

``சாவர்க்கர் பறவையின்‌ இறக்கையில் தாய்நாடு வந்து செல்வார்" - கர்நாடக பாடநூல் சர்ச்சையும் விளக்கமும்

கர்நாடக மாநிலத்தின் எட்டாம் வகுப்பு கன்னட பாடப்புத்தகத்தில் உள்ள சில வரிகள் தற்போது சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சமீபத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது‌. இதில் எட்டாம் வகுப்புக்கான கன்னட பாடப்புத்தகத்தில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றிய புதிய பகுதி இணைக்கப்பட்டிருந்தது. விநாயக் தாமோதர் சாவர்க்கர் இந்துத்வ கொள்கைகளை முன்னிலைப்படுத்தியதில் முதன்மையானவரக அறியப்படுகிறார்.

புதிய பாடப்பகுதியில் இவரைப் பற்றி இடம்பெற்றிருக்கும் சில வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. `காலத்தை வென்றவர்கள்’ எனப் பெயரிடப்பட்ட அந்த குறிப்பிட்ட பாடப்பகுதி விநாயக் தாமோதர் சாவர்க்கர் யார் என்பதை மாணவர்களுக்கு விளக்கும் வகையில் அமைந்துள்ளது. 1911-ம் ஆண்டு முதல் 1924 ஆம் ஆண்டு வரை சாவர்க்கர் சிறையில் இருந்த போது அவருடைய வாழ்வு எவ்வாறு இருந்தது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதில், `சிறையில் இருந்த சாவர்க்கர் ஒரு பறவையின் மீது ஏறி சிறையிலிருந்து தாய்நாடு வந்து செல்வார்’ எனக் எழுதப்பட்டுள்ளது.

சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அறையில் ஒரு சிறிய துளை கூட இல்லை. ஆனாலும் புல்புல் பறவைகள் எப்படியாவது அந்த அறைக்குள் நுழைந்து விடும்‌. அவற்றின் இறக்கையில் அமர்ந்து சாவர்க்கர் அவருடைய சொந்த ஊருக்கு பறந்து செல்வார் எனக் கூறப்பட்டுள்ளது. சிலர் இந்த பத்தியில் உள்ள வரிகள் அப்படியே பொருள் கொள்ளப்படும் போது மாணவர்களை மிகவும் குழப்பும் எனக் கூறியுள்ளனர். இதுவே சர்ச்சைக்கான காரணமாக உள்ளது.

ஆனால் புத்தக வடிவமைப்பு குழுவில் உள்ளோர் இந்த சர்ச்சையை முற்றிலும் மறுக்கின்றனர். இது குறித்து புத்தக வடிவமைப்பு குழுவின் தலைவர்‌ ரோஹித் சக்ரதீர்த்தா கூறுகையில், "இந்த பத்தியில் உள்ள வரிகள் அழகிய புலமை நயமிக்கவை ஆகும்.

சாவர்க்கர்

இந்த புலமை நயத்தை சிலரால் புரிந்து கொண்டு ரசிக்க தகுந்த அளவில் அறிவாற்றல் இல்லையே என்பது அதிசயமாக உள்ளது." எனக் கூறியுள்ளார். பறவை மீது ஏறி பறந்தார் என்பதை அப்படியே பொருள் கொள்ளாமல் புலமை நயத்துடன் பார்க்க வேண்டும் என புத்தக வடிவமைப்பு குழு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...