Skip to main content

மீண்டும் வலுக்கும் 8 வழிச்சாலை விவகாரம்: கேலிக்கூத்தான திமுக-வின் நிலைப்பாடு | A-Z என்ன நடந்தது?

எ.வ. வேலு, முதலமைச்சர் ஸ்டாலின்

`பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு போராட வந்துவிடுகிறார்கள்!'

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் எ.வ. வேலு, ``இன்றைக்கு வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துவிட்டது. குடும்பத்துக்கு ஒரு கார் அல்ல. குடும்பத்தில் எத்தனைப்பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரும் கார் வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுவதில்லை. போக்குவரத்து வாகனங்கள் பெருகி இருப்பதால் சாலைகளில் நெருக்கடி ஏற்படுகிறது.

இன்றைக்கு இருக்கும் வாகனப் பயன்பாட்டைப் பார்க்கும் போது சாலைகளை விரிவுபடுத்தித்தான் ஆக வேண்டும் வேறு வழியே இல்லை!" என போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசி சர்ச்சையில் சிக்கினார். அப்போதே இந்தப் பேச்சின் மூலம், சென்னை-சேலம் எட்டுவழி சாலைக்கான கிரீன் சிக்னலை அமைச்சர் மறைமுகமாகக் கொடுக்கிறாரோ என மக்கள் மத்தியில் சந்தேகம் கிளம்பியது.

எ.வ.வேலு

` நீர்நிலைகள் அழிவைவிட பொதுநோக்கமே முக்கியம்'

இந்த நிலையில், ஆகஸ்ட் 26-ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு,

என நீர்நிலைகள் அழிவைவிட பொதுநோக்கமே முக்கியம் என்ற தொனியில் பேசினார்.

`எட்டு வழிச்சாலைக்கு தி.மு.க எதிரி அல்ல!'

தொடர்ந்து எட்டுவழிச்சாலை குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், ``தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டமன்றத்தில் 8 வழிச் சாலை குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் `தி.மு.க சாலை போடுவதற்கு எதிரி அல்ல. விவசாயிகளை அழைத்துப்பேசி, அவர்களுக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு பிரச்னையைத் தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள்' என்றுதான் சொன்னார். சட்ட மன்றக் குறிப்பை வேண்டுமானால் எடுத்துக் காட்டுகிறேன்.

என அந்தர் பல்டி அடித்துப் பேசியிருக்கிறார்.

எ.வ.வேலு

இந்தப் பேச்சுகள் தான் தற்போது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது, எட்டுவழிச் சாலை திட்டத்தை வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்த தி.மு.கவினர், தற்போது ஆட்சிக்கு வந்ததும் பேச்சை மாற்றி, ``நாங்கள் சொல்லவேயில்லை" என அப்பட்டமாகப் பொய் பேசுகிறார்கள். முதல்வர் ஸ்டானின் கருத்துக்கு நேர்மாறாக அமைச்சர் எ.வ. வேலு பேசுகிறார் என நான்கு பக்கங்ளிலும் தி.மு.க.வுக்கு எதிராக எதிர்ப்பலைகள் வீசுகின்றன.

எட்டு வழிச்சாலை

உண்மையில் தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, எட்டுவழிச்சாலை விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுத்தது? எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் என்னதான் பேசினார்? முதல்வராக பொறுப்பேற்ற பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்? சற்று விரிவாக ஆராய்வோம்.

எட்டு வழிச் சாலைக்கு எதிராக, ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வெளிட்ட அறிக்கைகள்:

2018-ம் ஆண்டு காலகட்டத்தில் எட்டு வழிச்சாலை தொடர்பான விவகாரத்தில், ``விவசாயிகளுக்கு பாதிப்பிலாதபடி, மாற்றுப்பாதையில் திட்டத்தை செய்ல்படுத்த வேண்டும்!" என்பதே அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டிலேயே எட்டுவழிச்சாலையை முழுவதுமாக எதிர்க்கும் நிலைப்பாட்டு தி.மு.க. வந்ததை, அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் மூலமே புரிந்துகொள்ளலாம்.

முதல்வர் ஸ்டாலின் | திமுக

(எட்டு வழிச்சாலை திட்டத்துக்கான தடையை எதிர்த்து அ.தி.மு.க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது)

ஜூன் 6, 2020 - ஸ்டாலின் அறிக்கை:

``பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டுசேர்ந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் சாலைத் திட்டத்தை நிறைவேற்றி, தமது சுயநலப் பசியை நிறைவேற்றிக் கொண்டு விட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். `தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்' என்ற புதிய வாதத்தை வைத்து ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்.

ஸ்டாலின்

மக்களின் நலன்களைக் காவு கொடுத்து, சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தி, விவசாயிகளின் முதுகெலும்பை முறித்து, சேலம் எட்டுவழிப் பசுமைச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கைவிட்டு, அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

(மேல்முறையீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானபோது)

டிசம்பர் 8, 2020 - ஸ்டாலின் அறிக்கை:

``விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில், சேலம்-சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம், நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவான கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க அரசு எடுத்துவைக்கவில்லை.

ஸ்டாலின் அறிக்கை

பா.ஜ.க அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என வாதிட்டது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எதிராக அ.தி.மு.க-பா.ஜ.க அரசுகள் கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றன. கமிஷன் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த காவல்துறையைப் பயன்படுத்தி விவசாயிகள் மீது தடியடி நடத்தினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

எனத் தெரிவித்திருந்தார்.

(சட்டமன்ற தேர்தல் பிரச்சார காலத்தில்)

மார்ச் 14, 2021:

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவந்த நிலையில், தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகளை வெளியிட்டது. அதன் பிறகு தேர்தல் அறிக்கையில் மேலும், 5 வாக்குறுதிகளைச் சேர்த்தது. அதில்,

என வாக்குறுதி 43-ல் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தி.மு.க தேர்தல் அறிக்கை

(முதல்வராக ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்தபோது வைத்த கோரிக்கையில்)

ஜூன் 17, 2021:

பிரதமர் மோடியைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கிய ஸ்டாலின், `சென்னை - சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும்' என அந்த மனுவில் கேட்டுக்கொண்டார்.

ஸ்டாலின், மோடி

மார்ச் 16, 2022:

சென்னையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி சோமசேகர், ``சென்னை - சேலம் இடையேயான விரைவுச் சாலைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியிருக்கிறது. இது குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்!" எனக் கூறினார். இந்த பேச்சு, விவசாய மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து பேசிய, அமைச்சர் எ.வ.வேலு, ``இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம். இந்தத் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் செயல்படுத்தும். எட்டுவழிச் சாலைப் பணிகளைத் தொடங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசுதான் பணிகள் தொடங்குவது குறித்து முடிவுசெய்ய வேண்டும். இதில், கொள்கை முடிவை எடுக்கவேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. எட்டுவழிச் சாலை என்பது சாதாரண சாலை அமைப்பது போன்ற பணி கிடையாது. ஆகவே, இதில் தமிழக முதல்வர் கொள்கை முடிவை எடுப்பார். ஆனாலும், இதில் தமிழக அரசின் ஒப்புதலும் தேவை என்பதால், இந்தத் திட்டம் குறித்து கொள்கை முடிவெடுக்கவேண்டிய தேவை இருக்கிறது" என பதிலளித்தார்.

திருச்சி சிவா

அதேபோல, , தி.மு.க எம்.பி. திருச்சி சிவா, ``சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தைப் பொறுத்தவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முதல்வர் முடிவு எடுப்பார்" என கருத்து தெரிவித்தார்.

சேலம்- சென்னை எட்டு வழிச்சாலை

ஏப்ரல் 12, 2022:

மீண்டும் எட்டுவழிச் சாலை தொடர்பான பேச்சு மீண்டும் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பா.ம.க எம்.எல்.ஏ. சிவகுமார், ``சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, ``சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் என்பது ஆறுவழிச் சாலையாக ஏற்கெனவே மாறிவிட்டது. இது ஒன்றிய அரசின் திட்டம். இத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல், வனத்துறையின் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அதேவேளையில் தமிழ்நாடு முதலமைச்சரைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்த அதே நிலைப்பாட்டில்தான் நாங்கள் இருக்கிறோம்.

எனத் தெரிவித்தார்.

எ.வ. வேலு

ஆகஸ்ட் 26, 2022:

இந்த நிலையில், ``தி.மு.க சாலை போடுவதற்கு எதிரி அல்ல. விவசாயிகளை அழைத்துப்பேசி, அவர்களுக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு பிரச்சினையைத் தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள் என்றுதான் முதல்வர் ஸ்டாலின் சொன்னார். எட்டு வழிச்சாலை போடக்கூடாது என எந்த காலத்திலும் தி.மு.க சொல்லவே இல்லை" என வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் அமைச்சர் எ.வ. வேலு.

எட்டு வழிச் சாலை திட்டம்

`நடந்தவை, நடப்பவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தி.மு.க அமைச்சர்கள் உணர்ந்து பேச வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியான, தெளிவான, மக்கள் வரவேற்கும்படியான ஒரு நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும்!' என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...