Skip to main content

``2024 தேர்தல் தான் என் கடைசிப் போராட்டம்..!" - சூளுரைத்த மம்தா; பாஜக கூறிய பதில் என்ன?

2014-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019-லும் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில், 2024-ல் நடைபெறவுள்ள லோக் சபா தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நிச்சயம் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டுமென்று திரிணாமுல் காங்கிரஸ் அவ்வப்போது கூறிவருகின்றது. திரிணாமுல் காங்கிரஸ், அதற்கு முன்னோட்டமாகவே நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலைப் பார்த்தது. இருப்பினும் அது தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், 2024-ல் பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதே தன்னுடைய கடைசிப் போராட்டம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாகத் தெரிவித்திருக்கிறார்.

மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியொன்றில் பேசிய மம்தா, ``2024 லோக் சபா தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட வேண்டும். மத்திய ஆட்சியிலிருந்து பா.ஜ.க-வை அகற்றுவதற்கான இந்த போராட்டமே என்னுடைய கடைசிப் போராட்டம். எனவே, பா.ஜ.க-வை நிச்சயம் ஆட்சியிலிருந்து அகற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். மேலும், மேற்குவங்கத்தைக் காப்பாற்றுவதே எங்களின் முதல் போராட்டம். எங்களை அச்சுறுத்த நினைத்தால் நாங்களும் பதிலடி கொடுப்போம்.

பாஜக

எல்லோருமே தோல்வியைச் சந்தித்து தான் ஆகவேண்டும். இந்திரா காந்தி வலிமையான அரசியல் தலைவராக இருந்தபோதும் தோல்வியைச் சந்தித்தார். பா.ஜ.க-விடம் தற்போது சுமார் 300 எம்.பி-க்கள் உள்ளனர். ஆனால் இப்போது பீகார் போய்விட்டது, மேலும் பலரும் அதைப் பின்பற்றுவார்கள்" என ஆவேசமாகப் பேசினார்.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா

மம்தாவின் இத்தகையப் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, ``பா.ஜ.க தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பது முன்கூட்டியே முடிவாகிவிட்டது. எனில், 2024 தேர்தலுக்குப் பிறகு அவர் தன்னுடைய காலணிகளுக்கு ஓய்வளித்துவிடுவாரா என்பதை அவர் தெளிவாகச் சொல்ல வேண்டும்" என மம்தாவின் அரசியல் முடிவுக்கு வருமா என்பதை மறைமுகமாகக் கேள்வியெழுப்பினார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...