Skip to main content

காங்கிரஸ்: அக்.17-ல் புதிய தலைவர் தேர்தல்... யாருக்கு வாய்ப்பு அதிகம்?! - ஓர் அலசல்

கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தோல்விக்குப் பொறுப்பேற்று, அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி, தலைவர் பதவியிலிருந்து விலகினார். பின்னர், சோனியா காந்தி இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றார். கட்சிக்கு முழுநேர தலைவர் உள்பட உட்கட்சி தேர்தலை நடத்துமாறு குலாம் நபி ஆசாத், கபில் சிபல், ஆனந்த் சர்மா உள்ளிட்ட அதிருப்தி தலைவர்கள் 23 பேர் அடங்கிய ஜி-23 குழு, கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியது. இதனையடுத்து சோனியா காந்தி, அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி விலக முன்வந்தார். ஆனால், காங்கிரஸ் காரிய கமிட்டி கேட்டுக்கொண்டதால் பதவியில் நீடித்தார்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் உட்கட்சி தேர்தலைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காரிய குழு அறிவித்தது. வட்டார குழு, மாவட்ட தலைவர், மாநில தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்டு 21-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 7-ஆம் தேதி பாத யாத்திரையைத் தொடங்குகிறது. அதற்கான பணிகளைக் கவனிக்க வேண்டி இருப்பதால், தலைவர் தேர்தல் சில வாரங்கள் தள்ளிப்போகும் என்று தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான சரியான தேதியை முடிவு செய்ய காரிய கமிட்டி கூட்டம் நேற்று முந்தினம் (ஆகஸ்ட் 28) நடந்தது. மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள சோனியாகாந்தி, காணொலி காட்சி மூலம் தலைமை தாங்கினார். அவருடன் சென்றுள்ள ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரும் காணொலி காட்சி வழியாக பங்கேற்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், அதிருப்தி குழுவை சேர்ந்த ஆனந்த் சர்மா, காங்கிரஸின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி, கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஷ்கார் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், தலைவர் தேர்தலுக்கான கால அட்டவணை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், அக்டோபர் 17-ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மதுசூதன் மிஸ்திரி

இதுகுறித்து காங்கிரசின் தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி, “காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெறும். இதற்கான அறிவிப்பாணை அடுத்த மாதம் 22-ஆம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்குகிறது. மனுதாக்கலுக்கு செப்டம்பர் 30-ஆம் தேதி கடைசிநாள். ஒருவருக்கு மேல் போட்டியிட்டால், அக்டோபர் 17-ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். அக்டோபர் 19-ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதற்கடுத்து பேசிய கே.சி.வேணுகோபால், “தேர்தல் கால அட்டவணைக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாதயாத்திரை செல்பவர்கள் ஓட்டுப்போட உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று கூறினார்.

கே.சி.வேணுகோபால்

``காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்குமாறு ராகுல் காந்தியைக் கடைசி நிமிடம் வரை வலியுறுத்துவோம்” என்று அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே போன்றோருடன் அனைத்து மாநில தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அப்பதவியை ஏற்க ராகுல்காந்தி மறுத்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க அசோக் கெலாட்டை தலைவர் ஆக்க முயற்சி நடப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், அதை அசோக் கெலாட் மறுத்துள்ளார். கபில் சிபல், அஸ்வனி குமார் ஆகியோரை தொடர்ந்து குலாம் நபி ஆசாத்தும் விலகிய நிலையில் இந்த தேர்தல் நடக்கிறது.

டாக்டர் செல்லகுமார் எம்.பி

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் டாக்டர் செல்லகுமார் எம்.பி-யைத் தொடர்புகொண்டோம். ``கன்னியாக்குமரி முதல் காஷ்மீர் வரை இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மனதில் நேரு குடும்பத்திலிருந்துதான் தலைவர் வர வேண்டும் என்பது எல்லோருடைய ஒருமித்த விருப்பமாக உள்ளது. வாரிசு அரசியல் குறித்து மாற்றுகட்சியினர் விமர்சனம் முன் வைக்கலாம். ஆனால், அடிப்படையில் இருக்கும் உண்மை அவர்களுக்கு புரியாது.

காரணம் என்னவென்றால் இந்தியாவில் இருக்க கூடிய எந்த ஒரு அரசியல் இயக்கமும் இனம், மொழி, மதம், சாதி என ஒரு சாராரை சார்ந்துத்தான் நடத்தியிருக்கும். ஆனால், காங்கிரஸ் என்கிற ஒரு இயக்கம் மட்டும்தான் எல்லா இந்தியர்களையும் ஒன்றிணைத்து, வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஓர் அரசியல் இயக்கமாக உள்ளது. அதற்கு ஒரு தலைமை என்று வரும் போது, இந்த பாகுபாடு எண்ணங்கள் இல்லாத ஒரு தலைமை தேவைப்படுகிறது. அந்த தலைமை நேரு குடும்பத்திடம் தவிர வேறு எந்த குடும்பத்திலும் கிடையாது. வேறு யாரை முன் நிறுத்தினாலும் ஏதோ ஒரு விதத்தில் பற்றுதல், சார்பு இருக்கும். மற்றவர்கள் எல்லாம் ஏதோ ஒரு காலகட்டத்தில், ஏதோ ஒரு காரணத்திற்காக நரேந்திர மோடியுடன் சமரசம், சமாதான போக்கை கடைபிடிக்கிறார்கள். எனவே சர்வாதிகார ஆட்சி நடத்தும் நரேந்திர மோடியை எதிர்த்து நிற்க ராகுல் காந்தி தான் சரியான நபராக இருப்பார்.” என்றார்.

காங்கிரஸில் நடக்கும் குழப்பங்கள், அடுத்த தலைவராக யார் தேர்வானால் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் போன்ற கேள்விகளோடு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியை தொடர்பு கொண்டோம். “ராகுல் தவிர வேறு யார் தலைவராக வந்தாலும் அந்த கட்சி தாக்குப்பிடிக்காது. காங்கிரஸ் ஒற்றுமையாக வைத்திருக்க ராகுலால்தான் முடியும். ராகுல் அல்லாமல், இன்னொருவர் வந்தால் அவர் டம்மியாகத்தான் இருப்பார். எனவே ராகுல் தலைமை பொறுப்பு ஏற்பது காங்கிரஸுக்கு நல்லது.

ரவீந்திரன் துரைசாமி

இன்னும் தயங்கி... தயங்கி... தோற்றுப் போகும்... தோற்றுப் போகும்... என்றிருந்தால், அவர் தலைமை ஏற்றுக் கொள்ளவே காங்கிரஸ் கட்சி இருக்காது. இன்னும் அவர் தலைமை பொறுப்பு ஏற்காத வரை நாளுக்கு, நாள் பின்னடைவு ஏற்படும். இதனால் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் வளர்ச்சி அடையும். ராகுலைப் பொறுத்தவரை வெற்றி பெற வாய்ப்புள்ள இடத்தில் நிற்கிறாரே தவிர, வெற்றிக்காக உழைக்கத் தயாராக இல்லை” என்று முடித்தார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, கடைசியாகக் கடந்த 2000-ஆம் ஆண்டு நடந்தது. அப்போது, ஜிதின் பிரசாதாவை சோனியா காந்தி தோற்கடித்தார். காங்கிரஸ் தலைவராக நீண்ட காலம் நீடிப்பவர் சோனியா காந்தி. ராகுல் காந்தி பதவி வகித்த 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டுவரை நீங்கலாக, 1998-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...