Skip to main content

பாமக: ``என்ன தவம் செய்தேனோ..." - பிறந்தநாளில் கவிதை வாசித்து தேம்பி தேம்பி அழுத ராமதாஸ் https://ift.tt/FsEG6fI

தைலாபுரம் தோட்டத்துக்காரர் என்றாலே பலருக்கும் தெரிந்துவிடும், யாரை நாம் குறிப்பிடுகிறோம் என்று. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் மற்றும் திண்டிவனம் பகுதியில் தங்கி வசித்து வருகின்ற முக்கிய அரசியல் தலைவர் தான் மருத்துவர் ராமதாஸ். பா.ம.க நிறுவனரான அவருக்கு சொந்த ஊர், மரக்காணம் அருகே உள்ள கீழ்சிவிரி. நேற்றைய தினம் (25.07.2022) தனது 84-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ராமதாஸ், தனது சொந்த ஊரான கீழ்சிவிரிக்கு சென்று, தொண்டர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். நீண்ட நாள்களுக்கு பிறகு தனது சொந்த கிராமத்தில் இவ்வாறு பிறந்தநாள் கொண்டாடுகிறாராம் அவர்.

பிரம்மாண்டமான வரவேற்பு, தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ்

தைலாபுரம் தோட்டத்தில் இருந்து காலையில் புறப்பட்டவர், வழி நெடுகிலும் தொண்டர்களை சந்தித்து கட்சி கொடியை ஏற்றி வைத்தபடி கீழ்சிவிரியை வந்தடைந்தார். அப்போது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊரின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பா.ம.க கொடி கம்பத்தில் கொடியேற்றி, மரக்கன்று நட்டவர்... தனது பூர்வீக நினைவு இல்லத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த தனது தாய், தந்தையரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிலையில், திடீரென கண்கலங்கியபடி அமர்ந்துக்கொண்டார்.

அங்கிருந்து புறப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதியை வந்தடைந்த மருத்துவர் ராமதாஸ், "என்ன தவம் செய்தேனோ, இம்மண்ணில் நான் பிறக்க..! ஏது தவம் செய்தேனோ, இன்று உங்களோடு நான் இருக்க..!" .... "முந்தி தவம் இருந்து, முன்னூரு நாள் சுமந்து, என்னை ஈன்றெடுத்த தாயே..! எனக்கொரு வரம் தருவாய்... எழு பிறப்பும் உன் வயிற்றில் யான் பிறக்க, அருள்புரிவாய்!" எனும் கவிதையை வாசித்தபடி மேடையிலேயே கண்ணீர் சிந்தி தேம்பி தேம்பி அழுதார். அந்த தருணம், அப்பகுதியே அமைதியாகிப்போனது.

கண்கலங்கிய ராமதாஸ்

இறுதியாக தனது சிறு வயது அனுபவங்களை நினைவு கூர்ந்து பேசிய அவர், "இன்று நான் 84-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இனிவரும் காலங்களில் என்னால் நடக்க முடியவில்லை என்றாலும்... அந்த காலத்திலும், கோலூன்றியாவது இந்த உமை ஜனங்களுக்காக நான் பாடுபடுவேன் என உறுதி கூறுகிறேன்" என்றார். நிகழ்ச்சியின் இறுதியாக, குழந்தைகள், பெரியவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தபடி அங்கிருந்து புறப்பட்டார்.



from Latest News

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...