Skip to main content

பாமக: ``என்ன தவம் செய்தேனோ..." - பிறந்தநாளில் கவிதை வாசித்து தேம்பி தேம்பி அழுத ராமதாஸ் https://ift.tt/FsEG6fI

தைலாபுரம் தோட்டத்துக்காரர் என்றாலே பலருக்கும் தெரிந்துவிடும், யாரை நாம் குறிப்பிடுகிறோம் என்று. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் மற்றும் திண்டிவனம் பகுதியில் தங்கி வசித்து வருகின்ற முக்கிய அரசியல் தலைவர் தான் மருத்துவர் ராமதாஸ். பா.ம.க நிறுவனரான அவருக்கு சொந்த ஊர், மரக்காணம் அருகே உள்ள கீழ்சிவிரி. நேற்றைய தினம் (25.07.2022) தனது 84-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ராமதாஸ், தனது சொந்த ஊரான கீழ்சிவிரிக்கு சென்று, தொண்டர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். நீண்ட நாள்களுக்கு பிறகு தனது சொந்த கிராமத்தில் இவ்வாறு பிறந்தநாள் கொண்டாடுகிறாராம் அவர்.

பிரம்மாண்டமான வரவேற்பு, தொண்டர்கள் மத்தியில் ராமதாஸ்

தைலாபுரம் தோட்டத்தில் இருந்து காலையில் புறப்பட்டவர், வழி நெடுகிலும் தொண்டர்களை சந்தித்து கட்சி கொடியை ஏற்றி வைத்தபடி கீழ்சிவிரியை வந்தடைந்தார். அப்போது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊரின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பா.ம.க கொடி கம்பத்தில் கொடியேற்றி, மரக்கன்று நட்டவர்... தனது பூர்வீக நினைவு இல்லத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த தனது தாய், தந்தையரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிலையில், திடீரென கண்கலங்கியபடி அமர்ந்துக்கொண்டார்.

அங்கிருந்து புறப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதியை வந்தடைந்த மருத்துவர் ராமதாஸ், "என்ன தவம் செய்தேனோ, இம்மண்ணில் நான் பிறக்க..! ஏது தவம் செய்தேனோ, இன்று உங்களோடு நான் இருக்க..!" .... "முந்தி தவம் இருந்து, முன்னூரு நாள் சுமந்து, என்னை ஈன்றெடுத்த தாயே..! எனக்கொரு வரம் தருவாய்... எழு பிறப்பும் உன் வயிற்றில் யான் பிறக்க, அருள்புரிவாய்!" எனும் கவிதையை வாசித்தபடி மேடையிலேயே கண்ணீர் சிந்தி தேம்பி தேம்பி அழுதார். அந்த தருணம், அப்பகுதியே அமைதியாகிப்போனது.

கண்கலங்கிய ராமதாஸ்

இறுதியாக தனது சிறு வயது அனுபவங்களை நினைவு கூர்ந்து பேசிய அவர், "இன்று நான் 84-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இனிவரும் காலங்களில் என்னால் நடக்க முடியவில்லை என்றாலும்... அந்த காலத்திலும், கோலூன்றியாவது இந்த உமை ஜனங்களுக்காக நான் பாடுபடுவேன் என உறுதி கூறுகிறேன்" என்றார். நிகழ்ச்சியின் இறுதியாக, குழந்தைகள், பெரியவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தபடி அங்கிருந்து புறப்பட்டார்.



from Latest News

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...