Skip to main content

Doctor Vikatan: ஒவ்வாமையை ஏற்படுத்துமா கோதுமை உணவுகள்?

என் வயது 38. இரவில் பல நாள்களுக்கு சப்பாத்தி அல்லது கோதுமை தோசைதான் சாப்பிடுகிறேன். இப்படிச் சாப்பிடும் நாள்களில் வயிற்று வலி, வயிற்று உப்புசம், அடுத்தநாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகின்றன. மற்ற நாள்களில் இப்படி இருப்பதில்லை. இதை கோதுமை அலர்ஜி என எடுத்துக் கொள்ளலாமா? இரவு உணவுக்கு சப்பாத்தி, கோதுமை தோசை சாப்பிடுவது சரியானதா?

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு க்ளூட்டன் அலர்ஜி என்கிற ஒவ்வாமை இருக்கலாம் என்று தெரிகிறது. க்ளூட்டன் என்பது ஒரு வகை புரதம்.

கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் இந்த க்ளூட்டன் அதிகம் காணப்படுகிறது. க்ளூட்டன் உள்ள உணவுப்பொருள்கள் ஒட்டும் தன்மை கொண்டவையாக இருக்கும். நெகிழ்வுத் தன்மையைக் கொடுப்பதால் பிரட், பிஸ்கட், ரஸ்க் உள்ளிட்ட பேக்கரி உணவு வகைகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

bread

வயதானவர்களுக்கு க்ளூட்டன் அலர்ஜி ஏற்படுவது சகஜம். அரிதாக இள வயதினருக்கும் இது ஏற்படலாம். அதாவது இந்தப் புரதத்தை அவர்களால் ஜீரணிக்க முடியாமல் போகும். நீங்கள் கோதுமை உணவுகளை எடுத்துக் கொள்ளும் நாள்களில் இப்படி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

உண்மையில் நீங்கள் கவனித்துப் பார்த்தால் கோதுமை உணவுகள் மட்டுமல்ல, மைதா, ரவை, சேமியா, பிரெட் போன்றவற்றைச் சாப்பிடும் நாள்களிலும் உங்களுக்கு இந்த அறிகுறிகள் வரலாம்.

நீங்கள் ஊட்டச்சத்து ஆலோசகர் அல்லது மருத்துவரை அணுகி, உங்களுடைய அறிகுறிகளை விளக்கி, இது க்ளூட்டன் அலர்ஜிதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுடைய உணவுப்பழக்கம், தினசரி உங்கள் உணவுகள் என உணவு டைரி ஒன்றை வைத்து அதை நீங்கள் கண்டுபிடிக்கலாம். க்ளூட்டன் அலர்ஜி உறுதியானால் க்ளூட்டன் ஃப்ரீ உணவுகளுக்கு மாற வேண்டியிருக்கும்.

தினை, மக்காள்சோளம், பழுப்பரிசி, பழங்கள், காய்கறிகள், முட்டை, தண்டுக்கீரை விதை மாவு, கீன்வா என க்ளூட்டன் ஃப்ரீ உணவுகள் குறித்து உங்கள் ஊட்டச்சத்து ஆலோசகரோ, மருத்துவரோ விளக்குவார்.

Representational Image

வெளியிடங்களில் நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் அதில் க்ளூட்டன் உள்ள பொருள் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை செக் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். க்ளூட்டன் ஃப்ரீ உணவுப்பழக்கத்துக்கு மாறினாலே இந்தப் பிரச்னை தானாகச் சரியாகும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...