Skip to main content

``ஆபரேஷன் லோட்டஸ் அமபலமாகி விட்டது..!" - பாஜக-வைச் சாடிய காங்கிரஸ்

மேற்கு வங்க மாநில தேசிய நெடுஞ்சாலையில், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 3 பேர், நேற்றிரவு காரில் கட்டுக்கட்டாகப் பணத்துடன் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சிக்கியுள்ள எம்.எல்.ஏ-க்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப் மற்றும் நமன் பிக்சல் கொங்கரி என தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில், ஆசிரியர் நியமன முறைகேட்டில் அமைச்சர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட சிலரை மட்டுமே அமலாக்கத்துறை ஆய்வு செய்கிறதா என திரிணாமுல் கேள்வியெழுப்பியிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.பறிமுதல் செய்யப்பட்ட பணம் நேற்றிரவு, மேற்கு வங்கத்தின் பஞ்ச்லா காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் மூவரும் சென்றுகொண்டிருந்த காரை போலீஸார் மறித்திருக்கின்றனர். அப்போது காரை சோதனை செய்ததில், பெரிய தொகையிலான பணம் இருப்பது தெரியவந்திருக்கிறது. எஸ்.பி ஸ்வாதி பங்காலியா இது குறித்து ரூரல் ஹவுரா எஸ்.பி ஸ்வாதி பங்காலியா, ``ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ-க்கள் காரில் இருந்தனர். அதோடு நிறைய பணமும் இருந்தது. பெரிய தொகையாக இருக்கும் என்பதால், பணம் எண்ணும் இயந்திரத்தை நாங்கள் கேட்க வேண்டியிருந்தது. மேலும், முழு எண்ணிக்கை முடிந்த பிறகே எவ்வளவு பணம் மீட்கப்பட்டது என்பது தெரியவரும்" என ஊடகத்திடம் கூறினார். மேலும் ஒரு போலீஸ் அதிகாரியொருவர், எம்.எல்.ஏ-க்களுடன் மேலும் இருவர் இருந்ததாகவும், காரில் காங்கிரஸின் தேர்தல் சின்னத்துடன் எம்.எல்.ஏ ஜம்தாரா ஜார்கண்ட் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் இந்தச் சம்பவத்தையடுத்து, பா.ஜ.க-வும் காங்கிரஸும் ஒன்றையொன்று சாடிவருகின்றன. இது குறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், ``பா.ஜ.க-வின் `ஆபரேஷன் லோட்டஸ்’ இன்றிரவு ஹவுராவில் அம்பலமானது" என என நேற்று ட்வீட் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநில பா.ஜ.க பொதுச்செயலாளர் ஆதித்யா சாஹு, ``ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் நடந்ததற்கு இந்தப் பணமே ஆதாரம். அவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஊழல் அதிகரித்து வருகிறது" எனச் சாடியிருந்தார். இந்த சம்பவம் காரணமாக, சம்பத்தப்பட்ட 3 எம்.எல்.ஏ-க்களையும் காங்கிரஸ் இடைநீக்கம் செய்திருக்கிறது.50 கோடி பணம்: ``என் வீடுதான்... ஆனால் எனக்கே அனுமதி இல்லை” - மே.வங்க அமைச்சரின் உதவியாளர்
http://dlvr.it/SVpS3v

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...