Skip to main content

``காம்ரேட் பினராயி விஜயனுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமிருக்கிறது!"- நெகிழ்ந்த ஸ்டாலின்

கேரளாவில் மனோரமா நியூஸ் கான்க்ளோவ் 2022 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பேசினார். பின்னர் முதல்வர் ஸ்டாலினிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "எனக்கு கேரளாவில் ரசிகர்கள் இருப்பது போல, கேரள முதல்வர் காம்ரேட் பினராயி விஜயனுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் முதலமைச்சராக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் வேறொரு கட்சி ஆட்சி இருந்தது. அப்போது கேரளா முதல்வர் பினராயியை போல தமிழ்நாட்டுக்கு ஒரு முதலமைச்சர் இல்லையே என்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் ஒரு ஏக்கத்தோடு சொல்லிக்கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் நடந்த சமயத்தில் நான் என்னுடைய செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக உங்கள் முதலமைச்சர் பினராயி விஜயனுடைய செயல்பாடுகளைதான் கையில் எடுத்தேன். பினராயியின் வழிகாட்டுதல்படி பணியை நிறைவேற்றினேன் என்பதுதான் முக்கியம். இதுதான் எனக்கு பெரிய பெருமை.காணொளி காட்சி மூலம் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் தி.மு.க, சி.பி.எம் கட்சிகளிடையே இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டும் அல்ல. அது கொள்கை கூட்டணி, லட்சிய கூட்டணி. எனவே நாங்கள் இணக்கமாகவே இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் தி.மு.க ஆட்சிக்கு தேவையான ஆலோசனைகளை, சி.பி.எம் கட்சி தலைவர்கள் அவ்வப்போது அறிக்கைகளாக கொடுக்கிறார்கள். தொலைபேசி மூலமாகவும், நேரில் வந்தும் கருத்துகளை சொல்கிறார்கள். நானும் சில விஷயங்களை அவர்களை தொடர்புகொண்டு கலந்துபேசிக்கொண்டுதான் செய்கிறேன். அதுமட்டுமல்லாமல் அவர்களின் அதிகாரபூர்வ ஏட்டில் அவ்வப்போது ஆட்சியில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காடுகிறார்கள். அதை உடனுக்குடன் சரி செய்கிறோம். எங்கள் கூட்டணி ஆரோக்கியமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது தொடரும்.தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியா பல்வேறு மொழிகள் பேசக்கூடியவர்கள் வாழும் நாடு. இங்கு ஒற்றைமொழி தேசிய மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ ஆக முடியாது. அதனால் மற்ற மொழிகள் காலப்போக்கில் அழிந்துவிடும். போராடிபெற்ற சுதந்திரத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு வழங்கிய உரிமைகள் அனைத்தையும் பறிப்பது என்பது மிக மிக தவறானது. அது இந்திய விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செய்யக்கூடிய துரோகம்" என்றார். “ஸ்டாலின் ஐயாதான் எங்களுக்கு நல்லது பண்ணணும்!” - சென்னை மையத்தில் ஓர் இருண்ட ‘கிராமம்’!
http://dlvr.it/SVnsNk

Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...