Skip to main content

வீட்டு உரிமையாளர் கொலை; 91 முறை கத்திக்குத்து; காவல்துறைக்கே டஃப் கொடுத்த கொலையாளி - நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பனசங்கரி பகுதியில் வசிப்பவர் ஜெய்கிஷன்(29). இவரின் வீட்டு உரிமையாளர் யசோதாம்மா இறந்து கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதில் யசோதம்மா, 91 முறை கத்தியால் குத்தப்பட்டதால் இறந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து காவல்துறை தீவிரவிசாரனை மேற்கொண்டதில் யசோதம்மா வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த ஜெய்கிஷன் தான் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

விசாரணை

அவரை விசாரித்தது தொடர்பாக காவல்துறை அதிகாரி பி.கிருஷ்ணகாத் கூறுகையில், "கொலை நடந்த சம்பவ இடத்தில் எந்த தடயங்களும் கிடைக்க வில்லை. அதனால் கிட்டத்தட்ட 100 பேருக்கும் மேல் விசாரணையை விரிவுபடுத்தினோம். கொலை தொடர்பான புகாரளிக்கும் போதும், யசோதம்மா-வின் இறுதிச் சடங்கிலும் ஜெய்கிஷன்உடனிருந்தார். அதனால் அவர்மீது எந்த சந்தேகமும் வரவில்லை.

அதன் பின்பே அவர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டோம். அதில், விற்பனை அதிகாரியாக பணிபுரியும் ஜெய்கிஷன் பங்குச்சந்தையில் ரூ.12 லட்சத்தை இழந்திருக்கிறார். மேலும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் ரூ.12 லட்சம் கடன் பெற்றிருக்கிறார்.

கைது

யசோதாம்மாவும் ஜெய்கிஷனுக்கு 50 ஆயிரம் கடன் கொடுத்திருக்கிறார். அதனை யசோதம்மா மீண்டும் கேட்டபோது இருவருக்கும் சண்டை நடந்ததாகத் தெரிகிறது. இந்த ஒட்டுமொத்த கடனையும் திருப்பி கொடுக்க யசோதாம்மாவின் நகைகளைத் திருட ஜெய்கிஷன் முடிவு செய்து அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், யசோதம்மாவின் நகைகளைத் திருடி அடகு வைத்ததை கண்டுபிடித்த பின்பே அவர்தான் கொலையாளி என்பது உறுதியானது. தற்போது அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...