Skip to main content

வீட்டு உரிமையாளர் கொலை; 91 முறை கத்திக்குத்து; காவல்துறைக்கே டஃப் கொடுத்த கொலையாளி - நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பனசங்கரி பகுதியில் வசிப்பவர் ஜெய்கிஷன்(29). இவரின் வீட்டு உரிமையாளர் யசோதாம்மா இறந்து கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதில் யசோதம்மா, 91 முறை கத்தியால் குத்தப்பட்டதால் இறந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து காவல்துறை தீவிரவிசாரனை மேற்கொண்டதில் யசோதம்மா வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த ஜெய்கிஷன் தான் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

விசாரணை

அவரை விசாரித்தது தொடர்பாக காவல்துறை அதிகாரி பி.கிருஷ்ணகாத் கூறுகையில், "கொலை நடந்த சம்பவ இடத்தில் எந்த தடயங்களும் கிடைக்க வில்லை. அதனால் கிட்டத்தட்ட 100 பேருக்கும் மேல் விசாரணையை விரிவுபடுத்தினோம். கொலை தொடர்பான புகாரளிக்கும் போதும், யசோதம்மா-வின் இறுதிச் சடங்கிலும் ஜெய்கிஷன்உடனிருந்தார். அதனால் அவர்மீது எந்த சந்தேகமும் வரவில்லை.

அதன் பின்பே அவர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டோம். அதில், விற்பனை அதிகாரியாக பணிபுரியும் ஜெய்கிஷன் பங்குச்சந்தையில் ரூ.12 லட்சத்தை இழந்திருக்கிறார். மேலும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் ரூ.12 லட்சம் கடன் பெற்றிருக்கிறார்.

கைது

யசோதாம்மாவும் ஜெய்கிஷனுக்கு 50 ஆயிரம் கடன் கொடுத்திருக்கிறார். அதனை யசோதம்மா மீண்டும் கேட்டபோது இருவருக்கும் சண்டை நடந்ததாகத் தெரிகிறது. இந்த ஒட்டுமொத்த கடனையும் திருப்பி கொடுக்க யசோதாம்மாவின் நகைகளைத் திருட ஜெய்கிஷன் முடிவு செய்து அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், யசோதம்மாவின் நகைகளைத் திருடி அடகு வைத்ததை கண்டுபிடித்த பின்பே அவர்தான் கொலையாளி என்பது உறுதியானது. தற்போது அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...