Skip to main content

புதுக்கோட்டை: தேர் கவிழ்ந்து விபத்து... 9 பேர் காயம் - ஆட்சியர், எஸ்.பி நேரில் ஆய்வு

புதுக்கோட்டை அருகே திருக்கோகரணம் அருள்மிகு ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. மிகவும் பழமையான இந்த குடைவரைக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடித் திருவிழா 10 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு, கோயிலின் ஆடித் திருவிழா கடந்த 23-ம் தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, காலை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அருள்மிகு ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வரர் தேரில் எழுந்தருள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலான இங்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேரோட்ட விழா நடைபெறாத நிலையில், இன்று நடைபெற்ற விழாவைக் காணப் புதுக்கோட்டை நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.தேர் அப்போது, அங்குக் குழுமியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தபோது, எதிர்பாராத விதமாகத் தேர் முன் பக்கமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேர் கவிழ்ந்ததைச் சற்றும் எதிர்பார்க்காத பக்தர்கள் சிலர் தேரின் சக்கரத்திற்கு இடையே மாட்டிக்கொண்டனர். இதில், தேருக்கு அருகே இருந்த 10-க்கும் மேற்பட்டோரை அங்குப் பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் உதவியுடன் விழாக் குழுவினர் மீட்டனர். இதில், 5 பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்துத் தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.தேர் விபத்து சுமார் 30 அடி உயரம் கொண்ட இந்தத் தேர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, ஒருமுறை வெள்ளோட்டம் பார்க்கப்பட்டிருக்கிறது. அதன்பின்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றுப் பரவலால் தேர்த் திருவிழா தடைப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெறவிருந்த நிலையில், எதிர்பாராத விதமாகத் தேரின் சக்கரங்களை இணைக்கும் பக்கவாட்டு கம்பி நழுவி இந்த தேர் விபத்தானது ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அதோடு அதிகம் பேர், ஒரு சேர இழுத்ததும் தேர்க் கவிழ முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து திருக்கோகர்ணம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தண்டவாளத்தில் விரிசல்; வேகமாக வந்த ரயில்! - சாதுர்யமாகச் செயல்பட்ட கீமேனால் தவிர்க்கப்பட்ட விபத்து
http://dlvr.it/SVpS0S

Comments

Popular posts from this blog

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...