Skip to main content

புதுக்கோட்டை: தேர் கவிழ்ந்து விபத்து... 9 பேர் காயம் - ஆட்சியர், எஸ்.பி நேரில் ஆய்வு

புதுக்கோட்டை அருகே திருக்கோகரணம் அருள்மிகு ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. மிகவும் பழமையான இந்த குடைவரைக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடித் திருவிழா 10 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு, கோயிலின் ஆடித் திருவிழா கடந்த 23-ம் தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, காலை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அருள்மிகு ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோணேஸ்வரர் தேரில் எழுந்தருள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலான இங்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தேரோட்ட விழா நடைபெறாத நிலையில், இன்று நடைபெற்ற விழாவைக் காணப் புதுக்கோட்டை நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.தேர் அப்போது, அங்குக் குழுமியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தபோது, எதிர்பாராத விதமாகத் தேர் முன் பக்கமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேர் கவிழ்ந்ததைச் சற்றும் எதிர்பார்க்காத பக்தர்கள் சிலர் தேரின் சக்கரத்திற்கு இடையே மாட்டிக்கொண்டனர். இதில், தேருக்கு அருகே இருந்த 10-க்கும் மேற்பட்டோரை அங்குப் பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் உதவியுடன் விழாக் குழுவினர் மீட்டனர். இதில், 5 பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்துத் தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.தேர் விபத்து சுமார் 30 அடி உயரம் கொண்ட இந்தத் தேர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, ஒருமுறை வெள்ளோட்டம் பார்க்கப்பட்டிருக்கிறது. அதன்பின்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றுப் பரவலால் தேர்த் திருவிழா தடைப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெறவிருந்த நிலையில், எதிர்பாராத விதமாகத் தேரின் சக்கரங்களை இணைக்கும் பக்கவாட்டு கம்பி நழுவி இந்த தேர் விபத்தானது ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அதோடு அதிகம் பேர், ஒரு சேர இழுத்ததும் தேர்க் கவிழ முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து திருக்கோகர்ணம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தண்டவாளத்தில் விரிசல்; வேகமாக வந்த ரயில்! - சாதுர்யமாகச் செயல்பட்ட கீமேனால் தவிர்க்கப்பட்ட விபத்து
http://dlvr.it/SVpS0S

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...