Skip to main content

8 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு வளர்ச்சி - மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து பிரதமர் பெருமிதம்!

குஜராத்தில் உள்ள காந்தி நகரில், ஜூலை 21 அன்று, நாட்டின் முதலாவது கோல்ட் புல்லியன் எக்சேஞ்சை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

நமது நாடு தங்கத்தைப் பயன்படுத்துவதில் உலகில் முதன்மையான நாடாக உள்ளது. குண்டுமணி அளவாவது தங்கத்தைச் சேர்ப்பதற்கு இந்தியர்கள் ஒவ்வொருவரும் விரும்புவதே தங்க பயன்பாடு அதிகமாக இருப்பதற்கு காரணமாகும். என்றாலும், தங்கத்தை நேரடியாக பங்குச் சந்தை போன்று வாங்கும் வசதி இல்லை. இந்தக் குறையைப் போக்கும் விதத்தில் குஜராத்தில் அமைந்திருக்கும் கிஃப்ட் சிட்டியில் நமது நாட்டின் முதல் தங்கத்துக்கான புல்லியன் எக்ஸ்சேஞ்சை பிரதமர் தொடங்கி வைத்தார்.

Mutual fund (Representational Image)

8 ஆண்டுகளில் 250 சதவிகித வளர்ச்சி

அப்போது அங்கு குழுமியிருந்த முதலீட்டாளர்களிடம் நமது பிரதமர் உரையாடினார். மியூச்சுவல் ஃபண்ட் சந்தை நமது நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் 250 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாக, அப்போது குறிப்பிட்டுள்ளார். 2014-ம் ஆண்டு 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக முதலீட்டை நிர்வகித்து வந்த நமது மியூச்சுவல் ஃபண்ட் சந்தை, தற்போதைய ஜூன் 22-ம் ஆண்டு நிலவரப்படி 35 லட்சம் கோடி ரூபாயை நிர்வகித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளது போல மியூச்சுவல் ஃபண்டு சந்தை, குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை குறுகிய காலத்தில் எட்டியுள்ளது. மக்களின் முதலீட்டு அணுகுமுறை மாறி வருவதை இது தெளிவாகக் காட்டுகிறது. இந்தியர்களிடையே சேமிக்கும் பழக்கம் எப்போதும் அதிகமாக உள்ளது.

ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம் என்று தமது தாத்தா காலத்தில் சேமித்து வந்த நம் மக்கள், ஆரம்ப காலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டினர்.

Mutual fund (Representational Image

ஆனால் பங்கு சந்தைகளில் கிடைக்கும் லாபம் மற்றும் வங்கி டெபாசிட்களில் கிடைக்கும் குறைந்த வட்டி போன்ற காரணங்களால் மக்களின் முதலீட்டு முறை மாறி வருகிறது.

எஸ்.ஐ.பி முறை

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளது. பங்குச் சந்தை கணிசமாகக் குறைந்த கடந்த ஒரு வருட காலத்திலும், சந்தையை தாங்கிப் பிடித்தது சிறு முதலீட்டாளர்கள் என்றே கூறலாம்.

PM Modi

தற்போதைய நிலவரப்படி மிகக் குறைவான சதவிகித மக்களே பங்கு சந்தைகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். வரும் காலத்தில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்ற காரணத்தால்தான் பல வெளிநாட்டு நிறுவனங்களும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நமது நாட்டில் தொடர்ந்து கால் பதித்து வருகின்றனர்.

நீண்ட கால நோக்கில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் உரை இருக்கிறது.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...