Skip to main content

8 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு வளர்ச்சி - மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து பிரதமர் பெருமிதம்!

குஜராத்தில் உள்ள காந்தி நகரில், ஜூலை 21 அன்று, நாட்டின் முதலாவது கோல்ட் புல்லியன் எக்சேஞ்சை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

நமது நாடு தங்கத்தைப் பயன்படுத்துவதில் உலகில் முதன்மையான நாடாக உள்ளது. குண்டுமணி அளவாவது தங்கத்தைச் சேர்ப்பதற்கு இந்தியர்கள் ஒவ்வொருவரும் விரும்புவதே தங்க பயன்பாடு அதிகமாக இருப்பதற்கு காரணமாகும். என்றாலும், தங்கத்தை நேரடியாக பங்குச் சந்தை போன்று வாங்கும் வசதி இல்லை. இந்தக் குறையைப் போக்கும் விதத்தில் குஜராத்தில் அமைந்திருக்கும் கிஃப்ட் சிட்டியில் நமது நாட்டின் முதல் தங்கத்துக்கான புல்லியன் எக்ஸ்சேஞ்சை பிரதமர் தொடங்கி வைத்தார்.

Mutual fund (Representational Image)

8 ஆண்டுகளில் 250 சதவிகித வளர்ச்சி

அப்போது அங்கு குழுமியிருந்த முதலீட்டாளர்களிடம் நமது பிரதமர் உரையாடினார். மியூச்சுவல் ஃபண்ட் சந்தை நமது நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் 250 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாக, அப்போது குறிப்பிட்டுள்ளார். 2014-ம் ஆண்டு 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக முதலீட்டை நிர்வகித்து வந்த நமது மியூச்சுவல் ஃபண்ட் சந்தை, தற்போதைய ஜூன் 22-ம் ஆண்டு நிலவரப்படி 35 லட்சம் கோடி ரூபாயை நிர்வகித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளது போல மியூச்சுவல் ஃபண்டு சந்தை, குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை குறுகிய காலத்தில் எட்டியுள்ளது. மக்களின் முதலீட்டு அணுகுமுறை மாறி வருவதை இது தெளிவாகக் காட்டுகிறது. இந்தியர்களிடையே சேமிக்கும் பழக்கம் எப்போதும் அதிகமாக உள்ளது.

ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம் என்று தமது தாத்தா காலத்தில் சேமித்து வந்த நம் மக்கள், ஆரம்ப காலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டினர்.

Mutual fund (Representational Image

ஆனால் பங்கு சந்தைகளில் கிடைக்கும் லாபம் மற்றும் வங்கி டெபாசிட்களில் கிடைக்கும் குறைந்த வட்டி போன்ற காரணங்களால் மக்களின் முதலீட்டு முறை மாறி வருகிறது.

எஸ்.ஐ.பி முறை

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளது. பங்குச் சந்தை கணிசமாகக் குறைந்த கடந்த ஒரு வருட காலத்திலும், சந்தையை தாங்கிப் பிடித்தது சிறு முதலீட்டாளர்கள் என்றே கூறலாம்.

PM Modi

தற்போதைய நிலவரப்படி மிகக் குறைவான சதவிகித மக்களே பங்கு சந்தைகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். வரும் காலத்தில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்ற காரணத்தால்தான் பல வெளிநாட்டு நிறுவனங்களும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நமது நாட்டில் தொடர்ந்து கால் பதித்து வருகின்றனர்.

நீண்ட கால நோக்கில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் உரை இருக்கிறது.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...