Skip to main content

50 கோடி பணம்: ``எனது வீடு தான்... ஆனால் எனக்கே அனுமதி இல்லை” - மே.வங்க அமைச்சரின் உதவியாளர்

மேற்குவங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோரை அமலாக்கத்துறை கைதுசெய்து விசாரித்து வருகிறது. இவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு முந்தைய நாள், அர்பிதா முகர்ஜியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 21 கோடி ரூபாய் ரொக்கமாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், `பார்த்தா சாட்டர்ஜி தனது வீட்டை ஒரு மினி வங்கியாகப் பயன்படுத்தினார்’ என அர்பிதா முகர்ஜி தெரிவித்திருந்தார்.அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது மேலும், கடந்த புதன்கிழமையன்று அர்பிதா முகர்ஜியின் மற்றொரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 29 கோடி ரூபாயை மீட்டனர். இந்தநிலையில், பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு செல்ல தனக்கே அனுமதியில்லை இல்லையென்று அர்பிதா முகர்ஜி கூறியதாக அமலாக்கத்துறை அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அந்த அதிகாரி, ``அர்பிதா முகர்ஜி, பணம் பார்த்தா சாட்டர்ஜிக்கு சொந்தமானது என்றும், அவரும் அவரின் ஆட்களும் தனது வீடுகளுக்கு வந்து பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறினார். மேலும், பணம் இருப்பது தனக்கு தெரியும் என்றும், ஆனால் அந்த அறைக்கு செல்ல தனக்கு அனுமதியில்லாததால் ஆங்கு எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியாது என்றும் அர்பிதா முகர்ஜி கூறினார். நடிகை அர்பிதா முகர்ஜி மேலும் சினார் பார்க்கில் அர்பிதா முகர்ஜி-க்கு சொந்தமான மற்றொரு வீட்டில் ஏஜென்சி நேற்று சோதனை நடத்தியது. அதிகாரிகள் அங்கு எதாவது மீட்டார்களா என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. அவரின் மற்ற வீடுகளைப் போலவே இங்கும் பணம் இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்று கூறினார். மேற்குவங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தால் திரிணாமுல் கட்சி, பார்த்தா சாட்டர்ஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதோடு, கட்சியிலிருந்து இடைநீக்கமும் செய்திருக்கிறது.மே.வங்கம்: அமைச்சர் குறித்த கருத்து... திரிணாமுல் பொதுச்செயலாளர் ட்வீட்டால் கட்சியில் சலசலப்பு!
http://dlvr.it/SVhbKz

Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...