Skip to main content

விருதுநகர்: ரியல் எஸ்டேட் அதிபரிடம் செயின் பறித்த தீயணைப்பு வீரர் உள்பட 3 பேர் கைது!

விருதுநகர் லட்சுமிநகரை சேர்ந்தவர் கந்தசாமி(72), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று முந்தினம் பிற்பகலில் பஜாருக்கு சென்றுவிட்டு மாலையில் தனது டூவீலரில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வெள்ளைநிறக் காரில் மர்மகும்பல் ஒன்று அவரை பின்தொடர்ந்து வந்துள்ளது. கந்தசாமி, வீட்டு வாசலில் தனது டூவீலரை நிறுத்தியவுடன் அவருக்கு பின்னால் காரில் வந்த மர்மகும்பலை சேர்ந்த மூன்றுபேர் கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் பின்பக்க கதவு வழியே தாவிக்குதித்து, அவரின் கழுத்தில் கிடந்த 16 பவுன் தங்கச்செயினை பறித்துச்சென்றனர்.

கைது

இதுகுறித்து ஊரக காவல் நிலையத்தில் கந்தசாமி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, வழிப்பறி சம்பவம் நடைபெற்ற லட்சுமிநகர் பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், காரிலிருந்து மங்கிக்குல்லா அணிந்தபடி 3 பேர் இறங்கி வருவதும், அதில் இரண்டுபேர் கந்தசாமியை பிடிக்க மற்றொருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 22 பவுன் செயினை பறித்துள்ளார். அப்போது கந்தசாமிக்கும் - கொள்ளையர்களுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் தங்கச்செயினிலிருந்து 6 பவுன் மதிப்புள்ள கொக்கியும், டாலரும் தனியே அறுந்து விழவும், கையில் சிக்கிக்கொண்ட செயினை மட்டும் பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் மூவரும் காரில் தப்பிச்சென்றது கேமரா காட்சிகளில் பதிவாகியிருந்தது.

மேலும், போலீஸிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக காரின் நம்பர் பிளேட்டை கொள்ளையர்கள் தனியார் கம்பெனி விளம்பர ஸ்டிக்கர் கொண்டு மறைத்திருப்பது தெரியவந்தது. முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற செயின் 16 பவுன் எடை கொண்டது இதன்மதிப்பு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை

தொடர்ந்து, வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படையினர் நடத்திய விசாரணையில், வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட கார், விருதுநகரை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் கம்பெனிக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து டிராவல்ஸ் உரிமையாளரான ராஜ்குமார் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கொடுத்த தகவலின் படி, விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு படை வீரராக பணியாற்றி வரும் திருப்பதி தான் வழிப்பறிக்கு பயன்படுத்திய காரை அன்றையதினம் வாடகைக்குப் பெற்றுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பதியை பிடித்து விசாரித்ததில், அவர் மற்றும் அவரின் கூட்டாளிகள் கிருஷ்ணமூர்த்தி, அழகர் ஆகியோர் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதும், மேலும் இதில் விருதுநகரை சேர்ந்த கருப்பு, சதீஷ், மகாலட்சுமி, ஈஸ்வரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வழிப்பறியில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் பிடித்து வந்த போலீஸார், அதில் திருப்பதி, கிருஷ்ணமூர்த்தி, அழகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய கார் மற்றும் கந்தசாமியிடமிருந்து பறித்துச்சென்ற 16 பவுன் தங்கச் செயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தோடு தொடர்புடைய மற்றவர்களிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி

கைதுசெய்யப்பட்டவர்களில் தீயணைப்பு வீரர் திருப்பதி, இதுபோன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரியிடம் பேசினோம், "தீயணைப்பு வீரர் திருப்பதி, சொந்தமாக தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் வைத்து கடைகள் மற்றும் வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் தொழில் நடத்திவருகிறார். இவர்மீது துறைரீதியாக ஏற்கனவே மோசடி புகார்கள் உள்ளது. சமீபத்தில், தீயணைப்பு நிலையத்தில் மருத்துவ விடுப்பில் சென்றிருந்த உயரதிகாரியின் கையெழுத்து சீலை அவரின் ஒப்புதல் இல்லாமல் அவரின் அறையிலிருந்து திருடி மோசடிக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில், துறைரீதியான விசாரணையும் அவர்மீது நடத்தப்பட்டது. இந்தநிலையில் திருப்பதி தனது கூட்டாளிகளுடன், ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது சி.சி.டி.வி.கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார்.


Comments

Popular posts from this blog

Doctor Vikatan: புரோட்டீன் குறைபாடு இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 44. பல வருடங்களாக எடைக்குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனாலும் எடை குறைந்த பாடாக இல்லை. என் நண்பன் `வே புரோட்டீன்' எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறான். எனக்கு அதை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது. தவிர அதன் விலையும் பயமுறுத்துகிறது. புரதச்சத்துக் குறைபாடு இருந்தால் உடல் எடை குறையாது என்பது உண்மையா..? வே புரோட்டீனுக்கு மாற்று ஏதேனும் உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன் Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா? புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கிப் பயன்படுத்தவும் முடிவதில்லை.  உணவில் புரதச்சத்துக் குறைபாட...

Sri Lanka : இலங்கை அதிபர் தேர்தல்... இந்தியா, சீனா ஆதரவு யாருக்கு?! | President Election

http://dlvr.it/TDPwf3

உலகின் அழகான, ஆபத்தான சாலை... 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான காரகோரம் நெடுஞ்சாலை தெரியுமா?

நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர்களால் மட்டுமே செல்லக்கூடிய ஆபத்தான சாலைகளில் பயணம் செய்த அனுபவம், நம் அனைவருக்கும் இருக்கலாம். உயரமான இடங்களில் குறுகலான வளைவுகளில் செல்லும் சாலைகள் உலகம் முழுவதும் இருந்தாலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும் அளவுக்கு, சில சாலைகள் உள்ளன.. அவை மிக ஆபத்தானவை. 'உலகின் மிகவும் ஆபத்தான சாலை' என்ற பட்டியலில் பல சாலைகள் இருக்கின்றன. அதில், ஆய்வு நிபுணர்களின் கூற்றுப்படி, சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைக்கும்,1,300 கிமீ நீளமுள்ள காரகோரம் NH-35 நெடுஞ்சாலைதான் மிக ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இந்த சாலை, பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கிறது.காரகோரம் NH-35 நெடுஞ்சாலை இந்த நெடுஞ்சாலை மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருந்தாலும், 15,466 அடி உயரத்தில் உள்ள காரகோரம் மலைத்தொடர் வழியாகச் செல்லும் உலகின் மிக உயரமான மற்றும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும். 1978 ஆம் ஆண்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்...