Doctor Vikatan: நான் இப்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு கர்ப்பமானதுமே சுகர் வந்துவிட்டது. இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு வருகிறேன. இந்த வகை நீரிழிவு, பிரசவத்துக்குப் பிறகு தானாகச சரியாகிவிடும் என்கிறார்கள். அது உண்மையா, குழந்தை பிறந்தால் நான் தாய்ப்பால் கொடுக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் நீரிழிவு உள்ள அம்மாக்கள் குழந்தைக்கு தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். கர்ப்பகால நீரிழிவு என்பது பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகு தானாக சரியாகிவிடும். ஆனால், அது பிற்காலத்தில் நீரிழிவாக மாறாமல் இருக்க, இப்போதிலிருந்தே கவனமாக இருக்கவும். நீரிழிவு பாதிப்பு என்பது தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒருபோதும் தடையாக அமைவதில்லை. தாய்க்கு நீரிழிவு இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கு அந்த பாதிப்பு இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. நீரிழிவு உள்ள அம்மாக்களின் ரத்தச் சக்கரை அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ரத்த சர்க்கரை அளவ...