Skip to main content

Doctor Vikatan: இதய நோயாளிகள் வாக்கிங் போகலாமா, எந்த வேகத்தில் நடக்க வேண்டும்?

Doctor Vikatan: என் மாமனாருக்கு சமீபத்தில் ஹார்ட் சர்ஜரி நடந்தது. இப்போது அவர் நலமாக இருக்கிறார். ஆபரேஷனுக்கு முன்பு அவருக்கு வாக்கிங் செல்லும் பழக்கம் இருந்தது. இப்போது மீண்டும் வாக்கிங் போக வேண்டும் என்கிறார்.  அதை அனுமதிக்கலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்
இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

இதய நோயாளிகள் கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்யலாம். ஆனால், மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே செய்ய வேண்டும். உண்மையில், அனைத்து இதய நோயாளிகளையும்  மருத்துவர்கள் நடக்கச் சொல்கிறோம். ஒவ்வொரு நோயாளிக்கும் எவ்வளவு தூரம் நடக்கலாம், எந்த வேகத்தில் நடக்கலாம், எப்படி நடக்க வேண்டும் என்று  வழிகாட்டுகிறோம்.

மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்ட நோயாளிகளைக் கூட, ஒரு நாள் படுக்கை ஓய்வுக்குப் பிறகு, அடுத்த நாள் படுக்கையில் உட்கார வைத்து, 48 மணி நேரத்திற்குப் பிறகு நாற்காலியில் உட்கார வைத்து பிறகு நடக்க வைக்கிறோம்.  

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் கூட, 24 மணி நேரத்திற்குப் பிறகு, வெளியே வந்த பின்னர், அடுத்த 48 மணி நேரத்தில் நாற்காலியில் உட்கார வைக்கப்படுவார்கள். 72 மணி நேரத்தில் அவர்களை நடக்க வைக்கிறோம்.


எனவே, நடப்பது மிக மிக முக்கியம். இது 'கார்டியாக் ரீஹேபிலிடேஷன்' (Cardiac Rehabilitation) என்ற முறையின் கீழ், ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது நிலைக்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட (Personalized) சிகிச்சையாக அளிக்கப்படுகிறது.

ஏனெனில், ஒவ்வொரு நோயாளியும் ஒவ்வொரு விதமானவர்கள். சிலருக்கு நுரையீரல் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு இதயம் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு தசைகள் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு கால் வலி காரணமாக நடக்க முடியாமல் இருக்கலாம். இந்தக் காரணங்களுக்காக, அவர்களுக்கேற்றபடி நாங்கள் நடைப்பயிற்சியைப் பரிந்துரைக்கிறோம்.

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளுக்கு ஏற்றபடி பரிந்துரை.
பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகளுக்கு ஏற்றபடி பரிந்துரை.

நடைப்பயிற்சி இதயத்தின் திறனை மேம்படுத்தி, ரத்த ஓட்டம் மற்றும் சுவாசத் திறனை உயர்த்துகிறது. நோயாளியின் இதய நிலை, ஸ்டென்ட் வைத்த பிறகோ அல்லது பைபாஸ் செய்த பிறகோ, அல்லது நாள்பட்ட நிலையான இதய நோயில் (Stable Angina) இருந்தால், மருத்துவர் அறிவுறுத்தியபடி நடக்கலாம்.

பொதுவாக, காலை மற்றும் மாலை என இரு வேளையும் நடக்கச் சொல்வோம். ஒரு வேளை மட்டுமே நடக்க முடியுமானால், காலையில் நடப்பது நல்லது.

ஆரம்பத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் நடக்க வேண்டும். குறைந்தபட்சம் வாரத்திற்கு 5 நாள்கள் நடக்க வேண்டும். இதனை படிப்படியாக  15, 20, 25, 30 நிமிடங்கள் என அதிகரிக்கலாம். தொடர்ந்து 30 நிமிடங்கள் நடந்த பிறகு, 5 அல்லது 10 நிமிடங்கள் ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் 30 நிமிடங்கள் நடக்கலாம்.

நடக்கும்போது படபடப்பு (Palpitation) அல்லது மூச்சு வாங்குதல் போன்ற சிரமங்கள் ஏற்பட்டால், 10 முதல் 20 நிமிடங்கள் நடந்துவிட்டு, 5 நிமிடங்கள் உட்கார்ந்துவிட்டு, மீண்டும் 10 முதல் 20 நிமிடங்கள் நடக்கலாம். (இது ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது நிலையைப் பொறுத்து அறிவுரையாக வழங்கப்படும்).

ஒரு மணி நேரம் நடப்பவர்கள் கூட, இடையில் 5 நிமிடங்கள் உட்கார்ந்து, மூச்சுப் பயிற்சி, கை மற்றும் தோள்பட்டைகளுக்கான பயிற்சிகள் செய்துவிட்டு மீண்டும் நடக்கலாம்.

மிதமான வேகத்தில் நடப்பது நல்லது. அதற்காக, மிக மெதுவாக நடந்தால் பலன் இல்லை. மிக வேகமாக நடப்பதும் அவசியம் இல்லை. உங்களால் பேசிக்கொண்டே நடக்க முடியும் என்பதே மிதமான வேகம் என அர்த்தம். நடக்கும்போது மூச்சு வாங்கக்கூடாது. மூச்சு விடுவதில் சிரமம் இருக்கக்கூடாது. இதுவே சரியான வேகம்.  

உங்களால் பேசிக்கொண்டே நடக்க முடியும் என்பதே மிதமான வேகம் என அர்த்தம்.

அதிகமான வேகத்தில் சென்றால் இதயத் துடிப்பு அதிகமாகி, பாதிப்பு வர வாய்ப்புள்ளது. சாதாரணமாக இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 70 முதல் 80 வரை இருக்கும். நீங்கள் நடக்கும்போது அது அதிகபட்சமாக 120 முதல் 140 வரை போகலாம். இதற்கு மேலும் போகக்கூடாது. அதேபோல், இதற்கு குறைவாக இருந்தாலும் பலன் இல்லை.

நடைப்பயிற்சியைத் தொடங்கும்போது, மூன்று நிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆரம்பத்தில் 5 நிமிடங்களுக்கு மிதமான வேகத்தில் தொடங்கி, படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும்.  நிறுத்தும்போது, சடாரென நிறுத்தக்கூடாது. அதிக வேகத்தில் இருந்து மெதுவாக வேகத்தைக் குறைத்து, 5 நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக நிறுத்த வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...